நான் இநன்யா !
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )
’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )
’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)
நன்றி ! இநன்யா நமோ நம !
நாம் தூங்கும் பொழுது நம் மூச்சுக் காற்று நின்றால் நம் கதி என்னவாகும் ? நாம் தூங்கும் போது நம் மூச்சுக் காற்றை தூங்காமல் இயக்குபவர் கடவுள் ! நாத்திகன் என்று சொல்லித் திரியும் யாரேனும் இருந்தால் இன்றே சொல்லிவிடுங்கள் மூச்சுக் காற்று கடவுள் உடையது என்று ! நாம் தூங்கும் பொழுது கூட நம்மை பாதுகாப்பாக கண்காணிப்பவர் கடவுள். நாம் கேட்காமலேயே கடல் நீரை காற்றைக் கொண்டு மேல் எழுப்பி அதை மேகமாய் மாற்றி பின் இன்ப மழையாய் தருபவர் கடவுள் ! மழை இல்லையென்றால் நம் நிலைமை என்னவாகும் ? எல்லாவற்றையும் நாம் கேட்காமலேயே கொடுக்கும் கடவுள், பின் ஏன் நாம் கேட்டும் கொடுக்கவில்லை என என்றாவது யோசித்திருக்கிறோமா ? இப்பொழுதாவது உணருங்கள் ! நமக்கு கடவுளிடம் கேட்கத் தெரியவில்லை ! “இநன்யா நமோ நம” என்ற நாமத்தை சொன்னாலே போதும் ! ஆன்மா ஆனந்த கூத்தாடும் ! புனித காற்றை அறிவியலின் பெயரால் மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றோம் ! காற்று ஆவேசமாய் கோபம் கொண்டு நம்மையும் நம் அறிவியலை அழித்துக் கொண்டிருக்கின்றது ! புனித தென்றல் காற்றை கரும்புகையாக்கி தெருவெங்கும் தீக்கோலமாய் பட்டாசு வெடித்து கொண்டாடுவது எதற்காக ? நமக்கு கனிகள் தரும் மரங்கள் அழுகின்றது ! பறவைகள் தன் கூட்டைவிட்டு தூரம் சென்று கதறுகின்றன ! பூக்கள் வாடுகின்றன ! நாய்கள், பசுக்கள் அலறியடித்து ஓடுகின்றன ! ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் ஞானமிழந்து சிரித்துக் கொண்டாடுகின்றான் பண்டிகையாக ! மூச்சுக் காற்றை யோகா என்ற பெயரில் இழுத்து விடுவது, தியானம் என்ற பெயரில் அடக்குவது எதற்கும் உதவாது ! கடவுள் சொன்னது போல் வியர்வை சிந்தி உழைத்து உங்களின் கடமையை மட்டுமே செய்யுங்கள் ! தியானம், யோகாவில் கிடைக்காத நிம்மதி ஆயிரம் மடங்கு சத்யமாக கிடைக்கும் ! கர்ம வினையால் சிலரை பார்வையற்றவராக, கேட்கும் திறனற்றவராக, பேசும் திறனற்றவராக படைக்கின்றார் கடவுள் ! யாரையேனும் சுவாசிக்கும் திறனற்றவராக படைத்துள்ளாரா ? எதற்கென்று யோசியுங்கள் ! காற்றின் சூட்சுமம் புரியும் !
நான் இநன்யா !
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )
’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)
’இ’ என்றால் ஒலி ! ( ஆன்மா )
’ந’ என்றால் காற்று ! ( உழைப்பு )
’ன்’ என்றால் நீர் ! ( உயர்வு )
’யா’ என்றால் மலரின் ஞானம் ! (வசந்த காலம்)
நன்றி !
இநன்யா நமோ நம !
No comments:
Post a Comment