அப்பா | " யாகவா உரையாடல் " _ குருடன் .
குருடன் ,,,, அப்பா நீங்கள் திட்டுகின்றீர்கள் .என்று உங்களிடம் பேச பயப்படுகின்றார்கள்.
டாய், நான் உன்னை திட்டவில்லை'உன் உடலை தான் திட்டுகிறேன்.
பார்த்துப் போ ,,, பள்ளம் ஒன்று உள்ளது என்று நான் உன்னை எச்சரிக்கின்றேன்.
நீ இரு கண் இருந்தும் குருடனைப் போல் அலைகின்றாய். பாழும் கிணற்றில் குரு டன் ஒருவன் விழுந்து விடுகின்றான்.
குருடன் நினைக்கின்றான். தனக்கு உதவி செய்ய யாருமே இல்லை என்று.. அச்சமயம் நான் பட்சிகளை ஏவி விடுகின்றேன். அவை அக் குருடன் நிலைக் கண்டு குரல் கொடுக்க, குருடனோ தனக்கு துணையாக இங்கு ஒரு பட்சி இருக்கின்றது என்பதை அறிகின்றான்.
பின் அங்கு உள்ள மரத்தின் வேரை பிடித்து மேலே வந்து விடுகின்றான்.
நீ இவ் யுகம் எப்படி உள்ளது என்பதை இரு கண் தெரியாதவனிடம் போய் கேட்டால் அவன் தெளிவாக கூறுவான்.
இரு கண் தெரியாதவன் எதை வணங்குவான்.
இரு கண் தெரியாதவன் எதை வணங்குவான்.
இரு கண் இருந்தும் நீ எதை வணங்குகின்றாய். உன் கண்ணுக்கு யாவும் தெரியும்.
உன் உயிருக்கு மனம் தான் தெரியும். என்றால் நீ உன்னை சிந்தி .
இரு கண் தெரியாத குருடனை சிந்தித்துப் பார் .
இந்த யுகம் சப்த யுகமாக உள்ளது என்பதனை குருடன் தெளிவாக உணர்வான்.
குருடன் ஒளி சப்தத்தை அறியாதவன். அது அவனது முற்பிறவி கர்மப்பாவம்.
நீயோ இரு கண் ஒளி உனக்குள் தான் இருந்தும், உனக்குள் ஒளி இருப்பதால் தான் கற்சிலையை காண்கின்றோம் என்பதனை மறந்து,
கற்சிலையை கடவுள் என்கிறாய். அப்படி என்றால் உனக்குள் ஒளியாக இருப்பது யார்.
என்று சற்றேனும் சிந்தித்தாயா?
நீ உருவமற்றதை சிந்தித்தால் உள்ளுணர்வை அறிவாய் .இரு கண் தெரியாதவன் பாழும் கிணற்றில் வீழ்ந்தது போல் நீயும் இவ்வுயகத்தில் அவையில் செய்த பிழைக்காக வந்து வீழ்ந்து கிடக்கின்றாய் .
இங்கு உனக்கு உதவி செய்யவே யாகவா = முனிவர்கள், மாயைகள் சித்தர்களுக்கு ஒான சப்தத்தையும் , வேத சப்தத்தையும் கொடுத்து ஒலிக்க செய்கின்றார் .
நீ இவ்வுயகத்தை விட்டு யாகத்திற்கு கரை சேர பிரம்மஸ்தலம் என்கின்ற ஆணிவேரையும் கொடுத்துள்ளார்.
இரு கண் தெரியாதவன் சப்தத்தை வணங்குகின்றான்.
இரு கண் இருந்தும் ஏன் நீ ஒளியை ஒலியை உணர மறுக்கிறாய்.
உன்னதமான பொருள் என்பது ஒளி.
"எனக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று எண்ணி விடாதே!
எனக்கு மேல் ஒளி தான் இருக்கின்றது."
"யாகவா"
இநன்யா நமோ நம
No comments:
Post a Comment