கடவுள் யார் ???
கடவுள் காற்றுபோல ஒரு உணர்வு ,
அதற்கு வடிவமில்லை,
மனமுமில்லை,
நன்மையுமில்லை,
தீமையுமில்லை,
தூய்மையுமில்லை,
அசுத்தமுமில்லை,
பொய்யுமில்லை.
உண்மையுமில்லை,
கடைசியில் அது ஒன்றுமில்லை,
ஆனால் அது இல்லாமல் ஒரு துளியுமில்லை.
கடவுள் மிகப்பெரிய அளவில் இருப்பது அதிசயமில்லை,
கண்ணுக்கும் தெரியாத ஒரு சிரிய அணுவுக்குள்ளும் இருப்பதேஅதிசயம்.
கடவுள் கண்களை மூடிப்பார் .
கடவுள் உன் உள்ளே இருப்பதை உணர்வாய்,
கடவுள் எங்கேயில்லை,
எதிலே இல்லை,
ஏன் இந்த தடுமாற்றம்,
கடவுள் உன் எதிரிக்குள்ளும் இருப்பானே ,
நீ பகைப்பது உன் எதிரியையா,
அல்லது கடவுளையா,,,
ஆத்மாதான் உடலை வாழச் செய்கிறது,
அப்படியானால் உடல் வெறும் கருவி,,,
கருவி எப்படி கடவுளாக முடியும்,
கருவிக்குள் கடவுளை உணர்ந்தால் ஏன் மகான்களை மட்டும் வணங்க வேண்டும்,,
பிரபஞ்சமே கடவுள் அல்லவா,
பிரபஞ்சமே கடவுள் என்றால் எல்லாமும் வணங்க தக்கதே,
இந்த உண்மை புரியாமல் ஒருவரை துன்பப்படுத்தியும்,
இன்னொருவரை ஆனந்தபடுத்தியும் தொலைகிறோமே,
இந்த முட்டாள்தனமான சிந்தனை ஒழிந்தால் இந்த முழு பிரபஞ்சமே வணங்கதக்தாக ஆகிவிடுமே ;;;;;;;
.............................
மனிதனுக்கு எப்பொழுதெல்லாம் துன்பம் ஏற்படுகிறது?
மனிதன் நல்லதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
கெட்டதை நோக்கி சென்றாலும் துன்பம் அடைவான்.
துன்பம் இயற்கையானது இது புத்தனுக்கும் உண்டு.
புத்தியில்லாதவனுக்கும் உண்டு.
ஆனால் துன்பம் நிரந்தமற்றது ;
நான் யார்? என்பதை உணராமல் இருப்பதே மனிதனின் துன்பத்திற்கு எல்லாக் காரணமும்.நான் யார்?
என்பதை உணராவிடில் ஆசை என்பது என்ன என்று புரியாமல் போய்விடுகிறது.;;;;;;;;;;;
நீங்கள் கடவுளிடம் கேளுங்கள் தப்பே இல்லை எதையும் கேளுங்கள் கடவுள் கருணை வடிவம்தான் கேட்டாலும் பிரார்தனைதான் ///
கேட்கவிட்டாலும் பிரார்தனைதான் தருவார்.. கண்டிப்பாக தருவார்,,அவரிடம் அவ்வளவு அன்பு உங்கள் மீது கொண்டிருக்கிறார்.;;;;;
No comments:
Post a Comment