வீதியிலே விதாரகம் இருந்தது. விதர்ப்பணம் இல்லாது வாழ்ந்தான். இப்போது மாட வீதி கட்டி மனிதநேயம் இல்லாது வாழ்கின்றான். ஏனடா ?
யார் நண்பன் ?
எனக்கு நள்ளுநர் அன்பிற்கினிய கடவுள் மட்டுமே ! பூமியில் நண்பன் என்று எனக்கு யாருமில்லை. எனக்கு நண்பன் என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்சத்தின் தலைவன் யாகவா மட்டுமே ! உலகில் மனித தோன்றலில் நண்பன் என்பது கடைந்தெடுத்தல் போல் தான் ! உனக்கு நண்பன் உன் தாய் தந்தை தான் ! தாய், தந்தை போல, மனைவி போல நண்பன் யுகத்தில் யாருமில்லை. இவர்கள் தான் உனக்கு தலை சிறந்த நண்பர்கள் !
எங்கே ரகசியம் இருக்கிறதோ அங்கே நட்பும் இல்லை, நண்பனும் இல்லை. செயல் அனைத்தும் மறைவு என்பதாலே உன் மனைவியிடம் நீ நண்பனாக இல்லை. வரிடம் எப்போது ரகசியம் இல்லையோ அங்கே நட்பின் வேர் துளிர்க்கிறது. உன் வாழ்வு சத்திய பாதையில் பயணிக்கிறது.
நண்பன் என்பவன் உன் போலவே துன்பம், கவலை, குழப்பத்தில் இருப்பவன் தான். அவனோடு பேசினால் குழப்பம் தான் வரும். தாய், தந்தை உன் வாழ்வில் குழப்பம் தரமாட்டார்கள். ஆதலால் தாய் தந்தையை நண்பனாக்கு. உயரிய நண்பன் என்றால் உன் மனைவி தான். மனைவியிடம் உண்மையாக இரு ! பெண்கள் கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் !
உன் வாழ்வில் இனிய பயணம் தொடங்கும். உன் வாழ்வு சிறக்க உன் மனைவியிடம் ஆலோசனை கேள் ! ஏனென்றால் ஆணை விட பெண்களுக்கு ஆசை இரண்டு மடங்கு ! புத்தி ஐந்து மடங்கு ! பெண் இல்லாமல் இங்கே உயர்வு இல்லை !
பூமியில் நான் கண்ட நண்பன் நாய் மட்டுமே. அது தான் நன்றியோடு எப்போதும் இருக்க கண்டேன். நான் எதை செய்தாலும் என் அன்பிற்கினிய தந்தை யாகவா தலைவனிடம் விளம்புவது உண்டு. ஏனென்றால் என் அன்பிற்கினிய நண்பன் என் தந்தை யாகவா !
உலகில் தாய் தந்தை போல நல்ல நண்பர்கள் இருக்க முடியாது. என் தந்தை யாகவா கட்டளையை நான் மீறுவதில்லை. நான் அமைத்த சத்திய பாதையும் என் அன்பிற்கினிய தந்தை கட்டளைப்படியே ! அதனால் தான் சொல்கிறேன், நான் சத்தியத்தின் வாசல் என்று ! என் பாதையில் நீ வர ஆயத்தமானால் சத்தியத்தின் பாதை தெரியும் !
உன்னை நம்பியவரிடம் எதையும் மறைக்காதே. பொய் சொல்லாதே ! நல்ல நட்பின் அடையாளம் பொய் சொல்லாமல் இருப்பது தான் ! உன் துன்பத்தை போக்குபவன், உனக்கு வழி காட்டுபவன் சிறந்த நண்பன் !
நான் உன் ஆணந்தத்தை எதிர்பார்க்கிறேன். நீ எப்போதும் வாய்விட்டு சிரிக்க ஆசைபடுகிறேன். நான் உன் தலைசிறந்த நண்பன் தானடா ? நீ உலகை ஆள வேண்டும் என்று துடிப்பவன் நான். உன் இருளை போக்க நினைப்பவன் நான் ! உன் நண்பனை புரிந்து கொள் !
இருபது வயதில் நான் வசித்த ஊரின் பக்கத்தில் ஒரு பெரியவர். அவரின் பெயர் ராஜா பிள்ளை. வயது எழுபத்து ஐந்து. பெரும் நிலகிழார். அறிவில் சிறந்தவர். பத்திர எழுத்தர். நான் அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். உலகில் ஒரு நல்ல மனிதரை மனித நேயமிக்க தலைவனை பார்த்தேன். என்னை பற்றி தெரிந்த நல் ஆத்மா. உலகில் எந்த உயரத்தில் இருந்தாலும் தான் யார் என்று காட்டி கொள்ளாத பணிவு தான் உன்னை உயர்த்தும்.
என் செயல் அவர் நெஞ்சில் என்னை வைத்தது. மூன்று மாதம் கழித்து என்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேர்ந்தார். “நீ என் வாழ்வில் கண்ட அரிய பொக்கிஷம். நீ என்னிடம் வேலை செய்ய என் மனம் ஒப்பவில்லை. உலகில் நான் கண்ட தலை சிறந்த நண்பன் நீ. உன்னை வேலை செய்ய தூண்ட மனமில்லை என்றார்.” அது மிகைபடுத்த முடியாத சிறந்த நட்பு.
எப்போதும் நல்ல நண்பன் உன் எதிர் காலத்தை நிர்ணயிப்பவனாக இருக்க வேண்டும். பின் அந்த பணி வேண்டாமென்று சென்னை வந்துவிட்டேன். என் தந்தையை பார்ப்பதற்கு ! அதே போல் சுயதன்ராஜ் என்ற நல்ல மனிதரையும் பார்த்தேன். வயது என்பது இருக்கும். ராணுவத்தில் பணி புரிந்தவர். மதம் தாண்டி மனித நேயத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்தேன்.
உலகில் தாய், தந்தை, மனைவி, கடவுள் தலை சிறந்த நண்பர்கள் என்பதை புரிந்து கொள் ! நல்ல நண்பன் உள்ளவன் இங்கே ஜெயிப்பான் ! நான் எதிரிலி ! என் ஏற்றனை உனக்காக காத்திருக்கிறது. நல்ல நட்பின் அடையாளம் உன்னை உயர்த்தும் !
உன் உயிர் நண்பன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment