to INANYA MAHA MUNIVAR
சர்வமும், சகலமும் எனக்குள்ளே ! தயவும், கருணையும் எனக்குள்ளே ! உன் வினை அழிக்கும் சூட்சுமமும் எனக்குள்ளே !
செயல்
உன் செயல் உன்னை எங்கே அழைத்து செல்கிறது ?
உன் கடமை உன்னை எதை நோக்கி செலுத்துகிறது ?
உன் கடமை உன்னை எதை நோக்கி செலுத்துகிறது ?
யோசி ! யோசிக்கும் திறன் இருந்தால் மட்டுமே உன்னை உணர முடியும் ! பறவைகள், மிருகங்களுக்கு யோசிக்கும் திறன் இல்லை. நீ தான் பாவம் செய்து யுகம் வந்தாய். கடவுளின் பொம்மையடா நீ ! காலம் உன்னை எங்கே கூட்டி செல்கிறது என்று சிந்தி ! நீ காலத்தின் பின்னால் செல்கின்றாய். உன் பின்னே காலம் வரவில்லை.
நீ எங்கே பயனிக்கின்றாய் ? எதை நோக்கி ஓடுகின்றாய் ? உணர் !
பறவைகள் பல ஆயிரம் மைல் கடந்தும் தன் குடியிருப்பை மறப்பதில்லை. திரும்பி வந்துவிடுகிறது. ஒரு காட்டில் உன்னைவிட்டு சென்றால் நீ இருக்கும் இடம் வரமுடியாமல் தவிக்கிறாய். ஆசை, கோபத்தை வைத்து கொண்டு உன்னை யாரென்று தெரியாமல் அலைகின்றாய்.
படைப்பில் நீ வினோதம் ! ஆனால் முடிவில் எல்லாம் கரமாலம் தான் ! நான் விழித்து கொண்டேன். என்னை அறிந்தேன் ! நீ தூங்கி போகின்றாய். உன்னை அறியாமல் தவிக்கின்றாய். உன்னை உருவாக்கியவன் உன்னுள்ளே ! அவனாலே உன்னை உணர வைக்க முடியும்.
தலைக்கு மேல் கை வைத்து வணங்கி தலை சாய்ந்து போகின்றான். முகத்திற்கு நேர் கை வைத்து வணங்கி முடமாகி போகின்றான். உயிரில்லா, மயிரில்லா சிலைக்கு இருக்கும் வலிமை கூட இந்த மதி கெட்ட மனிதற்கு இல்லையே ?
உபதேசங்களையும், வசனங்களையும் வேதம் என்று சொல்லி வீனாய் புலம்புகின்ற மானிடர்களே இங்கே அதிகம். வேதம் கையில் இருந்தால் காந்தம் போல் ஒட்டும் ! இங்கே செயல் ஆனந்த நிலை கடவுளின் பாதம் மட்டுமே ! அவன் பேரன்பு தான் செயல் ! சொர்க்கம் ! பேரின்பம் !
துளசி, வில்வம், அருகு, வன்னி, நிலவேம்பு இலையில் மகத்துவம் மலை போல் உண்டு ! இதை பஞ்ச பத்திரம் என்று சொல்வதுண்டு. உன் உடல் செயலுக்கு செப்பு பாத்திரத்தில் இந்த புணித இலை போட்டு அருந்து ! உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் சம நிலைக்கு வரும். உலகில் எத்தனையோ அரிய பொக்கிஷங்கள் உள்ளன. இவை ஆள்பவனின் கருணையை ! ஆனால் மனிதன் எதையோ தேடுன்றான்.
பூமியில் காற்றும், நீரும் சேர்ந்த சூட்சும திரவத்திற்கு விண்நீர் என்று பெயர் ! இதில் உள்ள காற்றையும், நீரையும் பிரித்து பக்குவப்படுத்தி, ஐந்து முறை சுத்தப்படுத்தி அதன் பின்னே கிடைக்கும் (வேத மூல செந்தூரம்) புணிதம் உன்னை காற்றில் பறக்க வைக்கும் ! இந்த அறிவுடம் உன் உடலில் சிறிது ஒட்டி இருந்தாலும் உன் இலக்கை அடைவாய் ! இது உன்னை செயல்பட வைக்கும் ! எதை எதையோ தேடுகின்ற மானிடா, வாடுகின்ற மானிடா இதை அறிந்து செயல்படடா !
உன் செயல் கடவுள் பக்கம் என்பதை அறிவாய் ! உன் செயல் முடிவில் கல்லறை போகாமல் பார்த்து கொள் ! உன் செயலை பூமியில் விட்டு செல் ! யுக யுகமாய் உன் சந்ததி பார்த்து கர்வப்படட்டும் !
நீ காட்சி பொருள் அல்ல ! கனவு காணாதே. அதை செயல்படுத்து !
செயல் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment