Inanya Maha Munivar to 19-10-2017
சிந்துபுட்பம் ஊதி திசை தெரியா அலைகின்றான் ! பூமி பந்தை புரியாமல் புண்ணியம் தேடா அலைகின்றான்.
எது தாங்கி பிடிக்கிறது ?
உன்னை எது தாங்கி பிடிக்கிறது ? உன் உடலை தாங்கிப் பிடிப்பது எது ? தலையை தாங்கி பிடிக்கும் மூன்று எழும்பின் மஜ்ஜையே உன்னை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது. முப்பத்து மூன்று உன்னை தெளிவுபடுத்தவும், அதில் மூன்று எழும்பே உன்னை திறனாகவும் வைக்கிறது. இதில் தான் குண்டலினி சக்தி இருக்கின்றது.
உடலில் மூன்று எலும்பு , மூன்று நரம்பு இதை கண்டுபிடித்து தட்டிவிட்டால் உன் மாய மயக்கம் தெளிவாகிவிடும். ஆனால் குண்டலினி என்று ஆராய்ந்து இதற்கு பயிற்சி கொடுக்கின்றாய். அரை நொடி சூட்சுமத்தை ஆயுள் முழுவதும் கற்று கொடுக்கின்றாய் ! செம்மறி ஆட்டு கூட்டத்தை என்னவென்று சொல்வேன் ?
பூமி பந்து தாங்கிபிடிக்கின்றதா ? இல்லையேல் பூமியின் காந்த புலனால் நிலை பெறுகிறாயா ? அஷ்ட தாதுக்கள் நிலை நிறுத்துகிறதா ? இதை ஆராய்ந்தால் பிரபஞ்ச சூட்சுமம் தெரிந்துவிடும் ! அஷ்ட தாதுக்கள் என்றால் தங்கம், வெள்ளி, செம்பு, தகரம், இரும்பு, ஈயம். ஆனாலும் இந்த காந்த புலத்தில் தாதுக்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் தொடர்பு உண்டு ! இந்த காந்த புலத்தில் உயிர் தான் உன்னை இயக்குகிறது. ஆண்மா அசைவற்று உனை ஆராய்ச்சி செய்கிறது. நீ செய்யும் நல்லது, கெட்டதை மேல் உலகுக்கு அனுப்புகிறது !
மனிதன் வாழ் நாளில் இருபதாயிரம் கிலோ தானியத்தை உண்டு தின்று உடலை தேய்க்கின்றான். ஐம்பதாயிரம் லிட்டர் நீரை தன் வாழ்நாளில் பயன்படுத்துகிறான். ஒரு நாளைக்கு மூன்று கிலோ காற்றை உட்கொள்கிறான். ஆனால் இந்த உடலை தாங்கி பிடிக்கும் உயிருக்கு உணவு கொடுக்காமல் உறங்கி திரிகின்றான். நான் என்று உள்ளே வைத்து நாயகனை (கடவுளை) அறியாது தேய்கின்றான !
உடலுக்கு உணவு கொடுத்தாய் ! இந்த உயிருக்கு ஏன் உணவு கொடுக்கவில்லை ? உன் உயிர் தினமும் கடவுளிடம் சென்று முறையிட்டு அழுகிறது. இந்த அற்ப சரீரத்தை விட்டு எப்போது விலகுவேன் என்று ஆளும் வல்லமை உள்ளவனிடம் முறையிடுகிறது.
முதன் முதலில் என் அன்பிற்கினிய தந்தை “உன் உயிருக்கு உணவு கொடுடா” என்று சொன்னார்கள் ! அது என்னிடம் இருக்கிறது, எடுத்து போ என்று ஓடி வா, ஓடி வா என்று அழைத்தார்கள். ஆனால் இந்த மூட மனிதன் கேலி செய்து கீழ்த்தரமாய் போனான். மதி கெட்ட மானிடன் குறை சொல்லி திரிந்து கோமாளியாகி போனான். கதை படித்தவன் எப்படி காலத்தின் நாயகனை உணர்வான் ?
என்னிடமும் உன் உயிர்க்கு மருந்து ஒன்று இருக்கின்றது. என் தந்தை எனக்கு அளவிளாது தந்து சென்றார்கள். உன்னை தாங்கி பிடிக்க நான் இருக்க ஏது பயமடா !
நான் பேரின்பம் ! என்னுள் எத்தனை கோடி ஜீவராசிகள், எத்தனை கோடி பிரபஞ்சம் ? அறிந்தவன் யாருமில்லை. கால சக்கரத்தின் மேலே நர்த்தனம் ஆடுகின்றேன். துன்பத்தில் ஆடும் மானிடா, எப்போது அறிவாயடா ?
உன்னை தாங்கி பிடிப்பது எது ? மாயையை உணரடா ! மால்மயம் புரிந்துவிடும் !
உன்னை தாங்கி பிடிக்க வந்த தலைமகன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment