to INANYA MAHA MUNIVAR
23-11-2017
நிம்மதி தரும் கடவுளின் பாதம் ! நிர்மதி தரும் என் கைவாரம் ! பீழை தான் தந்தது பீடை உள்ள மனிதனால் !
ஏழுநிலை
கீழே ஏழு உலகங்கள் இருப்பதாக பிதற்றுகிறான். பாதாள உலகம் என்றும் விளம்புகிறான். கடவுளை பாதளம் தேடி அலைந்தான் என்று கதை படித்தான். கதை படித்து முழுவதும் விளங்காமல் காலம் தெரியாத கயவனிடம் ஏது கூற ?
உன்னில் மேலே ஏழு நிலைகள். கீழே ஏழு நிலைகள். மொத்தம் பதினான்கு நிலைகள் ! பாதத்தில் அடியில் இரண்டு நிலைகள் உள்ளன. உன்னில் மேல்நிலை ஏழையும் கடந்தால் தான் கடவுளை அறிய முடியும். ஈரேழு உலகம் என்று இதைத் தான் சித்தர்கள், மகான்கள், ஞானிகள் அனைவரும் சொல்லிப் போனார்கள்.
உடலில் ஏழு ஆதார சுருதிகள், ஆறு சக்கரங்கள் உள்ளன. இவைகளை அறியாமல் ஞானம் தேடி புலம்புகின்றான் புற உலகில் !
அகத்தில் கழிந்தால் புறம் ஒடுங்கும் என்பதை புரியாமல் அலைகின்றான். ஒரு விநாடி சூட்சுமமே எல்லாம். ஆனால் யோகா, தியானம், தவம், விரதம் இன்னும் எத்தனையோ மடமைதனமான செயல்கள் கொண்டு தன்னை வருத்தி ஆதியில் கடவுளை மறந்தான். தன்னை கடக்காமல் விண்னை கடக்க நினைக்கின்றான்.
இங்கே எதுவும் நிலையில்லாதது என்னைத் தவிர !
காலம், சூரியன், சந்திரன், மனிதன் என இங்கே எல்லாம் மாறும் என்பதை உணர் ! ஆனால் நான், வானம், பூமி என்றுமே மாறுவதில்லை !
மனிதன் தான் வேஷம் போடுகின்றான் கடவுளிடம். கடவுளுக்கு கண் தெரியாது என்று எண்ணற்ற தவறுகள் செய்கின்றான். இங்கே நிலை, நிலை இல்லாதது எதுவென்று அறிந்து வணங்கினால் மனிதன் ஞானியாவான் ! கற்சிலைக்கு குடம், குடமாக பால் தயிரை, நெய்யை விரயமாக்கி கோமாளி போல் வாழும் குறை உள்ள மனிதனிடம் ஏது கூற ?
ஐயாயிரம் வருடங்கள் மனிதன் அலங்கோலப்படுகிறான். இரண்டாயிரத்து ஐந்நூரு வருடத்திற்கு முன்னால் கோயில் இல்லை ! கோபுரம் இல்லை ! கொடி மரங்கள் இல்லை ! குளங்கள் உண்டு ! மனிதன் நிம்மதியாய் வாழ்ந்தான். ஆனால் நான் என்று மார்தட்டி இப்போது நாயகனை (கடவுள்) அறியாது மாண்டு விடுகின்றான்.
என்னை பார்த்தவன் ஏழு நிலைகளையும் கடப்பான் ! எந்த தியானமும், தவமும் செய்யாமல் என் பின்னால் வருபவன் தன் ஏழு கீழ் நிலைகளையும் அறிவான் !
திடன் உள்ளவன் தப்பித்து கொள்கிறான். என்னுள் நிந்தித்து நின்று யோசிக்கின்றவன் நிர்மூலமாக போகின்றான். நான் நானாக எப்போதும் இருக்கின்றேன் ! ஆனால் நீ தான் நீயாக இல்லை. மனிதன் எப்போதும் மது உண்டவன் போல மயக்க நிலையில் நிற்கின்றான். கேட்டது கிடைத்தால் கடவுள் இருப்பதாக உளர்கின்றான். கேட்டது கிடைக்கவில்லை என்றால், நினைத்தது நடக்கவில்லை என்றால் கடவுள் இல்லை என்று பிதற்றுகிறான். உன் கோபம் உன்னையே சுட்டெரிக்கும் என்பதை உணர் !
வம்பு பேசும் மானிடனே, எப்போது உணர்வாயடா ? என்னுள் ஆறு சூட்சுமம் எப்போது அறிவாயடா ? ஆனந்த நிலையில் எப்போதும் நான் ! ஆனால் நீ இல்லை. உன் ஆனந்தம் நான் காணவே ஆசைப்படுகிறேன் !
முயற்சி செய்யடா ! உன் முன்னால் நின்று நான் அள்ளித் தருகிறேன் ! திட நம்பிக்கை கொண்டு எதையும் செய். நான் உன் உறவு. என் மேல் திட நம்பிக்கை கொண்டு எதையும் தொடங்கு ! வெற்றி நிச்சயமடா !
சத்தியத்தின் தலைமகன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment