நமன நிலை !
உன் உயிர் ஒடுங்க உன்னை பிடிக்காமல் வெளியில் தேடுகிறது, உள்ளே ஒன்று ஒளி வீசி கொண்டிருப்பதை நீ அறியாமல் இருப்பதால் !
நீ ஜீவாத்மாவை அறிந்தாலே அது உன்னை பேராத்மாவுக்குள் அழைத்து செல்லும் ! கைகூப்பி, உடலை ரணபடுத்தி வெளியில் தேடுகிறாய். ஒடுங்க தேடுகிறாய். உன்னை அறிந்தால் கல்லையும், மண்னையும், ஜீவசமாதியையும் இருகரம் கூப்பி வணங்கி ஒடுங்கமாட்டாய் !
கல்லறையில் ஒடுங்கி போகும் உடலை வைத்து உணராமல் அலைகின்றாயே ? உனக்கு ஒன்று மேலே இருக்கின்றது ! அதனாலே தேடுகின்றாய்.
நீ ஜீவாத்மா என்பதை உணர் ! உன் துன்பம், நோய், வறுமை, கவலை எல்லாம் தீர ஒன்றை தேடுகிறாய் ! ஆனால் முதலில் உள்ளே தேடாமல் வெளியில் தேடுவதாலே உன்னை அறியாமல் போனாய் ! உள்ளே பெரு ஒளி ஒன்று அகல் விளக்கில் (இதயத்தில்) எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் செயற்கையாய் விளக்கெறிந்து சித்திரத்தை, பிம்பத்தை வைத்து அதில் ஒடுங்கி போய் ஓய்ந்து போனாய் ! உணர் !
உயிரற்ற ஜடப் பொருளில் நிலை ஒன்றும் இல்லை. ஆனால் நிலையான ஒன்றை தேடாமல் போனாய். நீ நிலை இல்லாதவன். உன் உயிர், ஆண்மா நிலையானது. நிலை உள்ளது உன் உள்ளே உறங்கி கொண்டிருக்கிறது. ஒரு நாள் முழுதும் மௌனமாய் (ஐம்புலன் அடக்கி) இரு !
எல்லா ஆசையையும் அசைவற்று வை ! உன் ஆளுமை மெல்ல விழிக்கும். உன் உயிர் தான் தேடுகிறது. உன் துன்பம் தீர்க்க ! ஆனால் ஆண்மா எதையும் தேடுவதில்லை. வணங்குவதும் இல்லை. “உன் உயிர் வணங்கும் என்னை !” என்று என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் ! உன் தாய், தந்தையை வணங்கு முதலில் ! வணங்கும் குணம் இருந்தால் உன் தாய், தந்தையை வணங்கு என்றும் சொல்வார்கள் ! உன் உயிர் நிலை அறியும் ஆரம்ப சூட்சுமம் இது தான் !
ஜீவனும், ப்ரம்மமும் எப்போதும் இணைவதில்லை. தனி, தனி பணி செய்து கொண்டிருக்கின்றன. உன் உயிர்க்கு தான் தண்டனை. ஆண்மாவுக்கு அல்ல. உன்னுள் ஒடுங்கு ! மௌனம் எதையும் சாதிக்கும். தேடு முதலில் உன்னை ! பின் செல்வம் தேடு ! தேடிய பொருளை உனக்கு போக இல்லாதார்க்கு கொடு ! இந்த தொண்டு உன்னை உணர வைக்கும்.
வழிபாடு தேவை இல்லை. வழிமுறைகளை தாங்கு ! பின் பூரிப்பாய். உன் உடல் ஒடுங்கும் முன் உன்னை அறிய முற்படு !
கடவுள் இருப்பது சத்தியம் ! இதற்கு நானே சாட்சி ! என்னுள் இருந்து பேசுகிறேன். உன் துன்பம், நோய் கரைக்க இன்று முதல் ஆணையிட்டேன்.
மன்னுதல் ஆக யோசி ! மாயவன் உனை எப்போதும் காப்பேன் !
என்னுள் ஒடுங்கு ! உன்னில் மலர்ந்து பின் உலகில் மலர்வாய் !
ப்ரம்மம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment