Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, December 6, 2017

இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நான் கண்டேன் ! நான் சத்யம் ! என் நாமம் சத்தியம் ! உணர்ந்தவன் ஆனந்த நிலையில் வாழ்வான்.

இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நான் கண்டேன் ! நான் சத்யம் ! என் நாமம் சத்தியம் ! உணர்ந்தவன் ஆனந்த நிலையில் வாழ்வான்.
காஞ்சியில் ஏன் வாழ்கின்றேன்.
பொறுனை எனும் புணித தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தேன். சீரலவாய் எனும் திருச்செந்தூர் அருகில் வளார்ந்தேன். பிரம்மபுரம் என்று வேதத்தில் இருக்கும் புணித காஞ்சி மாநகரில் வாழ்கின்றேன் ! வந்தது ஓர் இடம் ! வளர்ந்தது ஓர் இடம் ! வாழ்வது ஓர் இடம் !
வசந்த காலத்தை காலடியில் வைத்து, காலத்தை கையில் வைத்து காஞ்சிக்கு வந்தேன் ! தமிழும், மானுடமும் உற்பத்தி செய்த இடத்திலிருந்து இந்த முக்தியை தரும் புண்ணிய பூமி காஞ்சிக்கு வந்தேன் !
தமிழ்நாட்டில் எங்கு பிறந்தாலும் மீண்டும் பிறக்கமாட்டாய். உன்னை உணர்ந்தால் ! வாழ்வில் இந்த மூன்று முக்கிய முக்தி தரும் ஸ்தலத்தில் கால் தடம் பதித்திருப்பாய் ! (தாமிரபரணி நதிக்கரை, செந்தூர் எனும் சீரலவாய், காஞ்சி). பூமியில் இவ்விடங்கள் மும்மூர்த்திகள் வாசம் செய்யும் இடங்கள் ! அதனாலே காஞ்சி மாநகருக்கு மும்மூர்த்திகள் வாசம், பிரம்மபுரம், விண்டுபுரம், சிவபுரம் என்ற புணித பெயர்கள் உண்டு !
மன்னர் மன்னனும்  , மானுட வடிவம் தரித்த ராமன், கிருஷணன், இயேசு வந்து சென்ற சஞ்சி நாதம் பதித்த இடம் உலகில் மூன்று முக்கிய புள்ளிகள் நேர் கோடுகளாக தெற்கிலிருந்து வடக்காக நீண்டு காண்டத்தின் வாயிலில் முடிவடைகிறது. அது நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் தொடங்கி சீரலவாயில் ஊன்றி காஞ்சியில் முடிவடைகிறது. இந்த முக்கோணத்திற்கும் உன் பாத்தில் உள்ள மூன்று நரம்புகளுக்கும் தொடர்புண்டு !
காஞ்சிக்கு காமபுரம் என்ற நாமமும் உண்டு ! காம என்றால் அன்பு, கருணை, தெளிவு என்று அர்த்தம். அன்பின் ஊற்று ஆளுமையை உற்று நோக்கும் உயிரின் உணர்வு இது. என் அன்பிற்கினிய தந்தையும், நானும் தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தோம். திருச்சீரலவாயில் வளர்ந்தோம். காஞ்சியில் வாழ்ந்து பிரபஞ்சத்தின் ஒளியாக உயிர் பெற்றோம் !
இந்த சத்தியவிரத ரேத்திரம் என்ற காஞ்சி மாநகரில் சத்தியத்தை கடைபிடித்து சத்திய பாதையில் பயணிக்கின்றேன். நான் சத்தியம் ! அறிவு, அறிவது, அறியப்படுவது என்ற மூன்றுக்கும் ஆண்ம தொடர்பு உண்டு ! மூன்றும் நானறிந்தேன் ! அதனாலே “நான்” என்று சொல்கிறேன்.
என் அன்பிற்கினிய தந்தை யாகவா அவர்களிடம் உலகில் அவர்கள் பார்த்ததில் யார் சிறந்த மகான் என்று கேட்டதற்கு காஞ்சி மகான் மட்டுமே உண்மை என்று சொன்னார்கள் ! காஞ்சி மாநகர் பிரளய சித்து என்ற திருநாமத்தையும் தன்னகத்தே கொண்டது. இந்த மண் முக்தி தரும் புண்ணிய பூமி !
மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு அளிக்கும் தாமிரபரணி நதியில் நீராடி காஞ்சியில் கால் மிதித்தவன் இங்கே மீண்டும் பிறப்பதில்லை ! முக்தி தரும் ஏழு நகரங்களில் முதன்மையானது இது தான் ! காளிதாசன் ஞான திருஷ்டியில் உணர்ந்து இங்கே கால் மிதித்து போனான். தன் கவிதையிலும் வடித்தான் காஞ்சியை.
வரலாறு மறைக்கபட்டது ! உணர் ! மனிதன் சாஸ்திரத்தில் மயங்கி சரித்திரம் மறந்தான். திராவிடத்தை உருவாக்கி பின் அதை சிதைப்பதும் இந்த பூமியில் தான் !
இனி எல்லாம் மாறும் !
எல்லாம் அழியும் ! இனி புது புது வித்துக்கள், புது புது பறவைகள், புது புது விலங்கினங்கள், புது புது நோய்கள் யுகத்தில் தோன்றும் ! தர்ம யுகமாக மாறி கால சக்கரம் சத்திய வழியில் பயணிக்கும். அனைத்திற்கும் இங்கே காரணம் உண்டு ! காரணமில்லாமல் இங்கு ஏதும் நடப்பதில்லை என்பதை உணர் !
நான் வந்த காரணம் தெரிந்தேன் ! காலத்தை என் பாதத்தில் அடக்கினேன் ! முக்காலத்தையும் உணர்ந்தேன் ! நீ எக்காளமிடாதே ! உன் உயிர் உனை ரணப்படுத்தும். உணர் உண்மை நீ என்று ! உன்னுள் இருப்பது கடவுள் ! அதை உணரப் போராடு !
நான் இந்த யுகத்தில் முப்பத்தி எண்ணாயிரம் தேவர்களோடு, நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளோடு, நூற்றிப் பதினோறு கோடி முனிவர்களோடு நாற்பத்தி எட்டாயிரம் கோடி ஆண்டுகள் வாழ்வேன் !
இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யாதே !
என் தந்தையின் பிரம்மஸ்தலமும் காஞ்சி மாவட்டத்தில் அடங்கி இருக்கிறது. உணர் உனக்கு ஞானமிருந்தால் !
பிரம்மபுரத்தில் யாசித்து, வாசித்து, சுவாசித்து வென்றவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment