இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யும் மானுடமே நான் கண்டேன் ! நான் சத்யம் ! என் நாமம் சத்தியம் ! உணர்ந்தவன் ஆனந்த நிலையில் வாழ்வான்.
காஞ்சியில் ஏன் வாழ்கின்றேன்.
பொறுனை எனும் புணித தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தேன். சீரலவாய் எனும் திருச்செந்தூர் அருகில் வளார்ந்தேன். பிரம்மபுரம் என்று வேதத்தில் இருக்கும் புணித காஞ்சி மாநகரில் வாழ்கின்றேன் ! வந்தது ஓர் இடம் ! வளர்ந்தது ஓர் இடம் ! வாழ்வது ஓர் இடம் !
வசந்த காலத்தை காலடியில் வைத்து, காலத்தை கையில் வைத்து காஞ்சிக்கு வந்தேன் ! தமிழும், மானுடமும் உற்பத்தி செய்த இடத்திலிருந்து இந்த முக்தியை தரும் புண்ணிய பூமி காஞ்சிக்கு வந்தேன் !
தமிழ்நாட்டில் எங்கு பிறந்தாலும் மீண்டும் பிறக்கமாட்டாய். உன்னை உணர்ந்தால் ! வாழ்வில் இந்த மூன்று முக்கிய முக்தி தரும் ஸ்தலத்தில் கால் தடம் பதித்திருப்பாய் ! (தாமிரபரணி நதிக்கரை, செந்தூர் எனும் சீரலவாய், காஞ்சி). பூமியில் இவ்விடங்கள் மும்மூர்த்திகள் வாசம் செய்யும் இடங்கள் ! அதனாலே காஞ்சி மாநகருக்கு மும்மூர்த்திகள் வாசம், பிரம்மபுரம், விண்டுபுரம், சிவபுரம் என்ற புணித பெயர்கள் உண்டு !
மன்னர் மன்னனும் , மானுட வடிவம் தரித்த ராமன், கிருஷணன், இயேசு வந்து சென்ற சஞ்சி நாதம் பதித்த இடம் உலகில் மூன்று முக்கிய புள்ளிகள் நேர் கோடுகளாக தெற்கிலிருந்து வடக்காக நீண்டு காண்டத்தின் வாயிலில் முடிவடைகிறது. அது நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் தொடங்கி சீரலவாயில் ஊன்றி காஞ்சியில் முடிவடைகிறது. இந்த முக்கோணத்திற்கும் உன் பாத்தில் உள்ள மூன்று நரம்புகளுக்கும் தொடர்புண்டு !
காஞ்சிக்கு காமபுரம் என்ற நாமமும் உண்டு ! காம என்றால் அன்பு, கருணை, தெளிவு என்று அர்த்தம். அன்பின் ஊற்று ஆளுமையை உற்று நோக்கும் உயிரின் உணர்வு இது. என் அன்பிற்கினிய தந்தையும், நானும் தாமிரபரணி நதிக்கரையில் பிறந்தோம். திருச்சீரலவாயில் வளர்ந்தோம். காஞ்சியில் வாழ்ந்து பிரபஞ்சத்தின் ஒளியாக உயிர் பெற்றோம் !
இந்த சத்தியவிரத ரேத்திரம் என்ற காஞ்சி மாநகரில் சத்தியத்தை கடைபிடித்து சத்திய பாதையில் பயணிக்கின்றேன். நான் சத்தியம் ! அறிவு, அறிவது, அறியப்படுவது என்ற மூன்றுக்கும் ஆண்ம தொடர்பு உண்டு ! மூன்றும் நானறிந்தேன் ! அதனாலே “நான்” என்று சொல்கிறேன்.
என் அன்பிற்கினிய தந்தை யாகவா அவர்களிடம் உலகில் அவர்கள் பார்த்ததில் யார் சிறந்த மகான் என்று கேட்டதற்கு காஞ்சி மகான் மட்டுமே உண்மை என்று சொன்னார்கள் ! காஞ்சி மாநகர் பிரளய சித்து என்ற திருநாமத்தையும் தன்னகத்தே கொண்டது. இந்த மண் முக்தி தரும் புண்ணிய பூமி !
மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வு அளிக்கும் தாமிரபரணி நதியில் நீராடி காஞ்சியில் கால் மிதித்தவன் இங்கே மீண்டும் பிறப்பதில்லை ! முக்தி தரும் ஏழு நகரங்களில் முதன்மையானது இது தான் ! காளிதாசன் ஞான திருஷ்டியில் உணர்ந்து இங்கே கால் மிதித்து போனான். தன் கவிதையிலும் வடித்தான் காஞ்சியை.
வரலாறு மறைக்கபட்டது ! உணர் ! மனிதன் சாஸ்திரத்தில் மயங்கி சரித்திரம் மறந்தான். திராவிடத்தை உருவாக்கி பின் அதை சிதைப்பதும் இந்த பூமியில் தான் !
இனி எல்லாம் மாறும் !
எல்லாம் அழியும் ! இனி புது புது வித்துக்கள், புது புது பறவைகள், புது புது விலங்கினங்கள், புது புது நோய்கள் யுகத்தில் தோன்றும் ! தர்ம யுகமாக மாறி கால சக்கரம் சத்திய வழியில் பயணிக்கும். அனைத்திற்கும் இங்கே காரணம் உண்டு ! காரணமில்லாமல் இங்கு ஏதும் நடப்பதில்லை என்பதை உணர் !
நான் வந்த காரணம் தெரிந்தேன் ! காலத்தை என் பாதத்தில் அடக்கினேன் ! முக்காலத்தையும் உணர்ந்தேன் ! நீ எக்காளமிடாதே ! உன் உயிர் உனை ரணப்படுத்தும். உணர் உண்மை நீ என்று ! உன்னுள் இருப்பது கடவுள் ! அதை உணரப் போராடு !
நான் இந்த யுகத்தில் முப்பத்தி எண்ணாயிரம் தேவர்களோடு, நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளோடு, நூற்றிப் பதினோறு கோடி முனிவர்களோடு நாற்பத்தி எட்டாயிரம் கோடி ஆண்டுகள் வாழ்வேன் !
இச்சகம் கொண்டு பம்மாத்து செய்யாதே !
என் தந்தையின் பிரம்மஸ்தலமும் காஞ்சி மாவட்டத்தில் அடங்கி இருக்கிறது. உணர் உனக்கு ஞானமிருந்தால் !
பிரம்மபுரத்தில் யாசித்து, வாசித்து, சுவாசித்து வென்றவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment