to INANYA MAHA MUNIVAR
02-11-2017 ·
ஆக்கம், துவஞ்சம் அழியாது வாழும் மானிடா, ஆள்பவனை எப்போது அறிவாயடா ?
எது கடவுள் ?
கடவுள் எங்கே ? எது கடவுள் ? உன் அனுபவம் தான் கடவுள் ! அந்த அனுபவத்தில் அன்பிற்கினிய தந்தை இருப்பதை உணர்வது தான் கடவுள் ! உன் இன்பத்திலும் துன்பத்திலும் கிடைக்கும் அனுபவம் தான் கடவுள் ! அனுபவப் பாடம் ஆள்பவன் தருவது என புரியாமல் வாழ்கின்றாய்.
வெளியில் இருந்து வந்த ஒலி வெப்பமாகி பின் காற்றில் சங்கமித்து நீரில் உறவாடி நிலத்தில் வந்திறங்கினாய். ஐம்பூத தத்துவம் அடிமுடி கண்டாயானால் கடவுளை எப்போதோ அறிந்திருப்பாய். உணர்ந்திருப்பாய் ! வெளி, வெப்பம், காற்று, நீர், நிலம் இதை வரிசைப்படுத்தி வாழ்வை புரிந்தவன் ஞானியாகிறான். இதுவே சரியான அளவு கோல் !
இயற்கையினால் கடவுள் உனக்கு உணர்த்தி கொண்டே இருக்கின்றான். பூகம்பம், இடி, மின்னல், புயல் என்று புரிதல் உனக்கில்லையே ! பூமியின் காந்தப்புலன் மேலிருந்து வரும் மெல்லிய மாய கயிற்றின் தொடர்போடு பொருந்தியது என்று. நீ இங்கே தலைகீழாக தொங்கி கொண்டிருக்கின்றாய் என்பதை அறிந்தால் தவறு செய்யமாட்டாய். நீர், மரம், நீ எல்லாம் இந்த புவியின் காந்த புலத்தில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
உன் காந்த புலன் பூமியின் காந்த புலத்தில் இருந்து விலகும் போது தான் நீ மரணிக்கின்றாய். படைப்பின் மகத்துவமும், ரகசியமும் அறிவாயோ நீ ? அன்பிற்கினியவன் என் தந்தை அளவிட முடியாத பேரன்பு கருணைமிக்க பேரருளாளன் என்பதை உணர் !
நீ இப்போது இருக்கின்றாய். இதுவே கடவுளின் உணர்தல் ! நீ அறிவை தான் தேடிக் கொண்டிருக்கின்றாய். நீ உணரும் காலம் எப்போதடா ? கடவுள் இருப்பதை அறிவதில் தான் அறிவை தொலைத்து அலைகின்றாய். நோய், துன்பம், வறுமை, இதுவெல்லாம் மனிதருக்கு மனிதர் வேறுபட்டிருப்பது ஏன் ? உணர் !
ஜணிக்கும், பிறக்கும் மனிதரின் கைரேகை ஒருவர் போல் மற்றவர்க்கு இல்லையே ஏன் ? படைப்பின் உண்ணதத்தை அறிவாயானால் கடவுள் இருப்பை உணர்வாயடா !
அன்பானவன் அன்பை உணர்ந்தாலே ஆயுள் உள்ளவரை ஆணந்தம் உணர்வாய் ! ஏனடா விரக்தி, வேதனை ? நான் உன் நீதிபதி. என் சட்டம் பொய்ப்பதில்லை.
உன் அனுபவம் உன்னை கூட்டி செல்கிறது இன்பம் போல துன்பம் போல உனக்கு காட்டி ! ஆனால் இந்த மெல்லிய மாயத்தை உணராமல் ‘நான்’, ‘எனது’ என்று வீராப்பு பேசுகிறாய். உன் பயணம் எப்போதும் மரணத்தை (கடவுள்) நோக்கி தான் ! ஆனால் அதை உணராமல் நீ ஒரு கெட்ட பாதையை அமைத்து பயணிக்கிறாய்.
துன்பம் எப்போது இல்லை என்று உணர்கிறாயோ, உன் பாதை சரி என்று அர்த்தம் ! மனகிலேசமும், மாய மயக்கமும் இருப்பதாலேயே உனக்கு உன் பாதை தெரியவில்லை. உன் இருப்பு, இறப்பு கடவுள் இருப்பதை உணர்த்துகிறது ! உணர் !
உன் அனுபவம் தான் கடவுள் என்பதை புரிந்து கொள் !
உன் அனுபவம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment