போர்வு வருமடா ! போர் அடிக்கும் மேழி சுமப்பான் மேதகு வாழ்வு வாழ்வானடா ! என் சொல் வெல்லுமடா !
தானம் தந்த தனம் ;;;
தானம் தரும் உழவன் இனி வாழ்வான். உலகமெல்லாம் வறுமை சூழும். உலகம் உழவனின் காலில் விழும் காலம் நெருங்கிவிட்டது.
தனம் வர தானம் செய் ! மண், பொன், வெள்ளி, பசு, தேங்காய், எள் தானம் செய்யலாம். உடனடி பலன் உண்டு ! பின் நெல், அரிசி, கோதுமை பயிர்கள் எல்லாம் தானம் செய் ! சந்தனம் மிகப் பெரிய வளம். இருந்தால் கொடு ! இல்லையேல் மனதால் வாழ்த்தி விலகு ! பால், வெள்ளம், வஸ்திரம், புத்தகம் தானமாக கொடுக்கலாம். உன் உள்ளம் தாளமிடும் !
கடுகைத் தவிற எல்லா நவமணிகளையும் தானம் செய்யலாம். நிதானம் வர தானம் செய் ! ஆனால் சோற்றை கொடுத்து சோம்பேறியாக்காதே ! இல்லாமை கொடுமை அல்ல ! விரும்பாமை தான் பாவம் !
எலுமிச்சை, பூசணி, சுரைக்காய், தாமரை இலை தானம் செய்யாதே ! முருங்கை, உப்பு, துளசி, எண்ணெய் , முட்டை அசைவ வஸ்துகள் தானம் செய்யாதே ! பிறரிடம் இருந்தும் வாங்காதே ! மனைவி வீட்டில் இருந்தும், தாய் வீட்டில் இருந்தும் வாங்காதே ! தாய், தந்தை, மனைவியிடமிருந்து பஞ்சினால் நெய்ததை புதிதாக வாங்காதே ! நீரில் அலசி வாங்கு ! கருவுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு !
அடுத்தவர் கையிலிருந்து எலுமிச்சை வாங்காதே ! ஊமத்தை, நாயுறுவி, துளசி, தொட்டாற்சுருங்கி, எருக்கு - இவைகளை நன்றி சொல்லாமல் பறிக்காதே !
பஞ்சதரு என்று சொல்லும் மேலிருந்து நேரடியாக கீழே வந்த மரங்கள் (வன்னி, பாதிரி, மா, வில்வம், மந்தாரை ) இந்த ஐந்து மரங்களின் இலைகளையும் நன்றி சொல்லாமல் பறிக்காதே. இவைகள் ஐந்தும் ஞானமரங்கள். உன் சந்ததி வளம் பெற இந்த ஐந்து மரங்களையும் பூமியில் ஊன்றி போ ! உன் பாவம் கரையும். அதற்கு நீர் ஊற்ற ஊற்ற மரத்தை நட்டு பராமரித்தால் உன் மனசுமை குறையும். நீயே ஆராய்ந்து பார் ! இந்த ஐந்து மரங்களுக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டு ! மா, வில்வம் மகத்தான மரங்கள் !
எதையும் பெண்கள் தொடலாம். பறிக்கலாம். பாவமில்லை. தீட்டு இல்லை. ஆனால் பாவி மனிதன் தான் பெண்ணை விலக்கினான். பெண் அந்த மூன்று நாள் (மாத விலக்கு) தனக்கு வேண்டியதை கேட்டால் நிச்சயம் கிடைக்கும் ! சாபம் விட்டால் எதிரியும் கலங்கி போவான். இங்கே யார் சாபமிட்டாலும் பலிக்கும் தாயின் சாபத்தை தவிற !
பசுவைத் தவிற எந்த ஜீவராசிகளையும் தானம் கொடுக்காதே ! ஆதியிலே கருப்பு நிறம் காராம் பசு சாணத்தை தரையில் படாமல் வெள்ளை துணியில் பிடித்து அதை இளம் வெயிலில் காய வைப்பார்கள். இதை கார்த்திகை மாதம் ஆரம்பிப்பார்கள். பின் காய்ந்த சாணத்தை ஆற்று மணல் மேல் எரித்து அதை மார்கழி பணி முழுவதும் வைத்து பின் தை மாதம் வளர்பிறையில் அந்த சாண சாம்பலை வெள்ளை துணியில் சலித்து பின் உடலில் பூசுவார்கள்.
இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கெட்ட நீரும், தலையில் உள்ள எரிஞ்ச நீரும் உறிஞ்சப்படும். ஏனென்றால் பசு அரிஷ்ட மூலிகை என்ற விஷ புற்களை சாப்பிடும். அதனால் தான் பசுவுக்கு எந்த விஷமும் தொண்டையில் நின்றுவிடும். இதை அறிந்து செய்தான். ஆனால் அதை புணிதம் என்ற பெயரால் மதத்தில் புகுத்தினான்.
ஆதியிலே இருந்த மதம் உண்மை தான். இப்போது சுயநலத்திற்காக மதம் ஆரம்பித்து சண்டையிடுகின்றான். கோதானம், பூதானம், பொன் தானம், திலதானம், இவை எல்லாவற்றிலும் சிறந்தது அறிவு தானம் தான் ! மேலே கூறிய அனைத்து தானங்களும் பாவம் கரைக்கும். ஆனால் அறிவு தானம் மீண்டும் பிறப்பில்லாமல் வைக்கும் !
தானத்தில் சிறந்தவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment