Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, December 20, 2017

போர்வு வருமடா ! போர் அடிக்கும் மேழி சுமப்பான் மேதகு வாழ்வு வாழ்வானடா ! என் சொல் வெல்லுமடா !

போர்வு வருமடா ! போர் அடிக்கும் மேழி சுமப்பான் மேதகு வாழ்வு வாழ்வானடா ! என் சொல் வெல்லுமடா !
தானம் தந்த தனம் ;;;
தானம் தரும் உழவன் இனி வாழ்வான். உலகமெல்லாம் வறுமை சூழும். உலகம் உழவனின் காலில் விழும் காலம் நெருங்கிவிட்டது.
தனம் வர தானம் செய் ! மண், பொன், வெள்ளி, பசு, தேங்காய், எள் தானம் செய்யலாம். உடனடி பலன் உண்டு ! பின் நெல், அரிசி, கோதுமை பயிர்கள் எல்லாம் தானம் செய் ! சந்தனம் மிகப் பெரிய வளம். இருந்தால் கொடு ! இல்லையேல் மனதால் வாழ்த்தி விலகு ! பால், வெள்ளம், வஸ்திரம், புத்தகம் தானமாக கொடுக்கலாம். உன் உள்ளம் தாளமிடும் !
கடுகைத் தவிற எல்லா நவமணிகளையும் தானம் செய்யலாம். நிதானம் வர தானம் செய் ! ஆனால் சோற்றை கொடுத்து சோம்பேறியாக்காதே ! இல்லாமை கொடுமை அல்ல ! விரும்பாமை தான் பாவம் !
எலுமிச்சை, பூசணி, சுரைக்காய், தாமரை இலை தானம் செய்யாதே ! முருங்கை, உப்பு, துளசி, எண்ணெய் , முட்டை அசைவ வஸ்துகள் தானம் செய்யாதே ! பிறரிடம் இருந்தும் வாங்காதே ! மனைவி வீட்டில் இருந்தும், தாய் வீட்டில் இருந்தும் வாங்காதே ! தாய், தந்தை, மனைவியிடமிருந்து பஞ்சினால் நெய்ததை புதிதாக வாங்காதே ! நீரில் அலசி வாங்கு ! கருவுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு !
அடுத்தவர் கையிலிருந்து எலுமிச்சை வாங்காதே ! ஊமத்தை, நாயுறுவி, துளசி, தொட்டாற்சுருங்கி, எருக்கு - இவைகளை நன்றி சொல்லாமல் பறிக்காதே !
பஞ்சதரு என்று சொல்லும் மேலிருந்து நேரடியாக கீழே வந்த மரங்கள் (வன்னி, பாதிரி, மா, வில்வம், மந்தாரை ) இந்த ஐந்து மரங்களின் இலைகளையும் நன்றி சொல்லாமல் பறிக்காதே. இவைகள் ஐந்தும் ஞானமரங்கள். உன் சந்ததி வளம் பெற இந்த ஐந்து மரங்களையும் பூமியில் ஊன்றி போ ! உன் பாவம் கரையும். அதற்கு நீர் ஊற்ற ஊற்ற மரத்தை நட்டு பராமரித்தால் உன் மனசுமை குறையும். நீயே ஆராய்ந்து பார் ! இந்த ஐந்து மரங்களுக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டு ! மா, வில்வம் மகத்தான மரங்கள் !
எதையும் பெண்கள் தொடலாம். பறிக்கலாம். பாவமில்லை. தீட்டு இல்லை. ஆனால் பாவி மனிதன் தான் பெண்ணை விலக்கினான். பெண் அந்த மூன்று நாள் (மாத விலக்கு) தனக்கு வேண்டியதை கேட்டால் நிச்சயம் கிடைக்கும் ! சாபம் விட்டால் எதிரியும் கலங்கி போவான். இங்கே யார் சாபமிட்டாலும் பலிக்கும் தாயின் சாபத்தை தவிற !
பசுவைத் தவிற எந்த ஜீவராசிகளையும் தானம் கொடுக்காதே ! ஆதியிலே கருப்பு நிறம் காராம் பசு சாணத்தை தரையில் படாமல் வெள்ளை துணியில் பிடித்து அதை இளம் வெயிலில் காய வைப்பார்கள். இதை கார்த்திகை மாதம் ஆரம்பிப்பார்கள். பின் காய்ந்த சாணத்தை ஆற்று மணல் மேல் எரித்து அதை மார்கழி பணி முழுவதும் வைத்து பின் தை மாதம் வளர்பிறையில் அந்த சாண சாம்பலை வெள்ளை துணியில் சலித்து பின் உடலில் பூசுவார்கள்.
இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கெட்ட நீரும், தலையில் உள்ள எரிஞ்ச நீரும் உறிஞ்சப்படும். ஏனென்றால் பசு அரிஷ்ட மூலிகை என்ற விஷ புற்களை சாப்பிடும். அதனால் தான் பசுவுக்கு எந்த விஷமும் தொண்டையில் நின்றுவிடும். இதை அறிந்து செய்தான். ஆனால் அதை புணிதம் என்ற பெயரால் மதத்தில் புகுத்தினான்.
ஆதியிலே இருந்த மதம் உண்மை தான். இப்போது சுயநலத்திற்காக மதம் ஆரம்பித்து சண்டையிடுகின்றான். கோதானம், பூதானம், பொன் தானம், திலதானம், இவை எல்லாவற்றிலும் சிறந்தது அறிவு தானம் தான் ! மேலே கூறிய அனைத்து தானங்களும் பாவம் கரைக்கும். ஆனால் அறிவு தானம் மீண்டும் பிறப்பில்லாமல் வைக்கும் !
தானத்தில் சிறந்தவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment