வான் கொடை ஊற்றருகி ஊமை கூட்டம் உணராது இருப்பது ஏனோ ? இங்கு சளகனே நிரம்ப கண்டேன்.
கொடை
வான் கொடை தந்தான். வான் தலைவன் என் அன்பின் அப்பா யாகவா ! வின் மகன் நான் உனக்கு ஊட்டினேன். நீ உணராது இருப்பது ஏனோ ? கருணை நிறைந்த புணித மழையை வரவேற்காமல் கரிசனம் செய்தான் கர்மத்தின் சாயல் வைத்த மானுடம் !
என் தந்தையின் அருட் கொடையை அறிவாயோ ? ஆஹா ஆனந்தம். ஆயுள் முழுவதும் பேரானந்தம். பெரு வாழ்வோடு உலகானந்தம் ! வான் கொடை தராவிடில் இங்கே யாரும் வாழ முடியாது. வசந்த காலம் நிலைக்க முடியாது. எந்த வித சிரமமுமின்றி எந்த வித கொடுக்கலும் இன்றி நீ இன்புற தந்தானே வான் மழை தந்த நாயகன் ! நீ என்றாவது நன்றி சொன்னாயா ?
படைத்தவன் கருணை பாமரனுக்கும் உண்டு ! கடவுளுக்கு பாகுபாடு இல்லை, பண்பு கெட்ட மானிடா ! கடவுளின் அருட் கொடையை பருகி உணர்ந்தவன் பக்குவம் தொலைத்தான். பாசமுள்ள மழையை உணரா பாவியாக அலைகின்றான் !
என் விந்தை நடத்தும் சந்தையில் நீ விற்காத பொருள் தானடா ? ஆதலால் வேதனையோடு வாழ்கின்றாய். இந்த பூமியிலே உணர்ந்து கொள்ளடா ! புணிதன் கருணையை உணர் ! புண்ணியம் உனக்குண்டு.
என் நாவினிலே நாயகன் தானுன்டு. நம்பியவர் வாழ்வில் கண்ணீர் இல்லா வசந்த காலம் தானுண்டு. உவகை கொள்ளடா ! உண்மையில் நன்மை நானடா !
வான் அமிர்தம் மழை தந்த நாயகனை தெரிய முற்படு ! நான் உனை அழைத்து செல்கிறேன். அவன் பாத கமலத்தில் பருகும் தேனுண்டு. நான் அழகாக, ஆனந்தமாக இந்த நரகத்தில் இருக்கும் ரகசியம் நன்றி சொல்வதாலே தான் !
இயற்கை எனை தாலாட்டுகிறது. நம்பிக்கை தளரும் பொழுதெல்லாம் நாயகன் என் பாத கமலத்தை கெட்டியாக பிடித்து கொள். விண் நாயகன் பிரபஞ்சத்தின் இளவரச இந்த இநன்யா உனை கரை சேர்ப்பேன்.
நன்றி சொல்லடா ! .நாளும் அவன் புகழ்பாடடா ! நாயகன் நான் உன் கண் முன்னால் விரிவேன் !
ஆணந்த தூறல் நான் ! ஆர்பரிக்கும் வெள்ளமும் நானே ! ஆர்பரிக்கும் வெள்ளத்தை அடக்கும் வல்லமையும் நானே ! ஆனால் நான் எப்போதும் ஆர்பரிப்பதில்லை. அற்ப மனிதன் ஏசுவதையும், பேசுவதையும் காது கொடுத்து கேட்பதில்லை. ஏனென்றால் நான் ஆனந்தமானவன்.
என்னுள் இருமாந்து அலைகின்றேன் ! நான் உயரிய வித்து என்பதை அறிவேன். பிரபஞ்ச நாயகனின் தவப் புதல்வன் என்பது எனக்கு தெரியும் ! நான் கடவுளின் (என் தந்தை) கருணையை உணர்ந்தவன். அளவில்லா அன்பை உணர்ந்தவன். என் ஆனந்த சூட்சுமம் இது தான் !
காண்கின்ற பொருளில் எல்லாம் கருணையை உணர்வதால் பேரின்பம் எனக்குள்ளே ! நீயும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய் ! கடவுளின் கருணையை உணர் ! அதை உற்று அறியாமல் உறங்கிவிடாதே !
வான் கொடை மழை ! வாரி அனைத்து முத்தமிடு !
கடவுளின் கருணை உன் மேல் !
கடவுளின் கருணை உன் மேல் !
வான் கொடை நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment