விரிஞ்சியின் பதும பீடத்தில் இருப்பவன் நான் ! என் சதநியுதம் நியர் பார்வையில் உவள், உவனாக நீ நிற்கின்றாய் ! ஏனடா பயம் ?
உணர்வே அமிர்தம்
உணவே உன் எண்ணங்களை நிர்ணயிக்கும் என்று நினைக்காதே ! உணவு உடலை பக்குவபடுத்தும் ! ஆதியிலே அறிந்து உண்டான். நோயில்லா அசைவற்று வாழ்ந்தான் ! இப்போது கண்டதையும் உண்டு தின்று நிம்மதி இல்லாமல் அலைகின்றான்.
எள் நெய் மறந்தான். ஐம்முகியின் நித்திலம் மறந்தான். இரவை சுருக்கி ஆழ்ந்த நித்திரை இல்லாமல் துயரத்தில் வாழ்கின்றான். உன் சிரசில் இருக்கும் சூட்சும நரம்புகள் சிக்கி தினறி உனக்கு ஆனந்த நிலை தராமல் அவஷ்தையில் ஆழ்த்துகிறது. என் துணை கொண்டு உன் தீவினையோடு போராடு ! உன் பாவத்தை என்னில் கரைத்திடு. உனை உணர்ந்து உலகை அறிய முற்படுவாய் !
யுகத்தில் மூன்று தாய்ப்பால் உண்டு ! முப்பாலையும் மறந்தான்.
ஈன்ற தாயின் பால் மறந்தான்.
வின் தாயின் பால் மறந்தான்.
பூமி தாயின் பால் மறந்தான்.
முப்பாலை மறந்து அப்பால் தேடுகின்றான். லோகம் செல்ல விரையாமல் வீணனாய் அலைகின்றான்.
ஈன்ற தாயின் பால் மறந்தான்.
வின் தாயின் பால் மறந்தான்.
பூமி தாயின் பால் மறந்தான்.
முப்பாலை மறந்து அப்பால் தேடுகின்றான். லோகம் செல்ல விரையாமல் வீணனாய் அலைகின்றான்.
உப்பை பக்குவமாய் சாப்பிடும் மானிடா, பசி வந்தால் சாப்பிடு. உணர்ந்து சாப்பிடு. உன் உழைப்பால் உன் உணவு ஜீரணமாகட்டும்.
கைபேசியில் கனவை தொலைத்து அலைகின்றான். எதிர்காலத்தை மறந்து, என்னை மறந்து, தன் நிலை தெரியாது, தடுமாறி அலைகின்றான்.
ஆதியில் பழைய சோறும், பச்சை மிளகாயும் உண்டு வாழ்ந்தான். நோயில்லாமல் பவிசோடு வாழ்ந்தான். இப்போது துரித உணவை சாப்பிட்டு துயரத்தோடு வாழ்கின்றான்.
எள், கொள் மறந்து, நிலமுத்தை உண்ணாமல், நீள்முடியாய் திரிகின்றான். சதகுப்பையும், சர்விரோகத்தையும் உண்டவன் மறந்து போனான். விரிஞ்சியில் நெருஞ்சி இல்லை. வேதம் உண்டு. கமலோற்பவனின் காலத்தின் சூட்சுமம் உண்டு ! நான் அதன் அருகிலே ! நீ உணராதிருப்பது ஏனோ ?
கடவுளின் அருளமுதம் ருசித்தவன் இங்கே எல்லாம் மறப்பான் ! கடவுளின் அன்பு, ஸ்பரிஷம் தவிற எல்லாம் இங்கு பொய் தான் ! இங்கே நிரந்தரமானது கடவுளின் அன்பு ஒன்று மட்டும் தான் !
அதுவே பேரின்பம், பெருவாழ்வு, பெரும் அமிர்தம் !
எப்போதடா அந்த அருளமுதத்தை ருசிக்க முயற்சிப்பாய் ?
எவ்வளவு ஆணந்தம், பேராணந்தம், அதை நீ பருகி பாரடா ! உணர்ந்தால் இலகுவாய் பூமியில் வாழ்வாய் !
அற்ப இன்பத்தை தேடி போகின்றாயே ? ஆண்மாவின் பேரானந்தம் புரியாமல் !
அதுவே பேரின்பம், பெருவாழ்வு, பெரும் அமிர்தம் !
எப்போதடா அந்த அருளமுதத்தை ருசிக்க முயற்சிப்பாய் ?
எவ்வளவு ஆணந்தம், பேராணந்தம், அதை நீ பருகி பாரடா ! உணர்ந்தால் இலகுவாய் பூமியில் வாழ்வாய் !
அற்ப இன்பத்தை தேடி போகின்றாயே ? ஆண்மாவின் பேரானந்தம் புரியாமல் !
முயற்சி செய் ! இந்த ஆத்மத்தின் தலைவன் உனக்கு துணை இருப்பேன் !
உழைப்பை யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. யோகா, தியானம் என்று கண்களை மூடியும், கைகளையும் கால்களையும் ஆட்ட சொல்லித் தருகிறான். நாளைய உணவை தேட கற்று கொடுடா ! நீ உண்ணும் உணவே உனை (உடலை) கொள்கிறது.
உழைப்பை யாரும் கற்றுக் கொடுக்கவில்லை. யோகா, தியானம் என்று கண்களை மூடியும், கைகளையும் கால்களையும் ஆட்ட சொல்லித் தருகிறான். நாளைய உணவை தேட கற்று கொடுடா ! நீ உண்ணும் உணவே உனை (உடலை) கொள்கிறது.
ஆதியில் உண்ட தானியங்களை உண்பதற்கு கற்றுக் கொள். பழைய சோறும், பச்சை மிளகாயும் சாப்பிட பழகு ! வெளியில் உண்ணும் உணவில் விஷம் தான் உண்டு. ஆதியில் ஆளுமையோடு வாழ்ந்தான். இப்போது வீரியம் குறைந்து ஆளுமையை இழந்து ஆர்பரிக்கின்றான். வாழ்வின் இன்பம் தெரியாமல் எதையோ உண்டு தின்று ஊமை கூட்டமாய் வாழ கண்டேன்.
உயிரில்லா எழுதகத்தில் லயித்து தன்னை மறந்து போகின்றான் மனிதன். என்னுள் கரைந்திடு ! இன்பமான வாழ்வு உண்டு !
அறிந்து உண்டு, உன்னில் களிப்புற வாழக் கற்றுக் கொள். ஊழை சமமாக்கு ! உபத்திரவம் உனக்கில்லை !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். “”எல்லாம் தின்றேன், எல்லாம் சாப்பிட்டேன் என்று உளர்கின்றான். ஆனால் அவன் தின்னும் உணவு தான் அவனை சாப்பிடுகிறது. மனிதன் பாவத்தை செய்து மாத்திரைகளைச் சாப்பிடுகின்றான். உணர்வது எப்போதடா ? “” என்று சொல்வார்கள்.
நான் கடவுள் நிலையில் இருந்தாலும் நோயில்லாமல் இருப்பதற்கு காரணம் முன்னால் சாப்பிட்ட உண்ணும் உணவு தான் !
நான் அறிந்து உண்டேன். ஆளுமையோடு இருக்கிறேன் ! நீயும் அறிந்து உண்பதற்கு கற்றுக் கொள் ! ஆணந்தமாவாய் !
இனி யுகத்தில் சிறுவிலை தான் ! பெருவிலை என்னுள் உணரடா !
விரிஞ்சியின் பதும பீடத்தில் இருப்பவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment