என் திரு அயனம் அறியாது நீ அனந்த சயனத்தில் ஆழ்ந்து ஆளுமை தெரியாது வாழ்கின்றாய். ஏனடா ?
விஞ்ஞானம்
உன் விஞ்ஞானத்தில் செய்வதெல்லாம் வீன் தானடா ? முடிவில் எல்லாம் கரமாலமாக போக கண்டேன். விரைவில் சகடிகையில் போகும் காலம் வந்துவிட்டது. விதை ஒன்றை சிருஷ்டிக்க முடியாத விஞ்ஞானத்தை வைத்து எதை நிவர்த்தி செய்ய முடிந்தது ?
எல்லாம் தின்றாய் ! எல்லாம் செய்தாய் ! நிம்மதியை தொலைத்தாய் ! பூமியின் ஆழம் பார்த்தாயா ? பெண்ணின் ஆழம் பார்த்தாயா ? நீல சுரங்கத்தின் கரை பார்த்தாயா ? ஏதோ ஒரு திட்டில் அமர்ந்து சந்திரன், என்றும், செவ்வாய் என்றும் பிதற்றுகிறாய். வேடிக்கை விஞ்ஞானமடா !
பூமியில் வறுமையை போக்காமல் வானில் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றாயடா ? உன் பூத உடலோடு வேறு எங்கும் செல்ல முடியாது என்பதை புரிந்து கொள் !
சொகுசுக்காக அனைத்தையும் படைத்து சுகமில்லாது அலைகின்றான். வாழ்வென்று நினைத்து வக்கனையாய் சாப்பிட முடியாமல் மாத்திரையை பையில் கட்டிக் கொண்டு திரிகின்றான். நோயோடும் நொடியோடும் நொறுங்க திண்ண முடியாமல் தவிக்கின்றான். இது தானா உன் வளர்ச்சி ? விளைவான மாத்திரைகளை உண்டு தின்று மீண்டும் வேறொரு நோயில் துன்பப்படுகின்றான். இது தானா உன் விஞ்ஞானம் ?
உன் விஞ்ஞானம் எல்லாம் எஞ்ஞானமாக போகக் கண்டேன், நல்லவற்றுக்காக பயன்படுத்தினால் நலமாக இருப்பாய் ! ஆனால் கெட்டவற்றுக்கே நீ அதிகம் பயன்படுத்துகின்றாய்.
வளர்ச்சி, முதிர்ச்சி என்று வெந்ததும், வேகாததும் சாப்பிட்டு வீணணாய் அலைகின்றான். புது புது நோய் கொடுத்து சாட்டை அடி கொடுத்தாலும் என் சதுரங்க சேனையை மறந்தான்.
மண்ணை பற்றி ஆராயாமல், பெண்ணை பற்றி ஆராயாமல், விண்ணை பற்றி ஆராய்ந்து எதை சாதித்தாய் ? உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகள் சொல் கேட்டு மூச்சை இழுக்க பழகி மூடனாக திரிகின்றாய்.
உடல் உழைப்பை மறந்தான். உண்மை தெரியாது வாழ்கின்றான். மீண்டும் மீண்டும் தவறு செய்து மேகவாயாய் புளித்து போகின்றான். மனிதன் எதையும் படைக்கவில்லை ! புதிதாக உருவாக்கவில்லை !
மெய் ஞானத்தில் இருந்து வந்தது தான் வின் ஞானம். முன்னால் வின் ஞானம் தெரிந்து சித்தர்கள் மரணத்தை கணித்து வாழ்ந்தான். உயிர் போகும் வழி தெரிந்து வாழ்ந்தான். கடவுள் பூமியில் படைத்த பொருட்கள் எதையும் உன்னால் அழிக்க முடியாது. அது அணுவுக்குள் அணுவாக கரைந்திருக்கிறது.
உன் விஞ்ஞான அணு உலை எல்லாம் வெடித்து சிதறக் கண்டேனடா ! உன் கேடு கெட்ட கோள் எல்லாம் வெடித்து பூமியில் சிதறக் கண்டேனடா ! பார் எல்லாம் பிணம் தாண்டி போகக் கண்டேன். நான் பயம் காட்டவில்லை. உணர் என்று தான் சொல்கிறேன். என் கையில் இருக்கும் காலச் சக்கரம் வீண் இல்லை. உண்மை சொரூபம் !
உணரடா !
உன்னை எப்போதும் அரவணைக்கும் விஞ்ஞானத்தில் நீ படைத்த பொருட்கள் எதுவும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால் காற்று, நீர், தானியம் இல்லாமல் உன்னால் வாழ்ந்திட முடியுமா ? உணர் ! எண்சான் உடம்பை இருமாந்து தூக்கி அலைகின்றாய். எறும்பு கடிக்க தாள முடியாத இந்த அற்ப உடலை வைத்து அழகென்று பிதற்றுகின்றாய்.
நான் உண்மை ! உன் விஞ்ஞானம் பொய் தானடா ?
விரைவில் சகடிகையில் போகக் கண்டேன். நீ படைத்த பொருட்களை தெருவில் நின்று கூவி விற்க நான் கண்டேன். தங்கத்தையும், தரையையும் கூவி விற்பான். தரை வாங்க நாதி இல்லாமல் போகக் கண்டேன். மின் இல்லாமல், தந்தி இல்லாமல் போகக் கண்டேன். மீளா துயரில் மேன் மக்களும் வாடக் கண்டேன்.
மின்னல் பல வகையில் தோன்றும். அது பால் போலிருக்கும், பச்சை போலிருக்கும். மிரட்சியாய் வந்து உருக்குலைந்து போக வைக்கும். என்ன செய்வாயடா ? என்மலி பூத்தாய். ஏன் உணராமல் அலைகின்றாய் ?
சகத்தை சகதண்டம் என்றாய். தட்டையாய் படைத்ததை அறியாது எல்லாம் கண்டுபிடித்தேன் என்று புலம்புகின்றாய். நான் அகண்ட அவரோகி என்பதை ஏன் மறந்தாய் ? மாருதமாய் உன்னுள் நானிருக்க நீ புரியாது இருக்கலாமோ ?
நான், நான் என்று நான் ஓயாமல் சொன்னாலும் என்னை உணராது இருக்கின்றாயே ? உன்னை கடைத்தேற்ற வந்த கருணைமிக்கவன் நான் என்பதை புரியாமல் !
நான் மெய் இநன்யா
No comments:
Post a Comment