Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, December 14, 2016

என் திரு அயனம் அறியாது நீ அனந்த சயனத்தில் ஆழ்ந்து ஆளுமை தெரியாது வாழ்கின்றாய். ஏனடா ?

Inanya Maha Munivar
 15-12-2016
என் திரு அயனம் அறியாது நீ அனந்த சயனத்தில் ஆழ்ந்து ஆளுமை தெரியாது வாழ்கின்றாய். ஏனடா ?
விஞ்ஞானம்
உன் விஞ்ஞானத்தில் செய்வதெல்லாம் வீன் தானடா ? முடிவில் எல்லாம் கரமாலமாக போக கண்டேன். விரைவில் சகடிகையில் போகும் காலம் வந்துவிட்டது. விதை ஒன்றை சிருஷ்டிக்க முடியாத விஞ்ஞானத்தை வைத்து எதை நிவர்த்தி செய்ய முடிந்தது ?
எல்லாம் தின்றாய் ! எல்லாம் செய்தாய் ! நிம்மதியை தொலைத்தாய் ! பூமியின் ஆழம் பார்த்தாயா ? பெண்ணின் ஆழம் பார்த்தாயா ? நீல சுரங்கத்தின் கரை பார்த்தாயா ? ஏதோ ஒரு திட்டில் அமர்ந்து சந்திரன், என்றும், செவ்வாய் என்றும் பிதற்றுகிறாய். வேடிக்கை விஞ்ஞானமடா !
பூமியில் வறுமையை போக்காமல் வானில் எதைத் தேடிக் கொண்டிருக்கின்றாயடா ? உன் பூத உடலோடு வேறு எங்கும் செல்ல முடியாது என்பதை புரிந்து கொள் !
சொகுசுக்காக அனைத்தையும் படைத்து சுகமில்லாது அலைகின்றான். வாழ்வென்று நினைத்து வக்கனையாய் சாப்பிட முடியாமல் மாத்திரையை பையில் கட்டிக் கொண்டு திரிகின்றான். நோயோடும் நொடியோடும் நொறுங்க திண்ண முடியாமல் தவிக்கின்றான். இது தானா உன் வளர்ச்சி ? விளைவான மாத்திரைகளை உண்டு தின்று மீண்டும் வேறொரு நோயில் துன்பப்படுகின்றான். இது தானா உன் விஞ்ஞானம் ?
உன் விஞ்ஞானம் எல்லாம் எஞ்ஞானமாக போகக் கண்டேன், நல்லவற்றுக்காக பயன்படுத்தினால் நலமாக இருப்பாய் ! ஆனால் கெட்டவற்றுக்கே நீ அதிகம் பயன்படுத்துகின்றாய்.
வளர்ச்சி, முதிர்ச்சி என்று வெந்ததும், வேகாததும் சாப்பிட்டு வீணணாய் அலைகின்றான். புது புது நோய் கொடுத்து சாட்டை அடி கொடுத்தாலும் என் சதுரங்க சேனையை மறந்தான்.
மண்ணை பற்றி ஆராயாமல், பெண்ணை பற்றி ஆராயாமல், விண்ணை பற்றி ஆராய்ந்து எதை சாதித்தாய் ? உட்கார்ந்து சுகம் காணும் சோம்பேறி துறவிகள் சொல் கேட்டு மூச்சை இழுக்க பழகி மூடனாக திரிகின்றாய்.
உடல் உழைப்பை மறந்தான். உண்மை தெரியாது வாழ்கின்றான். மீண்டும் மீண்டும் தவறு செய்து மேகவாயாய் புளித்து போகின்றான். மனிதன் எதையும் படைக்கவில்லை ! புதிதாக உருவாக்கவில்லை !
மெய் ஞானத்தில் இருந்து வந்தது தான் வின் ஞானம். முன்னால் வின் ஞானம் தெரிந்து சித்தர்கள் மரணத்தை கணித்து வாழ்ந்தான். உயிர் போகும் வழி தெரிந்து வாழ்ந்தான். கடவுள் பூமியில் படைத்த பொருட்கள் எதையும் உன்னால் அழிக்க முடியாது. அது அணுவுக்குள் அணுவாக கரைந்திருக்கிறது.
உன் விஞ்ஞான அணு உலை எல்லாம் வெடித்து சிதறக் கண்டேனடா ! உன் கேடு கெட்ட கோள் எல்லாம் வெடித்து பூமியில் சிதறக் கண்டேனடா ! பார் எல்லாம் பிணம் தாண்டி போகக் கண்டேன். நான் பயம் காட்டவில்லை. உணர் என்று தான் சொல்கிறேன். என் கையில் இருக்கும் காலச் சக்கரம் வீண் இல்லை. உண்மை சொரூபம் !
உணரடா !
உன்னை எப்போதும் அரவணைக்கும் விஞ்ஞானத்தில் நீ படைத்த பொருட்கள் எதுவும் இல்லாமல் வாழ்ந்துவிடலாம். ஆனால் காற்று, நீர், தானியம் இல்லாமல் உன்னால் வாழ்ந்திட முடியுமா ? உணர் ! எண்சான் உடம்பை இருமாந்து தூக்கி அலைகின்றாய். எறும்பு கடிக்க தாள முடியாத இந்த அற்ப உடலை வைத்து அழகென்று பிதற்றுகின்றாய்.
நான் உண்மை ! உன் விஞ்ஞானம் பொய் தானடா ?
விரைவில் சகடிகையில் போகக் கண்டேன். நீ படைத்த பொருட்களை தெருவில் நின்று கூவி விற்க நான் கண்டேன். தங்கத்தையும், தரையையும் கூவி விற்பான். தரை வாங்க நாதி இல்லாமல் போகக் கண்டேன். மின் இல்லாமல், தந்தி இல்லாமல் போகக் கண்டேன். மீளா துயரில் மேன் மக்களும் வாடக் கண்டேன்.
மின்னல் பல வகையில் தோன்றும். அது பால் போலிருக்கும், பச்சை போலிருக்கும். மிரட்சியாய் வந்து உருக்குலைந்து போக வைக்கும். என்ன செய்வாயடா ? என்மலி பூத்தாய். ஏன் உணராமல் அலைகின்றாய் ?
சகத்தை சகதண்டம் என்றாய். தட்டையாய் படைத்ததை அறியாது எல்லாம் கண்டுபிடித்தேன் என்று புலம்புகின்றாய். நான் அகண்ட அவரோகி என்பதை ஏன் மறந்தாய் ? மாருதமாய் உன்னுள் நானிருக்க நீ புரியாது இருக்கலாமோ ?
நான், நான் என்று நான் ஓயாமல் சொன்னாலும் என்னை உணராது இருக்கின்றாயே ? உன்னை கடைத்தேற்ற வந்த கருணைமிக்கவன் நான் என்பதை புரியாமல் !
நான் மெய் இநன்யா 

No comments:

Post a Comment