Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Friday, December 16, 2016

யாகவா முனிவரின் ஞான வித்துக்கள்

யாகவா முனிவரின் ஞான வித்துக்கள்

யாகவா -   நெஞ்சில் ஆடும் தீபம்  நினைவில் வாழும் ராகம்
- ஞானபாரதி வலம்புரிஜான்
அருள்மிகு யாகவா முனிவர் அவர்களோடு நெருங்கிப் பழகிய நேசர்களில் நானும் ஒருவன். அவர் ஒரு பாமர ஞானி. நெல்லைமாவட்டம் அம்மன்புரத்தில் அவதரித்து ஞானக்கடலாக வாழ்ந்தவர். வறுமையை ஆசிரியராகக் கொண்டு, துன்ப வடுக்களைப் படிக்கட்டுகளாகக் கொண்டு தான் உணர்ந்ததைப் பழகு தமிழில் பாருக்கு உணர்த்தியவர் அவர்.
சாதி, சமயங்களுக்கு அப்பாற்பட்ட சமர ஞானி அவர். பிள்ளைத்தனமாகத் தோற்றுகின்ற அவரது பேச்சுத் தமிழுக்குப் பின்னாலே நித்திய உண்மைகள் நித்தியங்களாகப் புதைந்து கிடைக்கும்.
எழுதப் படிக்க அறியாத யாகவா முனிவர் வடமொழிக்கும் முந்திய மொழியில் வேதங்களைச் சொல்லுகிற பேராண்மை பெற்றிருந்தார். பேச்சுக்காரன் என்று பெயர் பெற்றநானே அவர் சொல்லுகிறமாதிரி வேதங்களைச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஒரு நிமிடத்திற்கு மேலே என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் மணிக் கணக்கில் குற்றாலமே அவர் குரல் வளைக்குள் குடியிருப்பதைப் போலச் சொல்லிக் கொண்டே இருப்பார்.
மொழி ஆய்வாளர்களாலே மாத்திரமே அரிய ஆராய்ச்சிக்குப் பிறகு உணர்ந்து கொள்ளத்தக்க இனான்ய மொழி என்கிற சித்திர வடிவ எழுத்துக்களை அவர் எழுதுவதை எல்லோரும் பார்த்திருக்கிறார்கள்.
பல நூறு ஆண்டு காலத்திற்கும் முன்பாக இருந்த மொழி என்பதற்கான அடையாளம் அதிலே உண்டு. இது முயற்சியில் வருவது அல்ல. தன்னைப் பிழிந்த தவம் என்றுதான் சொல்ல வேண்டும்.
படிப்பறிவு பெரிதும் இல்லாத இந்தப் பாமர ஞானியின் கவிதைகளில் சூல் கொண்டு சுடர்விடும் எழுத்து முத்துக்கள் உண்டு. பஞ்சு வெள்ளையாகத்தானே பிறக்கிறது. என்பார் பெற்றோரை நிற்க வைத்து வணங்கு என்பார். இவைகளெல்லாம் அரிய உண்மைகளா என்பது அறியாதோர் கேள்வி. இவைகளுக்குள் கடலாழம் பொருள் உண்டு.
அகந்தைக் கிழங்கினை அகழ்ந்து எறிந்த ஆழ்வார் எனும்படி அமைதியாகத் தோற்றம் தருகிற தத்துவமாக அவர் வாழ்ந்தார், சூஃப்பிக்கள் என்கிற மெஞ்ஞானிகள் நேரடியாக எதையும் பேசமாட்டார்கள். மறைத்தே பேசுவார்கள். இதையே திருவள்ளுவப் பெருமான்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
என்கிறார். ஞானிகள் எல்லோரும் மறைத்தே பேசினர். யாகவா முனிவரின் மொழி நடையும் அப்படிப்பட்டதே.
அவர் தன் வயது 5000 என்றும் தன் பிறவி 54 என்று கூறினார். இந்த உலகம் படைக்கப்பட்டு 38,000 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்றார். 48,000 ஆண்டுகளுக்குள் உலகில் என்னென்ன நடக்கும் என்பதை இனானிய மொழியில் எழுதி வைத்திருக்கிறார். மணிவாசகப் பெருந்தகையின் ஏழேழ் பிறவி என்பதன் உண்மைப் பொருளை ஓதி உணர்ந்தவர்கள் முனிவரின் அருள் உரைகளுக்குள் அடங்கிக் கிடக்கிற உண்மையினை உணருவார்கள்.
நான் இன்றி நீ இல்லை என்பார். ஆனால் இறுதியில் நீ இன்றி நான் இல்லை என்றும் சொல்லுவார். எந்தப் பொருளிலும் நான் இல்லை. எல்லா பொருட்களும் என்னிடத்தே உள்ளன என்று கிருஷ்ண பர மாத்மா சொல்லுவதை ஒப்பு நோக்க வேண்டும்.
நாம் வாழும் உலகத்தைத் தவிர 111 காண்டங்கள் உண்டு என்பதும், 111 கோடி முனிவர்கள், 111 கோடி சித்தர்கள், 111 கோடி ஞானிகள் உண்டு என்பதும் அவரது அருள்வாக்கு.
உலகம் உருண்டை அல்ல, தட்டை. மனிதன் குரங்கிலிருந்து வரவில்லை, மாங்கனியின்றே மலர்ந்தான் என்பதும் அவரது ஆழ்ந்து அகன்றபார்வை.
யாஷ்யம். இனள்பம், இணைத்வம். தனமுனி, தவமுனி, தர்க்கமுனி, வஸ்யா நுன்வா என்யா போன்ற அவரது சொற்களுக்குக் காலம் கடந்த கச்சிதமான பொருள் உண்டு.
அவரே தமக்குப் பல கடிதங்களை எழுதுவார். ஒரு கடிதத்தில். அக்கடிதம் பிரிக்கப்படுகிறபோது தான் இருக்க மாட்டேன் என்றும் எழுதியிருக்கிறார்.
தன்னிடத்ஹ்டில் வருகிற பொதுமக்களை ஏமாற்றி அவர் வாழ்ந்ததில்லை. உழைப்பை மாத்திரமே நம்பச் சொன்னார். இவரது 17 ஒலி நாடாக்களுக்கு எளியேன் அணிந்துரை பேசியிருக்கிறேன்.
பாமர ஞானியாக நம் மத்தியிலே வாழ்ந்து நம்மில் தொட முடிந்த ஆனால் தொடர முடியாத இந்த வானம் என்றைக்கும் வாழும் நிலம், தீ, நீர், வாயு, ஆகாயம் போல அவரது நினைவுகளில் பொதுவாக உலக மக்கல் குறிப்பாகத் தமிழர்கள் எப்போதும் நீந்துவார்கள்.
 ……….. ஞானபாரதி வலம்புரிஜான்

No comments:

Post a Comment