என் தேவதீபம் உன்னை நோக்கி ! இனி கர்மாக்களின் வாழ்வில் புலலேறுவாய் இறங்குவேன் !
எப்போது உணர்வாயடா ?
இந்த வழிப்போக்கனின் பாதையில் தினமும் ஆயிரம் பேர் வந்து செல்கின்றான். ஆனால் ஒருவரும் என் பின்னால் வருவதற்கு யோசனை செய்யவில்லை. என் வழியை முழுவதுமாக பின்பற்றியவன் எதிலும் தோற்றதில்லை இங்கு ! இங்கு மனிதன் தன் நிலை குறித்து யாசிக்கின்றான். ஞான தெளிவு கொண்டு பிறருக்கு உதவி செய்ய யாருக்கும் தெளிவில்லை.
என்னிடம் வருபவன் அற்ப பிரச்சனைகளை சொல்லி ஆணந்தம் தொலைக்கின்றான். எனக்கு கடன் பிரச்சனை, கை வலி, கால் வலி என்று ஒரு விநாடியில் சரியாகும் அற்ப பிரச்சனைக்காக என்னிடம் வேண்டுகின்றான்.
தன்னை கட்டுபாட்டுக்குள் வைக்க தெரியாதவன் எல்லாம் ஞானம் கேட்கிறான். என்னிடம் ஞானம் தேடி வருகின்றவரையே நலம் விசாரிக்கின்றேன். மற்றவரை புறம் தள்ளுகிறேன்.
நீ எப்போது உணர்வாயடா? நீயும் எனை போல நான்கு பேருக்கு உதவி செய்து எப்போது மகிழ்வாயடா ?
நான் பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைத்தால் இந்த தமிழ்நாட்டை எப்போதோ வாங்கிருப்பேன். உழைத்து ஊருக்கு உதவி செய்வது தான் தர்மம் என்று என் தந்தை கட்டளையிட்டார்கள் ! அதனலே தர்மாக்களை தேடி நிற்கின்றேன் !
இங்கு ஒருவர் கூட ஞானம் வேண்டும் என்று போராடவில்லை. நானலை போல வாழ யாருக்கும் தெளிவில்லை. கல்பு எய்யாமையோடு வாழ்கின்றான். சொன்ன சீரத்தில் சுகம் ஒன்று வைத்தேன். உன் அறியாமயை என்ன சொல்வேன் ?
உணர்ந்து ஞான தெளிவு பெற முயற்சி செய் ! தெளிவு வந்தால் ஞானம் கிடைக்கும் ! உன் துன்பத்தை நீயே போக்குவாய் ! நீ விரும்பிய செல்வம் நீயே அடைந்துவிடுவாய் ! நான் உனக்கு குருவாய் இருந்து கற்றுத் தருகிறேன் !
என் கடமை வேறு ! அதை காட்சிபடுத்த சாட்சி இல்லை ! என் கடமை கர்மாக்களை வேறோடு பிடுங்கி எறிவது தான். போகின்ற போக்கிகில் நீ உணர்ந்தால் உனக்கு ஞான தெளிவு தருவேன், உன் இலக்கை இலகுவாய் அடைவதற்கு !
புரியாததெல்லாம் பொய் என்று சொன்னால் புத்திசாலி ஆக முடியாது என்பதை புரிந்து கொள் ! என்னை பார்த்தும் நோய் போகவில்லை என்றால் அது உன் கர்மா ! அதை எப்படி கரைப்பது என்று சொல்லித் தருகிறேன்.
சமீபத்தில் என்னை தேடி வருகின்றவர்களுக்கு ஒரு நிறைகல் சுபிட்ச ஒஷதி (வேர்) ஒன்று கொடுத்தேன். அதை வாங்கி சென்றவன், அதன் அருமை தெரியாமல், அதை அறிந்து பக்குவபடுத்தாமல் வசிய வேர் தருகிறார் என்று உளர்கின்றான். நான் உடனே அதன் வீரியத்தை குறைத்துவிட்டேன். அறிந்தவர்க்கு கொடுக்கலாம் என்று காத்திருக்கின்றேன். ஆனாலும் என் மேல் நம்பிக்கை வைத்தவர்களை உச்சத்தில் வைத்து அழகு பார்க்கின்றேன். அவர்கள் வீட்டில் ஒளி ஏற்றுகின்றேன்.
எனக்கு தெரியும் எப்போது யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்று ! குழம்பி நிற்பவன் குதூகலம் இல்லாது தவிக்கின்றான் ! என்ன சொல்வேன் உன் அறியாமையை ?
நான் உன்னிடன் கையேந்த வரவில்லை ! நான் எதிர்பார்ப்பது என் அன்பை உனக்கு தருவதற்காக ! அந்த அன்பில் ஞான தெளிவு பெற்று உன் பாவம் கரைத்து நீ நான்கு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற பெருந்தன்மை தான். எனை புரிந்தவன் வாழ்வான். உணரடா ! உண்மையில் நன்மை நானடா !
அன்பு உள்ளவன் பிறரை குறை கூறமாட்டான். பேராசை உள்ளவன் தான் பிறரை குறை கூறுவான் ! ஒரு துளி காற்றை இயக்கினேன். விஞ்ஞானமும், அற்ப மனிதனும் வீட்டுக்குள் முடங்கிவிட்டான். எல்லோரும் கடவுளே என்று கை கூப்பி கெஞ்சுகிறான். இது தானடா உன் வீரியம் ! என் சொல் அறிவாய் ! செயல் அறிவாயடா !
வின் மகன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment