Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, December 25, 2016

*மௌனம் என்றால் என்ன?*

*மௌனம் என்றால் என்ன?*

*வார்த்தைகளில்லாமல் நம்முடைய ஆழ்மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் மௌனம் என்று சொல்லலாம். உள்மனதோடு பேசுதல், வார்த்தைகள் இல்லாமல் பிரார்த்தனை செய்தல், இயற்கையோடு இணைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் நாம் மௌனமாக இருக்கிறோம். மௌனம் இருவகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று வெளிப்புற மௌனம், இன்னொன்று உட்புற மௌனம்.*

*வெளிப்புற மௌனமென்பது யாருடனும் பேசாமல் நமக்குள்ளே ஒரு வட்டத்தை போட்டுக் கொண்டு வாழ்வது. அந்த சின்ன வட்டத்துக்குள் நம்மை நாமே அடக்கிக் கொண்டு வாழ்கிறோம். இந்த வெளிப்புற மௌனம் நமக்கு உட்புற மௌனத்தைப் பற்றி அறிய வைக்கிறது. இந்த உட்புற மௌனம் மேலும் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் நமக்கு எந்த உணர்வுகளும் ஏற்படாமலிருப்பது.*

*இதை முதல் வகையான உட்புற மௌனம் என்று சொல்லலாம். மனமும், மூளையும் ஆழ்ந்த நித்திரையில் உள்ள நிலையில் நம்மை சுற்றி நடப்பவைகளைப் பற்றி உணர்ந்து கொள்ளுதல் இன்னொரு வகையான உட்புற மௌனம். ஆனால் இந்த இரண்டு வகைகளான உட்புற மௌனம் நம்மை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. உட்புற மௌனம் மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கிறது, கடவுளை அறிய வைக்கிறது. நாம் மௌனமாக இருக்கும் போது கடவுள் இருப்பதை நன்றாக உணரலாம், ஆனால் கடவுளை நாம் பார்க்க இயலவில்லை. கடவுளை பார்க்க இயலாமல் போனாலும் இறைவன் நம்மோடு இருக்கும் உணர்வைக் கொடுப்பதால் நமக்குள்ளே தெம்பு, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, ஒற்றுமை, பிறர்க்கு உதவுதல் போன்ற உணர்வுகளைக் கொடுக்கிறது.*

*மௌனமானது மனிதனுக்குள்ளே இருக்கும் ஆழ்மனதை தெரிய வைக்கிறது. மௌனம் மனிதனுக்குள்ளே இருக்கும் பரமாத்மாவை அறிய வைக்கிறது. நமக்குள்ளே இருக்கும் பரமாத்வோடு வார்த்தைகள் இல்லாமல் பேசுகிறோம், பிரார்த்தனை செய்கிறோம். மௌனமானது நமக்குள்ளேயிருக்கும் எண்ணத்தை கருத்துள்ள எண்ணமாக மாற்றி அந்த எண்ணத்திற்கு ஒரு வடிவத்தைக் கொடுக்கிறது. உட்புற மௌனம் நம்முடைய எண்ணத்தை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது. இப்படிப்பட்ட மௌனம் நம்முடைய உள்ளத்திற்கும், உடலுக்கும் புத்துணர்வைக் கொடுக்கிறது. ஒரு நாள் நாம் மௌனத்தைக் கடைப்பிடித்தால் நமக்குள்ளே பல மாற்றங்கள் ஏற்படுவதை உணரலாம். இந்த மாற்றம் நம்மை வெளிப்புற உலகிலிருந்து விலக்கி உள்மனதை அறிய வைக்கிறது. எப்போது நாம் உள்மனதை அறிந்து கொள்கிறோமோ அப்போதே நாம் வெளியுலகின் மாயையிலிருந்து விடுபடுகிறோம்.*

*மௌனமாக இருக்கும் போது நமக்குள்ளே நல்ல எண்ணங்கள் உதிக்கின்றன. நமக்கென்று எதையும் யோசிக்காமல் பிறருடைய தேவைகள் மீது கவனம் செலுத்துகிறோம். மற்றவர்களை நேசிக்க தொடங்குகிறோம். பிறருடைய துன்பங்களை துடைப்பதற்கு இறைவனை பக்தியோடு பிரார்த்தனை செய்கிறோம். இந்த மௌனம் மனிதனுக்கு பரந்த மனப்பான்மையை கொடுக்கிறது, விரிந்து கிடக்கும் உலகைப் பற்றி அறிய வைக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்று பாகுபடுத்தி மனிதனுக்கு தெரிய வைக்கிறது. மனிதனுடைய ஆழ்மனம் அவனை மாற்றுகிறது. அவன் மாறும் போது அவனைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் மாற்றத் துடிக்கிறான். இந்த மௌனம் என்பது புதியவைகளை கொண்டு வருவதற்கு அவனுக்கு புதிய உணர்வைக் கொடுக்கிறது. அவனுக்குள்ளே ஆன்மீகம் வளர்கிறது, அமைதி பிறக்கிறது. எந்தவித சஞ்சலமில்லாமல் மாற்றங்களைக் கொண்டு வந்து அதிலிருந்து உருவாகும் புதிய அனுபவங்களை உணர்கிறான்.*

*ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனதிலும் பரமாத்மா இருக்கிறார். இதனை ஆல்பா மனமென்று சொல்லலாம். மௌனம் மனிதனை ஆல்பா மனதோடு தொடர்பு கொள்ள வைக்கிறது. ஆல்பா மனமானது மனிதனுக்கு அமைதியைக் கொடுக்கிறது. அவன் அமைதியடைந்த நிலையில் பரமாத்மாவை உணர்கிறான், பரவசம் அடைகிறான், பகவான் நாமத்தைச் சொல்லிப் பாடுகிறான், ஆடுகிறான். எதிலும் பகவான் இருப்பதை உணர்கிறான். மௌனத்தில் இறைவனோடு உரையாடுகிறான், இறைவன் கலந்த வாழ்க்கையை வாழத் தொடங்குகிறான். எதிலும் அப்பாற்பட்டு சிந்திக்கிறான், செயல்படுகிறான். மௌனம் மனிதனை ஆழ்மனதோடு இணைய வைக்கிறது.*


*மௌனத்தைக் கடைப்பிடித்து வாழ்வின் உண்மைகளைப் புரிந்து கொண்டு வாழ்வோம்.*

No comments:

Post a Comment