யாதுமான யாகவா
கடவுளை இந்த மனிதர்கள் கண்டதில்லை. இறைவனை இவர்கள் உணர்ந்ததில்லை. ஆண்டவனை அறிந்ததில்லை. இந்நிலையில், ஆண்டாண்டு காலமாக அவரவர் வசதியைப் பெருக்கிகொள்ல அவரவர்க்குத் தோன்றிய வகையில் கடவுளைக் காட்டுகிறேன் என்றும், ஆண்டவனின் அவதாரம் என்றும், இறைவனின் தூதுவன் என்றும் சித்து வேலைகள் செய்தும், எத்திப் பிழைத்தும் ஏமாறும் மக்களும், உழைக்க அஞ்சும் சோம்பேறிகளும் இருக்கும் வரையில் ஆடம்பர வாழ்வு வாழலாம் என எத்தர்கள் கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த காலகட்டத்தில்.
சென்னை மேடவாக்கத்திலிருந்து ஒரு குரல், ஓங்கி உரத்து ஒலித்தது…. வருவான், வருவான் என்று யாரை தேடிக்கொண்டிருக்கிறீர்களோ அவன் நான் தான் என்று ஒற்றை ஆட்காட்டி விரல் தன்னையே சுட்ட ஆணித்தரமாய் அந்தக் குரல் ஒலித்தது.
அந்தக்குரலுக்குரியவர் வெள்ளை வேட்டி, வெள்ளை மேல்துண்டு அணிந்து ஒட்ட வெட்டி வெளுத்த முடியும், மீசையுமாக, உழைத்து உரமேறிய உடம்புடன் கள்ளமில்லா வெள்ளைச் சிரிப்புடன் யார்க்கும், எதற்கும், எப்பொழுதும், அஞ்சாத நேர்மைத் துணிவுடன் தன்னை நாடி வந்தவர்களை அரவணைத்து அப்பா என அழைத்த குரலுக்கு, அன்னையாய் நின்று அருள் மழை பொழிந்த யாகவா முனிவர்.
பல ஆச்சரியங்களை, பலரது வாழ்விலும் நிகழ்த்தி, ஆடம்பரமான விளம்பரங்களின்றி, அமைதியாக வாழ்ந்த இவரிடம் நீங்கள் யார் என்று கேட்டபோதெல்லாம் கலகலவென்று சிரித்து கண்டு பிடியேன் என்றார். கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்ற சித்தர் வாக்கு இவர் விஷயத்தில் உண்மையாயிற்று. உடலைப் பார்த்து ஏமாந்து போகாதே, இறந்தும் இருப்பவன் இந்த யாகவா என அவர் அடிக்கடி கூறி வந்தது மனதில் ஆணித்தரமாக பதிந்து விட்டது.
ஆம்! மானுட உடல் எடுத்து, அதைவிடுத்த அந்த மாசக்தி, இன்னும் நம்மிடையே கருணையுடன் இருக்கிறது என்பதே உண்மை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை துல்லியமாக இவர் கூற, அவை அனைத்தும் அப்படியே இப்போது நடப்பதைக் கண்டு அனைவரும் வியந்துதான் போயிருக்கின்றனர்.
வழிப்போக்கனாய் அவர் சொல்லிச் சென்றவேதங்கள் ஒன்றேஇனி நாம் வாழும் வழியாகும். அவைகள் என்றென்றும் மனத்தில் இருத்தி அவர் காட்டிய வழியில் செல்வோம்.
வாழ்க யாகவா புகழ்! வெல்க அவர் காட்டிய வழி!...............
No comments:
Post a Comment