Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Monday, May 1, 2017

உண்மை நானடா ! ஊமைக் கூட்டம் நீயடா ! உணர்ந்து அறியாது உள் உணர்வு இல்லாதான் நீயடா ! உண்மையை உணர் ;;;


Inanya Maha Munivar to 
உண்மை நானடா ! ஊமைக் கூட்டம் நீயடா ! உணர்ந்து அறியாது உள் உணர்வு இல்லாதான் நீயடா !
உண்மையை உணர்
கடவுளின் லோகத்தின் நாமத்தை மனதால் வணங்கி உணர்ந்து கேட்டால் உனக்கு ஒய்யார வாழ்வு உண்டு ! இங்கே பூமியில் கடவுளின் லோகத்தின் நாமம் யாரும் சொல்லிப் போகவில்லை. சிவா சிவா என்ற சொல்ல வாசி வாசி என்று தான் வரும். வாசி என்றால் உன்a மூச்சுக் காற்று ! மூச்சு காற்றை வணங்கி மூர்ச்சையாகி போகின்றாய் !
லோகத்தின் பெயர் பூமியில் யாரும் சொல்லிப் போகவில்லை. சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன் பெயரெல்லாம் அவர்களின் தாய், தந்தை, குரு வைத்த பெயர்.
கடவுளின் லோகத்தின் நாமத்தை சொல்லியிருந்தால் நீ எப்போதோ உணர்ந்திருப்பாய். ஓதா ஊதி உய்வினை தான் கொண்டு உன் ஊன் உடம்பு ஓதி கண்ட பிரதி பலன் என்னடா ?
படைத்தவனை வணங்கு ! எங்கும் வியாபித்திருக்கும் காற்று வேறுபட்டது. உனக்குள் வரும் காற்று (மூச்சுக் காற்று) வேறுபட்டது. உணர் ! காற்றாய் நானிருக்கின்றேன் ! என்னை நினை ! உன் உயிர் வணங்கும் என்னை ! நான் வேதத்தின் தலைவனின் மைந்தன் ! கடவுளின் புதல்வன் ! எனக்குள் கோடி வேதங்கள் உண்டு !
எதையும் ஆரம்பிக்கும் முன் “உ” என்று எழுதுகின்றாய். “உ” என்றால் உக்ரம் என்று பொருள். ஆதியில் உகந்தம் என்ற வேத வார்த்தையை முதலில் எழுதி ஆரம்பிப்பார்கள். இப்போது அதை சுருக்கி “உ” என்று எழுதுகிறாய். உகந்தம், உக்ரம் என்பவைக்கு கதம்பம், துன்பம் என்ற அர்த்தங்கள் உண்டு. உன் இதயத்திற்கு குதூகலம் தரும் வேதம் உகந்தம் என்பது ! “உ” என்று இரண்டுமே ஆரம்பிக்கிறது. அதாவது ஒரே வழியில் தான் இன்பம், துன்பம் இரண்டுமே வருகிறது. நீ எதை தேர்ந்தெடுப்பது என்பது உனக்குள் தான் உள்ளது. கடவுளை குற்றம் சொல்லாதே !
வாசி அறியாதான் வாசித்து என்ன பயன் ? என்ன பலன் ? எதையும் யோசிக்கும் திறமையை இழந்தாய். எதையும் ஆரம்பிக்கும் போது பறவை குறியீட்டை போல தொடங்கு ! “ V “ என்று . இது வெற்றியின் அடையாளம் ! சக்தியின் சாரம் !
உன்னில் பாண்டீத்யம் எனும் குப்பை இருப்பதால் நீ உணரவில்லை. யோசிக்கவில்லை. எந்த மந்திரம் நீ சொல்லி உன் நோய் தீர்ந்தது ? உனக்கு வேண்டியது கிடைத்ததா ? இல்லை உன்னை யார் என்று உணர்த்தியதா ?
ஆண், பெண் சேர்ந்தது தான் ஆவுடையார் ! உன்னை உணர வைப்பதற்கான தத்துவத்தை புரிந்து கொள்ளாமல் நீ விழுந்து அதை வணங்குகின்றாய். பாற்கடலை பாம்பை வைத்து கடைந்தான் என்று கூற கண்டேன். ஏன் கடைந்தார்கள் ? பாற்கடல் என்பது என்ன ? எதுவும் தெரியாது ஏதோ கதை படித்து காலத்தை வீணாக்கி உன்னை தொலைத்து உன் சந்ததியையும் தொலைத்துவிட்டாய். நீ உன்னை செதுக்கவில்லை. கல்லை செதுக்கினாய். ஏனடா ?
இன்னுமா உறங்குகிறாய் ? வீறு கொண்டு எழுந்து நில்லடா ! நீ வலிமையானவன் ! உறங்கியது போதும்.
உபதேசங்களை வேதம் என்று சொல்கிறாய். சித்தானந்தத்தை வேதம் என்று சொல்கிறாய். வேதாந்தம் தெரியாதவன் நீ ! விளம்பி என்ன பயன் ? எப்போது உணர்வாயடா ? துதி பாடி துயரத்தில் திரியாதே ! வழி தெரியாதவன், வழி காட்ட தெரியாதவன் , தன்னைத் தானே குரு என்று சொல்லிக் கொள்கிறான். குரு என்றால் மலர்ச்சி என்பது புரியாமல் அலைகின்றான்.. தன்னை உணர்ந்தவர்கள் யாரும் தன்னை குரு என்று சொல்லமாட்டார்கள்.
காலை கழுவி தண்ணீர் அருந்தும் கயவர் கூட்டத்தை என்ன சொல்வேன் ? ஏமாற்றும் கூட்டத்தை வேரோடு அழிப்பேன். அந்த அசுர கூட்டத்தை அடியோடு அழிப்பேன். எழும்பு கூட்டை கழுத்தில் மாட்டி கோமாளி போல் ஆடும் உன் கூத்தாடிதனத்தை என்ன சொல்வேன் ? சர்வம் எனக்குள் தானடா ? கையில் செத்த கம்பை வைத்து ஏமாற்றுகிறான். இல்லையேல் செத்த ருத்திராட்ச கொட்டையை கழுத்தில் மாட்டி ஏமாற்றுகிறான்.
ஆதியில் “தேவ ஸம்பு” என்ற மரத்தின் விதைக்கு “அத்ரி” என்று பெயர். அதன் விதை வீரியமிக்கது. அதை கையில் வைத்தால் காந்தம் போல ஒட்டும். உன் நிலை உணர்த்தும், அதனாலே அதை உபயோகப்படுத்தினான். 3600 வருடங்களுக்கு முன் அசுரர்களால் அழிக்கப்பட்டது. ருத்திராட்சம் கொட்டை அதைப் போலவே இருப்பதால் கழுத்தில் போட்டு கண் தெரியா அலைகின்றான்.
தானியங்களை கோர்த்து கழுத்தில் மாட்டினால் அதன் வீரியமாவது உணர்வாய். செத்த கொட்டையை மாட்டி திசை தெரியா அலைகின்றாய்.
எப்போது உணர்வாயடா ? நான் உன்னை உணர வைக்க வந்த மாயவன் !
நீ உண்ணும் வரை விடமாட்டேன்.
வேதத்தின் சாரம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment