முப்பால் அப்பால் எப்பால்
பற்றுப்பால் (மழை நீர்), பாசப்பால் (மண் நீர்), அறிவுப்பால் (தாயின் உதிரம் தாய்ப்பால்) ! இதில் ஓர் பால் உணர்வாய் அறிந்தாய் என்றால் அப்பால் உணர்வாய் !
மழைத்துளியில் ஒரு துளி உள்வாங்கி காமகுரோதம் கொண்டு சிப்பி உனக்கு நல்முத்துகளாக தருகிறது. அதை விதை மதிப்பில்லா பொருள் என்று சொல்கின்றாய். சிப்பி வெந்து சுண்ணாம்பு என்ற வெந்த நீர் தர கண்டேன். உனக்கு உதவ கண்டேன். பூமியில் ஊறும் புணித நீரை சாப்பிட்டு அதில் தானியங்களை விளைவித்து உனக்கு திகட்டாமல் உண்ண உணவாய் உன்னுள் தருகிறது. ஒரு நொடி உணர்வாயோ ?
நீரை மறந்து நீசனாக அலையக் கண்டேன். ஆனால் எல்லாவற்றையும் விட உயர்ந்த பால் தாய்பால் (அறிவு) ! அந்த உதிரத்தை சாப்பிட்டு உணர்விழந்து அறிவை தொலைத்து அலைகின்றாயே. சித்தனை தேடி அலைகின்றாய். எத்தன் எல்லாம் நடிக்க நீ சித்தம் தடுமாறி வணங்குகிறாய். சித்தர்கள் கண்ணுக்கு தெரியமாட்டார்கள். வீதியில் தாடி குடுமி வைத்து, அழுக்கு துணி உடுத்தியிருந்தால் சித்தன் அல்ல. சித்தம் தடுமாறி பித்து போல திரிபவன் அவன் என்பவனை புரிந்து கொள் !
உனக்குள்ளே எல்லாம் தேடு ! ஈறறிவு சிப்பியே உதவக் கண்டேன். தன் கடமை தவறாது வாழக் கண்டேன். நீ அறிவுப்பால் சாப்பிட்டு யாருக்கும் உதவக் காணேன். பெற்ற தாயை மதிக்காதவன் நீ எதை மதித்து எதை உணரப் போகின்றாய் ? நீரின் பாசம் நீரை அருந்தியவனுக்கு இல்லை. தாயின் பாசம் அன்பு தாய் பாலை அருந்தியவனுக்கு இல்லை.
தறி கெட்டு போகும் மனதோடு எங்கோ ஓடுகிறாய். எதையோ தேடுகிறாய். இறுதியில் ஆய்ந்து ஓய்ந்து காய்ந்து சருகாய் உதிர்கின்றாய், வேடிக்கை வாழ்க்கையடா !
துன்பங்கள் உன்னை உணர்த்தி திருத்தும் ஆசிரியர் என்று மனதில் பதி ! விரக்தியும், வேதனையும் தூற எறி ! தூயவன் நான் அருகிலே !
அப்பா என்றால் நீர் (பாசம்) !
அம்மா என்றால் காற்று (ஞானம், அன்பு) !
காற்றும், நீரும் இணைத்து தான் நீ ஜணித்தாய் ! இந்த இருவரையும் உணர்ந்து கடமையை செய்தாலே உன் உருவாக்கம் உணர்ந்துவிடுவாய்.
அம்மா என்றால் காற்று (ஞானம், அன்பு) !
காற்றும், நீரும் இணைத்து தான் நீ ஜணித்தாய் ! இந்த இருவரையும் உணர்ந்து கடமையை செய்தாலே உன் உருவாக்கம் உணர்ந்துவிடுவாய்.
காற்றை வணங்கு ! ஞானம் , அன்பு வரும் ! அதனால் தான் மூச்சை உற்று நோக்கு என்று முன்னோர்கள் சொல்லி போனார்கள். ஆனால் நீ அதை வித்தையாக்கி காசாக்கினாய்.
நீரை வணங்கு ! பாசம் வரும் ! அதனாலே கோயிலில் கையில் தீர்த்தம் தந்து அதை அருந்தி வணங்கினாய். நீ எதை வணங்கினாலும் பலன் ஒன்றுமில்லை. உலகில் எல்லா பாலையும் விட தாய் தந்த அறிவுப்பால் தான் உயர்ந்தது.
உணர்ந்து அருந்தியவன் பின் உண்மை புரியாமல் உலகெல்லாம் தேட கண்டேன் ! அறிந்து உணர ஆயிரம் படைத்தான். ஆனால் அறிவிலி நாடகம் நடத்துபவனை தேடி செல்கின்றான் மனிதன்.
என் தந்தை யாகவா சொல்வார்கள். ஆந்திராவில் துணியை வெளுத்து தரும் ஞானக் குடும்பத்திலிருந்து தாய் பால் என்ற புணித அறிவு பாலை அருந்தி உணர்ந்த ஒரு ஞான குழந்தை உருவாகும் ! அது கடவுள் யார், எங்கிருக்கின்றார் என்று தெரியப்படுத்தும் என்று சொல்வார்கள் !
பொறுத்திருந்து பார் பூடகமாய் நான் சொல்வதை ! விரைவில் அறிவிப்பேன் காலநேரத்தை ! முப்பாலை உணர் ! உன் தாய் தந்த அறிவு பால் உணர் ! அப்பால் செல்ல நான் உனக்கு வழி காட்டுவேன் !
முப்பால் உணர்ந்தவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment