Inanya Maha Munivar
20-04-2017
கடவுளின் பாதம் பற்றியவன் கவலை இல்லாது வாழ்கின்றான் ! எவ்வனம் தான் கொண்டு எப்போதும் தன்னை ஆள்கின்றான் !
அன்பில் கரைந்திடு !
கடவுளிடம் அன்பாய் நெருங்கு. உன்னை அள்ளி அணைத்து அரவனைத்து கொள்வதை விட வேறென்ன வேலை அவனுக்கு ? அன்பு தான் இங்கு மிகப் பெரியது ! அன்பில் கரைந்திடு ! ஆள்பவன் உனை ஆணந்தமாக வாழ்விப்பான் !
கடவுளை நீ நெருங்க நினைத்தாலும், உன்னால் இயலாது ! கடவுளே உன்னை நெருங்குவான் !
பில்லி, சூனியம், மாந்திரீகம் இருந்தது உண்மை. ஆனால் அவைகள் தற்போது இல்லை. என் தந்தை 1993 இல் முற்றிலும் அழித்துவிட்டார்கள். பிணத்தை தின்கின்றவன், பிணத்தை வைத்து பூஜை செய்கின்றவன், மிருகங்களை பலியிடுகிறவன், கல்லை வைத்து பூஜை செய்கின்றவன் கடவுளை நெருங்க முடியாது. அடிசுவடு காண முடியாது. இவர்களை கடவுளுக்கு பிடிப்பதில்லை. தீயிட்டு கொழுத்தி (யாகம்) தீமையை செய்கின்றவன் இனி மனமகிழ்ச்சி இல்லா மாய்வான்.
சரணாகதி என்பதே இங்கே உச்சம். அன்பு தான் கடவுளை அடையும் எளிய வழி. பரமாத்மாவோடு உன் ஜீவாத்மா கலக்க இதுவே நிரந்தரம் !
அன்பின் மிகுதி அவன் தாள் பணிய வைக்கும் ! எத்த சித்தன் பணியமாட்டான். எண்ணற்ற துன்பங்களோடு இறுமாந்து மாய்வான். இறப்பிலும் மகிழ்ச்சி கொள்பவன் பரமாத்மாவோடு ஐக்கியமானவன். உனக்கு எந்த துன்பம் வந்தாலும் அவனை விலக நினைக்காதே. உளி கொண்டு உன் இதயத்தை பிளக்கும் துன்பம் வந்தாலும் இறுமாந்து இரு ! அவன் தான் பணிந்து பற்றற்று வாழ் ! உன் உயிர் எற்றிச் செல்லாது. பரமபதன் பாத அமிழ்தத்தால் நிறைவு கொண்டவன் இங்கே மிகச்சிலரே.
இங்கே உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பது மனிதன் வகுத்த மடமையடா. கடவுளின் இதய திருவடியை அனைவரும் நெருங்கலாம் ! படித்தவன், பாமரன் என்ற வேறுபாடுகள் விதிவிலக்கல்ல.
வேத சூத்ரம் அறிந்தவன் நிற்கதியாய் போவதில்லை ! வேதம் தெரிந்தவன் விளங்க சொல் இல்லை. அதனால் பேதம் பார்ப்பவன் இங்கே துயர்படுகின்றான். அதனால் எளியவன் நெருங்க தடை எதுவும் இல்லை. கடவுளின் பாதத்தை பற்றியவன் தான் வெற்றி பெற்றவன். ஏனென்றால் அவனுக்கு மீண்டும் பிறப்பில்லை.
எல்லாம் கற்றாலும் நான் என்ற திமிர் இருந்தால் நாயகனை அடைய முடியாது. பிறப்புற்ற எல்லா உயிருக்கும் அவனே தந்தை. அதனால் அவன் பேதம் பார்ப்பதில்லை. சுவடுகள் அழியலாம், மறையலாம். ஆனால் என் தந்தையின் சுவடுகளும், என் சுவடுகளும் எப்போதும் அழியாது !
காலக்கணக்கில் காலன் நான் ! காண்பவற்றை எணதாக்கி கொள்ளவில்லை ! எல்லாம் எனக்கடிமை !
எப்போதும் ஆனந்த நிலையிலே இருக்க “நான்” என்பதை நீக்கு ! சுயநலமே கடவுளை நெருங்க முடியாமல் உன்னை தடுக்கிறது. உன்னில் கடவுள் இருப்பதாக நினைத்து, ஆனந்த கூத்தாடு ! ஓர் நாளும் உனக்கு விரக்தி வராது !
ஓர்மையில் சொல்கின்றேன். நான் உன்னை பார்த்து கொண்டிருக்கின்றேன். நீ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் நான் அறிவேன் !
அன்பால் என்னை நெருங்கு ! ஆளுமை உனக்குள் இருந்து ஆனந்த கூத்தாடும் !
அன்பின் மெய் நான் !
மெய்யானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment