25-05-2017 எந்தை என் தந்தை எனக்குள் இருக்கும் சூட்சுமம் ! மொந்தை முழு விந்தை கந்தை உன் சூத்திரம் ! ஆகா அறிவாயடா ஆணந்த சூத்திரம் ! வழிபாடு தேவை இல்லை. எனக்கென்று வீடு இங்கு ஏதுமில்லை ! மேலும், கீழும் நானடா ! உன் நெஞ்சமே நான் வாழும் வீடடா ! தூங்கா நான் விழித்திருக்க எனை தூங்கித்தான் கரை சேர்த்தாய். மீண்டும் பிறப்பெடுத்தாய் ! மீளா துயர் கண்டாய் ! எறும்பும் சிறிய இதயம் கொண்டது , விலங்கில் சிங்கமும் சிறிய இதயம் கொண்டது. இரண்டும் அதன் கடமையை செய்து வாழ்கின்றன. உடல் வலிமை ஏன் இங்கு ? படைப்பின் சூட்சுமம் உணர்வாயோ ?எந்த வழிபாடுகளும் தேவையில்லை இங்கு. நீர் வைத்து என் நாமம் சொன்னாலே ஆயிரம் கோடி வழிபாடுகளுக்கு சமம் ! இந்த எளிய வழிமுறையை பின்பற்று. உன் ஆண்மா ஆணந்த கூச்சலிடும் !உன் முன்னோர்களுக்கும், தாய் தந்தைக்கும் திதி கொடுக்க தேவையில்லை. கர்மத்தின், பாவத்தின் சாயல் போக தர்மம் செய்து அவர்களின் ஆண்மாவை சாந்தப்படுத்து. ஒரு கீதவம் வைத்து வணங்கினாலே போதும். முன்னோர்களின் சாபம், கர்மா குறையும் ! அது இடுகாட்டை காக்கும் ஈசனுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் !செல்வம் பெற தும்பைப்பூ வைத்து என் நாமம் சொல்லி கேள். இருபத்து ஏழு நாழிகையில் உனக்கு கிடைக்கும் !ஞானம் பெற இழுப்பை பூ வைத்து கேள் ! பூக்கள் ஞானமிக்கது !படைப்பை விட்டு பரமாத்வாவை வேண்டுவதை விட மற்றவர்க்கு தொண்டு செய்து மகிழ். நான் மலரின் ஞானம் !இங்கு ராகு காலம், எமகண்டம், சருமை, சாஸ்திரம் எல்லாம் பொய்யே ! திதி பார்த்து பிறந்தாயா ? அல்லது திதி பார்த்து இறந்தாயா ? கிழமையும், மாதமும் சித்தர்கள் குறித்தனர். திதியும், சாஸ்திரமும் மனிதன் குறித்தான்.நீ எந்த வழிபாடு செய்தாலும் எந்த துன்பமும் உன்னைவிட்டு விலகாது. துன்பங்கள் உன்னை பின் தொடரும். உன்னை உணரும் வரை இங்கே துன்பம் தான் என்பதை புரிந்து கொள் !ஒரு காரியம் தொடங்க வெளியூர் செல்ல அன்றைய நாள் நன்றாக இல்லை என்று நீ உணர்ந்தால் என் நாமம் சொல்லி பசுவுக்கு இரண்டு வாழைப்பழம் கொடுத்து செல் ! எந்த நாளும் கோளும் உன்னை தீண்டாது. “பொன் மாலைபதி” என்று ஐந்து பூக்கள் உண்டு ! “தும்பை, இழுப்பை. ஊமத்தம் பூ, தென்னம் பூ, தாளம் பூ”. இந்த ஐந்திலும் ஐவகை தத்துவம் உண்டு ! உணர்ந்து அறிந்தவன் ஊமையாகி போனான். இகழ்ந்து சிரித்தவன் மீண்டும் பிறந்தான்.முதலில் உன் உடலை சீராக்கு. இந்த கருவியின் செயல் நலமாக இல்லை என்றால் விரக்தி தான் மிஞ்சும். வாரத்தில் ஒரு நாள் (வியாழன்) காலை உணவு எடுக்காதே. அன்று மதியம் ஒரு வேளை உண் ! அசைவ உணவை தவிர் !அத்திப்பழம், மாதுளம், நல்லி, இம்மூன்றும் உன் ஞானத்தையும் , ஆத்ம பலத்தையும் பெருக வைக்கும். இதில் ஏதாவது ஒன்றை காலையில் உண் ! உன் ஊன் உடம்பு ஆணந்திக்கும். இது வழிபாடு இல்லை.உன் கருவியை சீர்படுத்த பூக்காது காய் காய்க்கும் புணித மரங்கள் ஐந்தின் காய், கனியை எப்போதாவது ஒரு நாள் ஐந்தையும் அரை நாழிகை விட்டு சாப்பிடு ! ஐம்பூத தத்துவம் அதில் அடங்கியிருக்கின்றது. சித்தர்கள் இந்த மரத்தடியில் அதிகம் இருப்பார்கள். ஆணந்தம் தரும் கற்பக மரங்கள் ஞானம் தரும் அதி அற்புத மரங்கள் !மந்திரத்தில் மாங்காயை பழுக்க வைக்க முடியுமா ? இதில் மாங்கா என்றால் என்னவென்று உணர் ! எல்லா மரங்களும், செடிகளும் வேதத்தை ஓதி கொண்டிருக்கின்றன. அறி ! ஆணந்த வாழ்வுக்கு செல்வாய் !விபூதி என்றால் சாம்பல் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றான். வி என்றால் நெற்றி ! பூதி என்றால் ஐம்பூதத்தில் நீர் என்று அர்த்தம். நெற்றியிலே நீரை வைக்கும் தத்துவம் தான் இது. நீ உணராது இருப்பது ஏனோ ?எல்லா புராணமும், கடவுளின் இதிகாசங்களும் கடவுளால் நேரடியாக எழுதப்பட்டவை அல்ல. ஏதோ மனிதர்களும், மகான்களும் இப்படித்தான் நடந்திருக்கும் என்று யூகிப்பால் எழுதினார்கள். எல்லாம் இங்கே நீ உணர்வதற்காக !கனவோடு நான் அல்ல. நினைவோடு நானடா !தினம் தினம் பிரபஞ்ச வீதியிலே நினைவு இருக்க நனைந்து பாரடா !என் ஞான குலங்களே, என்னில் வந்து வாழ்ந்து பாரடா !வையகம் சொர்க்கம் என்று போற்றி பாடடா ! வழிபாடுகள் இங்கே தேவை இல்லை. வழிமுறைகளே உன்னை உணர வைக்கும் !எந்தை என் விந்தை நடத்தும் சந்தையடா நீ !சத்தியத்தின் நாயகன் நான் ! நான் இநன்யா !
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment