Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, May 10, 2017

உன் சீரிப்பு உன்னை திடாரியாக்கும் ! பின் பூரிப்பாய், வாழ்வாய் கடவுளின் அருகிலே ! உண்மையாதென்று உணர் !

உன் சீரிப்பு உன்னை திடாரியாக்கும் ! பின் பூரிப்பாய், வாழ்வாய் கடவுளின் அருகிலே ! உண்மையாதென்று உணர் !
வினை
கடவுளின் பாதத்தில் கரையும் போது உன் ஆத்மா விழிப்படைகிறது. துன்பம் துயரம் எல்லாம் கடந்து உன் ஆண்மாவை அறிந்து நெருங்கு ! ஜீவாத்மா பரமாத்மாவோடு சேரும் போது அங்கே வழிபாடு இருக்காது. சமய சின்னங்கள், மதகோட்பாடுகள், வேசம் இருக்காது. பற்றற்ற முக்தி நிலை கொண்டு லயித்துவிடும்.
எந்த வித மதகோட்பாடுகளும், வழிபாடுகள் செய்தாலும் கடவுளை நெருங்க முடியாது. உன் ஆத்மா, பரமாத்மாவோடு சேர முதலில் நீ செய்வது ஒழுக்கமாக இருப்பது தான் ! இது உனக்கு சொர்க்கத்தை காட்டும் பாதையாக இருக்கும் ! ஆனால் உன் ஆத்மாவை எப்போதும் உறங்க வைத்து உயிர் நிலை அறியாது வைக்கின்றாய்.
கடவுளின் பாதம் பற்றினால் உன் இலக்கு தானாக நிறைவேறும். நீ எதுவும் கேட்க தேவையில்லை. உன் ஆத்மாவுக்கு யாவும் தெரியும். எப்போதும் ஆணந்த கூத்தாடு ! ஆளுமையாளன் உன்னை அணைத்து மகிழ்வான். உன் ஒழுக்கத்தாலும், நீ பிறரிடம் காட்டும் அன்பினாலும் கடவுள் உன்னை தேடி வருவான். நீ நினைத்தது உன்னை தேடி வரும் !
நீ வினையோடு இருக்கின்றாய். அதனாலே “நான்” என்ற அகந்தை உன்னுள் தோன்றுகிறது. செயலோடு இரு ! கடமையை செய்து காலத்தை அறி. செயல் தான் உனக்கு எல்லா நிலைகளையும் கற்றுத் தரும் ! நீ வினையினால் உண்டாகினாய். ஆதலால் மீண்டும் வினையோடு வாழாதே !
தீயவினை நெருப்பு போன்றது. அது உன்னை சுட்டெறிக்கும். இங்கு செயல்பட்டு சிந்தித்து உன் வாழ்வு ஏன் என்று யோசி ! உன் கருவி, பொறி, புலன்களை கடவுளை நோக்கி செலுத்து ! நான் உன் வினையை வேறருப்பேன். உன் வினை தான் உன்னை மீண்டும் மீண்டும் இங்கே பிறக்க வைத்தது.
மிருகங்கள், பறவைகள் நாளைய வாழ்வை பற்றி யோசிப்பதில்லை. சேர்த்து வைப்பதில்லை. அதனாலே அவைகள் மீண்டும் பிறப்பதில்லை. அவைகள் வினையோடு வாழவில்லை. நீ தான் கர்ம வினையோடு வாழ்கின்றாய். தவறு செய்துவிட்டு கடவுளை நோக்கி கதறுகின்றாய்.
உன் வினை தான் உனக்கு துன்பத்தை தருகின்றது. வினை அறுத்து வேறருத்து செயல் புரிய வைக்கும் வல்லமை கடவுளின் நாமத்திற்கு உண்டு ! உன் கரங்கள் கைகூப்பி வணங்குவதற்கல்ல ! உழைத்து கடமையை செய்வதற்காக ! பிறருக்கு தொண்டு செய்வதற்காக படைக்கபட்டது. நீ தான் கும்பிட்டு கூத்தடிக்கிறாய்.
உன் உடல் ஒரு கருவி. அதை அழகுபடுத்தி ஆணந்தம் தொலைக்காதே ! நாற்றமும், புழுக்களும் நிறைந்தது உன் ஊன் உடம்பு. உன் வரலாறு என்னவென்று யோசி ! உடல் அழுக்கை போக்குவது போல உன் உள்ள அழுக்கையும் நீக்கு !
நல்வினை தீவினை இரண்டும் உண்டு ! நீ நல்வினை மட்டும் செய்தால் மீண்டும் பிறக்கமாட்டாய். இன்னும் விலக்கபடாத எத்தனையோ தீவினைகளை நீ தூக்கி சுமக்கின்றாய். முதலில் உன் கோபத்தை கூட உன்னால் தூக்கி எறிய முடியவில்லை. எறும்புகள் கூட்டத்தை அழிக்க நினைத்தாலும் அவைகள் தன் பாதையை விட்டு விலகாது. தன் கடமையை மறப்பதில்லை. மனிதனின் எண்ணம் யாவும் தீவினையோடு இருக்கின்றது. நீ மாறினால் எல்லாம் மாறும். இன்பமாக வாழ ஆசைப்படுகின்றாய். எல்லா தீவினைகளையும் விடு ! இன்பம் உன் காலடியில் !
நல்ல நினைவுகளோடு கொஞ்ச நாள் பழகி பார் ! நாளடைவில் உன்னை நங்கூரம் போல கட்டிப்போடும். தினமும் அதிகாலையில் எழு ! பழக பழக அதில் ஆணந்தம் இருப்பதை உணர்வாய் !
இங்கே யார் உபதேசமும் தேவை இல்லை. உனக்கு நீயே கேட்டு கொள். அது தான் தலை சிறந்த உபதேசம். உனக்கு தெரியும் நல்லது, கெட்டது. உனக்கு எல்லா சித்தாந்தமும் தெரியும். ஆனால் வேதாந்தம் (சத்ய பாதை) தெரிவதில்லை. அதற்காக ஒரு நல் குருவை தேடு !
உபதேசம் செய்கின்றவன், தியானம், யோகா சொல்லி கொடுப்பவன் குரு அல்ல . உனக்கு நல்வழி சொல்லி தருபவனே குரு ! உன் வாழ்வை அழகுபடுத்தி ஆனந்திப்பவனே குரு ! வினை அறுக்கும் சூட்சுமம் குருவுக்கு உண்டு !
நல் குருவை மனதில் நினைத்தாலே உனக்கு நல்வழி கிடைக்கும். இது ஒப்புயர்வற்ற பிறவி. கடவுளை அடைய எளிய பிறவி இது. கடவுளை கண்களால் அறியும் அற்புத பிறவி இது. இந்த பிறவி பெருங்கடலை கடக்க நல்குருவை நாடு !
உன்னுள் உறங்கும் ஆண்மாவே கடவுளிடம் உன்னை சேர்க்கும். அதை ஒழுக்கம், கடமை என்ற லக்கான் போட்டு தட்டி எழுப்பு ! ஆயிரம் புரவியின் வலிமையோடு உன்னை நிரீபிக்கும்.
உள்ளன்போடு கடவுளை நெருங்கு ! உன் வினை அழியும்.
வினை அறுக்கும் சூட்சுமம் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment