உன் சீரிப்பு உன்னை திடாரியாக்கும் ! பின் பூரிப்பாய், வாழ்வாய் கடவுளின் அருகிலே ! உண்மையாதென்று உணர் !
வினை
கடவுளின் பாதத்தில் கரையும் போது உன் ஆத்மா விழிப்படைகிறது. துன்பம் துயரம் எல்லாம் கடந்து உன் ஆண்மாவை அறிந்து நெருங்கு ! ஜீவாத்மா பரமாத்மாவோடு சேரும் போது அங்கே வழிபாடு இருக்காது. சமய சின்னங்கள், மதகோட்பாடுகள், வேசம் இருக்காது. பற்றற்ற முக்தி நிலை கொண்டு லயித்துவிடும்.
எந்த வித மதகோட்பாடுகளும், வழிபாடுகள் செய்தாலும் கடவுளை நெருங்க முடியாது. உன் ஆத்மா, பரமாத்மாவோடு சேர முதலில் நீ செய்வது ஒழுக்கமாக இருப்பது தான் ! இது உனக்கு சொர்க்கத்தை காட்டும் பாதையாக இருக்கும் ! ஆனால் உன் ஆத்மாவை எப்போதும் உறங்க வைத்து உயிர் நிலை அறியாது வைக்கின்றாய்.
கடவுளின் பாதம் பற்றினால் உன் இலக்கு தானாக நிறைவேறும். நீ எதுவும் கேட்க தேவையில்லை. உன் ஆத்மாவுக்கு யாவும் தெரியும். எப்போதும் ஆணந்த கூத்தாடு ! ஆளுமையாளன் உன்னை அணைத்து மகிழ்வான். உன் ஒழுக்கத்தாலும், நீ பிறரிடம் காட்டும் அன்பினாலும் கடவுள் உன்னை தேடி வருவான். நீ நினைத்தது உன்னை தேடி வரும் !
நீ வினையோடு இருக்கின்றாய். அதனாலே “நான்” என்ற அகந்தை உன்னுள் தோன்றுகிறது. செயலோடு இரு ! கடமையை செய்து காலத்தை அறி. செயல் தான் உனக்கு எல்லா நிலைகளையும் கற்றுத் தரும் ! நீ வினையினால் உண்டாகினாய். ஆதலால் மீண்டும் வினையோடு வாழாதே !
தீயவினை நெருப்பு போன்றது. அது உன்னை சுட்டெறிக்கும். இங்கு செயல்பட்டு சிந்தித்து உன் வாழ்வு ஏன் என்று யோசி ! உன் கருவி, பொறி, புலன்களை கடவுளை நோக்கி செலுத்து ! நான் உன் வினையை வேறருப்பேன். உன் வினை தான் உன்னை மீண்டும் மீண்டும் இங்கே பிறக்க வைத்தது.
மிருகங்கள், பறவைகள் நாளைய வாழ்வை பற்றி யோசிப்பதில்லை. சேர்த்து வைப்பதில்லை. அதனாலே அவைகள் மீண்டும் பிறப்பதில்லை. அவைகள் வினையோடு வாழவில்லை. நீ தான் கர்ம வினையோடு வாழ்கின்றாய். தவறு செய்துவிட்டு கடவுளை நோக்கி கதறுகின்றாய்.
உன் வினை தான் உனக்கு துன்பத்தை தருகின்றது. வினை அறுத்து வேறருத்து செயல் புரிய வைக்கும் வல்லமை கடவுளின் நாமத்திற்கு உண்டு ! உன் கரங்கள் கைகூப்பி வணங்குவதற்கல்ல ! உழைத்து கடமையை செய்வதற்காக ! பிறருக்கு தொண்டு செய்வதற்காக படைக்கபட்டது. நீ தான் கும்பிட்டு கூத்தடிக்கிறாய்.
உன் உடல் ஒரு கருவி. அதை அழகுபடுத்தி ஆணந்தம் தொலைக்காதே ! நாற்றமும், புழுக்களும் நிறைந்தது உன் ஊன் உடம்பு. உன் வரலாறு என்னவென்று யோசி ! உடல் அழுக்கை போக்குவது போல உன் உள்ள அழுக்கையும் நீக்கு !
நல்வினை தீவினை இரண்டும் உண்டு ! நீ நல்வினை மட்டும் செய்தால் மீண்டும் பிறக்கமாட்டாய். இன்னும் விலக்கபடாத எத்தனையோ தீவினைகளை நீ தூக்கி சுமக்கின்றாய். முதலில் உன் கோபத்தை கூட உன்னால் தூக்கி எறிய முடியவில்லை. எறும்புகள் கூட்டத்தை அழிக்க நினைத்தாலும் அவைகள் தன் பாதையை விட்டு விலகாது. தன் கடமையை மறப்பதில்லை. மனிதனின் எண்ணம் யாவும் தீவினையோடு இருக்கின்றது. நீ மாறினால் எல்லாம் மாறும். இன்பமாக வாழ ஆசைப்படுகின்றாய். எல்லா தீவினைகளையும் விடு ! இன்பம் உன் காலடியில் !
நல்ல நினைவுகளோடு கொஞ்ச நாள் பழகி பார் ! நாளடைவில் உன்னை நங்கூரம் போல கட்டிப்போடும். தினமும் அதிகாலையில் எழு ! பழக பழக அதில் ஆணந்தம் இருப்பதை உணர்வாய் !
இங்கே யார் உபதேசமும் தேவை இல்லை. உனக்கு நீயே கேட்டு கொள். அது தான் தலை சிறந்த உபதேசம். உனக்கு தெரியும் நல்லது, கெட்டது. உனக்கு எல்லா சித்தாந்தமும் தெரியும். ஆனால் வேதாந்தம் (சத்ய பாதை) தெரிவதில்லை. அதற்காக ஒரு நல் குருவை தேடு !
உபதேசம் செய்கின்றவன், தியானம், யோகா சொல்லி கொடுப்பவன் குரு அல்ல . உனக்கு நல்வழி சொல்லி தருபவனே குரு ! உன் வாழ்வை அழகுபடுத்தி ஆனந்திப்பவனே குரு ! வினை அறுக்கும் சூட்சுமம் குருவுக்கு உண்டு !
நல் குருவை மனதில் நினைத்தாலே உனக்கு நல்வழி கிடைக்கும். இது ஒப்புயர்வற்ற பிறவி. கடவுளை அடைய எளிய பிறவி இது. கடவுளை கண்களால் அறியும் அற்புத பிறவி இது. இந்த பிறவி பெருங்கடலை கடக்க நல்குருவை நாடு !
உன்னுள் உறங்கும் ஆண்மாவே கடவுளிடம் உன்னை சேர்க்கும். அதை ஒழுக்கம், கடமை என்ற லக்கான் போட்டு தட்டி எழுப்பு ! ஆயிரம் புரவியின் வலிமையோடு உன்னை நிரீபிக்கும்.
உள்ளன்போடு கடவுளை நெருங்கு ! உன் வினை அழியும்.
வினை அறுக்கும் சூட்சுமம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment