07-05-2017 என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் இனி செல்வ செழிப்பாகும். நீர்,தானியம் ,நிம்மதி நிச்சயம் கிடைக்கும், உன் இல்லத்தில் இனி சேமிப்பு உயரும் . உன் பணபிரச்சினை , மனபிரச்சினை என் நாமம் தீர்வு தரும் , என் சத்திய பாதையில் பயணிப்பவன் இனி நிம்மதி நிறைந்து என் ஆசியில் ஆனந்தமாய் வாழ்வான் இநன்யா சொல் சத்தியமடா.
13-05-2017 என்னை சிக்கென பிடி,வெட்டென மற வேதனை உனக்கில்லையடா.நோய்,வறுமை, துண்பம் என்று அற்ப விஷயத்தை தான் என்னிடம் கேட்ககண்டேன் ,எப்போதும் எல்லா செயலிலும் ஆனந்தம் கொடு என்று கேட்க நான் காணேன்,நிச்சயம் என்னை நம்பியவர்களை இந்த இநன்யா கைவிட மாட்டேன்.ஆனால் தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு அது கடவுளாக இருந்தாலும்.என் சத்திய கரங்கள் உன்னை கைவிடாது காக்கும் பயப்படாதே. இநன்யா நமோ நம !!!
17-05-2017 சோர்ந்து துவண்டு போகும்போதெல்லாம் என் நாமத்தை சிக்கென பிடித்து கொள். நீ எல்லா துண்பத்திலிருந்தும் காப்பாற்ற படுவாய் . தினமும் சொல்கிறோமே பலன் இல்லை என்று வருத்தபடாதே. ஒர் நாளில் விதை போட்டு ஓர் நாளில் பலன் கிடைப்பதில்லை. இந்த இநன்யா பெருவயல் என்னில் போட்டவிதை சோடைபோகாது நிச்சயம் பலன் தருவேன். பயப்படாதே நான் உன்னை கைவிட மாட்டேனடா. என் சொல் சத்தியம்.
20-05-2017 சுயநலத்திற்காக என் நாமம் சொல்லி சொற்ப நேரத்தில் காணாமல் போகும் அற்புத மனிதர்களையே கண்டேன் ,ஆனாலும் எந்த துண்பம் தடைகள் வந்தாலும் என்நாமத்தை கெட்டியாக பிடித்திருக்கும் சில தர்மகுலங்களை நான் பார்க்கிறேன் .யானையின் பலம் யானைக்குத்தான் தெரியும், என் பலம் பெரிது,என் படையும் பெரிது,எனக்குத்தான் தெரியும் இநன்யா பாதை சத்திய சத்திய பாதை, அது கரடுமுரடான பாதை இந்த சத்திய பாதையில் பயணிப்பவனை ஓர்நொடியும் கைவிடுவதில்லை நான் சுட்டு விரல் பிடித்து இருக்கிறேன் தோற்க மாட்டான் எப்படியாவது இலக்கை அடைந்தே தீர்வான். என் பார்வை உன்னில் தான் உடைத்தெறி உன் துண்ப கட்டுகளை உண்மையில் நன்மை நான்,ஓர்மையில் சொல்கிறேன் உன்னை எப்போதும் கைவிட மாட்டேன்.
இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment