Inanya Maha Munivar to
13-04-2017
நீச வாகனத்தில் நிலத்தில் பயனித்தேன் ! நிம்மதியாய் வாழ்ந்தேன் நீசன் (மனிதன்) படைத்ததெல்லாம் (கர்மா) எமனாக உயிர் கொல்லக் கண்டேன்.
கருவி ;;;
நீ ஒரு கருவி ! கருவிக்கு ஏது இன்ப துன்பம் ? அதன் கடமையை செய்வது தான் அதன் வேலை ! அதிகாரம் என்பதெல்லாம் ஏதுமில்லை ! கடவுளின் அதிகாரம் ஆணவமில்லை. உன் மெய் உடலே அதிகாரம் செய்ய யோக்தை உண்டு ! நீ அதிகாரம் கொண்டால் உன் உயிரை வைத்து உடல் கொல்வான் கடவுள். ஆதலால் அதிகாரம் கொள்ளாதே !
உயிர் ஊதி படைக்கப்பட்ட நீ, உண்மை தெரியாமல் வாழ்கின்றாய். சொல்ல வொனா துயரமும், துன்பமும் நீ அதிகாரம் கொள்வதால் தான். எதையும் அறிந்து உணர் ! ஆள்பவன் உனை ஆனந்த பாதைக்கு அழைத்து செல்வான் !
ஐம்புலன்கள் என்றால் மெய், கண், செவி, வாய், மூக்கு என்று நினைக்கின்றான். இவைகளுக்கு பெயர் “பொறிகள்” என்று அர்த்தம். புலன்கள் என்றால் பார்ப்பது, கேட்பது, சுவைப்பது, தொடுவது, முகர்வது (புணர்வது). இவைகளுக்கு தான் புலன்கள் என்று அர்த்தம். பொறிகளின் செயல்களே புலன்கள்.
உன் பொறிகளுக்கும், புலன்களுக்கும், எனக்கும் தொடர்பில்லை ! உன் உயிருக்கும் எனக்கும் தொடர்பு ! பொறிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை. அவைகள் தனித்தனியே இயங்குகின்றன. உன் கபாலத்தில் இருக்கும் ஆறு சூட்சும நரம்பே எல்லாவற்றையும் இயக்குகின்றது !
புலன்களுக்கு மனிதன் அடிமையாகி போனதாலே மீண்டும் மீண்டும் பிறக்கின்றான் இங்கு. மனம், ஆணவம், கீழ்புத்தி, சித்தம், சபவம் ஆகிய இந்த கேடுகெட்ட கருவிகளை புலன்களில் கோர்க்கின்றாய். அது பொறி மூலமாக உனக்கு துன்பத்தை தருகின்றது.
சிருஷ்டியின் ஒரு துளி விந்தை இந்திரியம் என்று சொல்கின்றாய். (மனம், ஆணவம், கீழ்புத்தி, சித்தம், சபவம்). இந்த கேடுகெட்ட கருவிக்கும் இந்திரியம் என்று பெயர். இந்திரியம் என்றால் பாவம். இந்திரியத்தை உபயோகித்து மீண்டும் பிறக்காதே. உன் பாவத்தை பூமியில் விதைக்காதே ! புலன்களை தனித்தனியாக கண்கானி !
எல்லாம் சேர்ந்தால் மனம் ஒன்று உருவாகும். அந்த மனம் தான் உன்னை மதிமயக்கி உன்னை அறியாமல் வைக்கிறது. துன்பம் இருப்பது போல நடித்து உன்னை சோர்வாக்குகிறது. இதில் ஆழகருத்து உண்டு ! மீண்டும், மீண்டும் உள்வாங்கு ! பின் அறிவாய் ! தெளிவாய் !
நான் என்று நினைப்பதாலே மனம் தோன்றுகிறது. கெட்ட செயல், கெட்ட சிந்தனை, கெட்ட எண்ணம் கொண்டு உன் கருவிகளை துருபிடிக்கவிடாதே ! புத்தி பேதலித்து சித்தம் தடுமாறி வந்த வழி தேடுகின்றாய். வசந்தவாசல் ஒன்று இருப்பதை மறந்து பாதை மாறி பயணிக்கின்றாய். ஒருத்தனுக்கு, ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறி மதுவும், மாதுவும் தொட்டு ஞானம் வேண்டும் என்று அலைகின்றாய். இல்லறத்தை நல் அறமாக்கி வாழ்பவனே ஞானம் தேடுவான் ! போகின்ற வழியை தேடாமல் மீண்டும் வந்த வழியை தான் தேடுகின்றாய். என்னே உன் அறியாமை ?
கருங்குழியில் பிறந்து, கருங்குழிக்கே சொந்தம் என்பதை மறந்து நீ தேடும் வழி மரண வழி என்பதை மறவாதே !
ஒருத்தனுக்கு, ஒருத்தி என்ற கட்டுப்பாட்டோடு வாழ் ! வசந்த காலம் உன் காலடியிலே ! இங்கே சுகமாக வாழ்வதற்கு யாருக்கும் தெளிவில்லை. தவறு என்று தெரிந்தும் அறிவை கீழ்நிலைக்கு தள்ளுகின்றான். அறிவோ, ஆற்றலோ இங்கே மீறினால் அகங்காரம், கோவம் தான் விளையும்.
இல்லறத்தில் இருந்து கொண்டு இன்ப, துன்பத்தை சமமாக பாவித்து, மற்றவருக்கு ஆனந்தமாக வாழ வழிகாட்டுபவன் தான் யோகி !
இல்லற தர்மமே இங்கே உயர்ந்த தர்மம் ! ஒழுக்கத்தோடு வாழ்வது தான் சிறந்த தர்மம் !
நீ ஒரு கருவி என்பதை புரிந்து கொள் ! கருவியை துருபிடிக்க விடாதே ! கடவுளின் பாதத்தை எப்போதும் பற்று ! உன் கருவி பொறி துரு பிடிக்காது.
செயல்வடிவம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment