Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, April 4, 2018

நிம்பத்தை தின்று உண்டு, வணங்கி நிம்மதியை தொலைக்க கண்டேன். பிரியாம்பு வலிமை உணராமல் ஊமை கூட்டமாக வாழ கண்டேன். மலர்களின் பயன்கள் ;;;

Inanya Maha Munivar
நிம்பத்தை தின்று உண்டு, வணங்கி நிம்மதியை தொலைக்க கண்டேன். பிரியாம்பு வலிமை உணராமல் ஊமை கூட்டமாக வாழ கண்டேன்.
மலர்களின் பயன்கள் ;;;
அலரி, கொக்கிரகம், வென், செந்தாமரை, வில்வம், கோங்கம், நீலோத்பலம், தும்பை மலர் முதலிய இந்த ஏழு புணித மலர்களும் ஏழு பேராத்மாக்களுக்கு பிடித்தது. இதை ஒரு சேர எடுத்து பூமியில் வைத்து ஆகாயத்தை நோக்கி வணங்கு ! உன் இன்பம் எதுவென்று உணர்வாய் !
மலர்கள் மண்ணில் உன்னை உணர வைப்பதற்காக படைக்கப்பட்டது. மலரின் குணம் தெரிந்தால் மகேஸ்வர நிலையை அடைவாய் !
கீழே வரும் மலர்கள் கடவுளுக்கு படைக்கலாம். ஞான பெண்களும் தலையில் சூடலாம். அபரிதமான பலன்கள் உண்டு ! தாமரை மலர் உன் தலையில் உள்ள ஆறு நரம்புகளையும் தட்டி எழுப்பும் சக்தி உள்ளவை. தலையில் உள்ல வியாதி அனைத்தையும் தீர்க்கும் ! மனதில் உள்ள தீய எண்ணங்களை நீக்கி மன அமைதியை தரும் ! செல்வம் நிலைக்க வைக்கும் !
வில்வம் உன் சுவாசத்தை சீராக்கி உன் உயிர் நிலையை அறிய வைக்கும் !
பாரி ஜாதம் லோகத்தை தெரியபடுத்தி, எதிர்காலத்தை நலமாக நிர்ணயிக்கும்.
ரோஜா கண் நோய், தலை சுற்றலை நீக்கும் !
மகிழம் வாய் குறைபாடு, முக்கியமாக பல சம்பந்தப்பட்ட வியாதிகள் அனைத்தும் தீர்க்கும் !
மல்லிகை மன அமைதிக்கு உதவும் ! தாம்பத்யம் சிறக்க, தாய்பால் சுரக்க உதவும். உடலில் குளிர்ச்சி ஏற்படுத்தி ஆண்மையை பெருக்கும்.
செண்பகம் எழுபத்தி ஆறு வகை வாதங்களையும் சரியாக்கும் !
செம்பருத்தி தலை முடிப் பிரச்சனைகளை சீர்படுத்தும் !
கணகாம்பரம் தலைவலியை குணமாக்கும் !
பன்னீர் உனை பக்குவபடுத்தி பாசமாக்கும் !
பாதிரி செரிமான பிரச்சனைகள், காது பிரச்சனைகள், கண் எரிச்சல் குணமாக்கும் வல்லமை பெற்றது.
சித்தகத்தி தலைவலியை (ஒற்றை) உடனே போக்கும் !
தாழம்பூ மிதமான தூக்கம், வீரியம், வினை அழிக்கும் சூட்சுமத்தை தரும் !
முல்லை உன் ஞான உணர்வை தூண்டும் ! உன் இதயத்திற்கு நன்மை தரும்.
சம்பங்கி எப்போதும் ஆணந்தம் நிலைக்க வைக்கும் !
மரி கொழுந்து உன் உடலில் உள்ள நாற்றங்களை அகற்றும் !
மலர்களை எல்லாம் கடவுளுக்கு படைத்துவிடு என்று முன்னோர் சொன்னார்கள் ! உணர் ! தலையில் சூடாமலிருந்தாலும் கைகளின் ஸ்பரிஷத்தால் உணரும் போதும் உன் உடல் நிலை ஆனந்தம் தரும். உன் உயிருக்கு நிம்மதி தரும் என்று சூசகமாக சொல்லிப் போனார்கள் !
பூக்கள் உன் உள் சாப்பிடுவதால் வரும் பலன்கள் அறிவாயோ நீ ? கேளடா !
தென்னம்பூ திகைப்பை தரும் !
வாழைப்பூ சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும் !
நெருஞ்சி கல்லீரலை பக்குவப்படுத்தும் !
பூவரசம்பூ உடலில் உள்ள தோல் வியாதியை அகற்றும் !
புனித தும்பை பூவில் உள்ள தேன் உனை தூய்மையாக்கி உனை வசப்படுத்தும் ! அமாவாஸ்யைக்கு இரண்டு நாள் முன் அதில் தேன் இருக்கும். தேனியும், தும்பியும், தேன்சிட்டும் சாப்பிட்டு இன்பமாய் வாழ கண்டேன். இந்த அற்ப மனிதருக்கு தான் ஏதும் தெரியவில்லை !
வாழைப் பிஞ்சு உருவாகும் முன் இதழில் தேன் இருக்கும். மிக அற்புத மகத்துவம் நிறைந்தது. இதை பக்குவமாக உண்பவன் ஞான நிலை அடைவான் !
மாம்பூ உன் உடலில் உள்ள கழிவுகளை அகற்றி நோயில்லாமல் வைக்கும் !
சுத்தமான தேனில் புனித பூக்கள், மலர்களின் மகரந்தம் இருக்கும். உன் நரம்புக்குரிய எண்ணிக்கையில் (333) மலர்களில் தேன் இருக்கும் ! எழுபத்து ஆராயிரம் வகை நாடி நரம்புகளுக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்கும் ! படைப்பின் ரகசியத்தை உணர் !
மகிழம்பூ, சந்தனப் பூ, ரோஜா, செண்பகம் உன் வாத கபத்தை சரி செய்யும்.
வாழைப் பூ உன் பித்தத்தை சரி செய்யும் !
நந்தியாவட்டை உன் கண்களுக்கு குளிர்ச்சி தரும். கண் நோய் முற்றிலும் அகற்றும்.
அரளி மென்மை, ஸ்பரிஷம், ஆனந்தம் தரும் அதனாலே சித்தர்கள் நந்தவனத்தில் அமர்ந்து நாட்டுநடப்பு பேசக் கண்டேன் !
இன்னும் எத்தனையோ ரகசியங்கள் நான்கு கோடி மலர்களில், இரண்டு கோடி பூக்களிலும் ! நீ எதை அறிந்து எதை உண்டாயடா ?? உணர் !
மலரின் ஞானத்தை உணரடா ! பூக்களில் இருக்கும் தீரும் தத்துவத்தை !
ஞானமலரின் நாயகன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment