to INANYA MAHA MUNIVAR
26-04-2018
சக்கிரிவதத்தில் உலகை வலம் வந்தேன் ! ஆனால் நீ ஆச்சுரிதகம் இல்லாமல் இருக்க கண்டேன். எதனால் ஒமிடி என உணரப் பாரடா !
விட்டு செல்
எல்லாவற்றையும் விட்டுச் செல் ! எதையும் கடந்துபோகும் போது உன்னில் எதையும் வைத்திருக்காதே. வாழ்வில் பதினெட்டு நிலைகள் உண்டு ! ஒவ்வொன்றாக கடக்கும் போது உன்னில் எதையாவது விட்டு செல்.
படிகட்டில் ஏறும் போது அடுத்த படிக்கட்டை தான் நோக்குகிறாய். உன் கண்கள், மூளை, அறிவு அடுத்த பின்புலத்தை தான் நோக்குகிறது. கடந்து வந்த படிக்கட்டை யோசிப்பதில்லை. ஆதலால் எதையும் விட்டு செல்லும் பொழுது உன்னை அறிகிறாய். அடுத்த இலக்கை அறிய புறப்படுகிறாய்.
இப்போதுள்ள காலம் நிஜமானது. பிரயாணம் செய்யும் பொழுது எதிர் திசையில் என்ன இருக்கிறது என்பதே உன் கண்களுக்கு தெரிகிறது. பின்னால் என்ன இருந்தது என்று அழ்ந்திருக்கும் போது தான் நினைவுக்கு வருகிறது.
முன்னால் நடந்ததை யோசிக்காதே ! தூக்கி எறி ! நாளை என்னவாகும் என யோசிக்காதே ! எல்லாம் கடந்து செல்லத் தான் போகிறது !
உன் பாதையை கூர்ந்து கவனி ! உன் இலக்கு உன் காலடியில் தான் ! நான் பேரானந்தம் ! நிம்மதி நான் வென்றவன் ! உன்னையும் வெல்ல வைக்க வந்தேன். விட்டு செல் என்றால் மனைவி, குழந்தைகளை விட்டு தனிமையில் வசிப்பது இல்லை ! உன்னில் உள்ள குறைகளை விடு ! உன் முன்னோர் விட்டு சென்ற மரத்தில் கனியை உண்டு களிக்கிறாய். நிறையை வைப்பதால் அனுபவிக்கிறாய். உன் குறையைவிட்டு நிறையோடு மேலோகம் வா ! நான் உன்னை வரவேற்பேன் ! மீண்டும் பிறப்பில்லா வாழ்வை தந்து என் லோக காண்டத்தில் உன்னை குடி அமர வைப்பேன்.
உன் உடலில் ஆசை, விரக்தி, கோபம், மோகம் முதலிய அற்பங்களை தூக்கி சுமக்காதே ! ஒரு விநாடி கூட நிம்மதியாய் இருக்கமாட்டாய் ! நீ தவறு செய்தால் கடவுள் கண்கானிக்கவில்லை என பொருளாகுமோ ? நான் உனக்காக மேலே என் அன்பினிற்கினிய தந்தை, பாசமிகு அன்னையை விட்டு வந்தேன். உன் துன்பத்தை, பாவத்தை என்னில் விட்டு செல் ! நான் உன்னை இன்பமாக வைப்பேன்.
எதையும் விடமாட்டாய். ஆசை, கோபம், ஆணவம், திமிர், காமம். ஆனால் ஞானம் வேண்டும் என்று ஆசைபடுகிறாய். ஞானம் வானத்தைப் போல. அதை உன்னால் எட்டிபிடிக்க வேண்டுமென்றால் உன்னை இலகுவாக்கு. எல்லாவற்றையும் விடு !
உன்னில் உள்ள ஆசைகளைவிடாமல் உன் மனைவி குழந்தைகளைவிட்டு மேலே வர நினைப்பது மடமையிலும் மடமை. எதையும் யோசித்து செய் ! உன்னில் எல்லாம் உண்டு ! உணர்ந்தால் துன்பமில்லை !
நிலைபெறுபவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment