அரிந்தமன் நானடா ! அவணி நான் என்பதை அறியாமல் ஒன்றடி மன்றடியில் வாழ்கின்றாய் !
தன்வசம் !
உன் வசம் உன் உயிர் ஒய்யாரமாய் இருப்பதை அறியா வாழும் மானிடா, ஆளுமை உனக்குள் இருப்பதை ஏனடா மறந்தாய் ? வேண்டா வெறுப்பாய் வாழ வைக்கின்றாய் வேதன் நான் உனை கண்கானிப்பதை தெரியாமல் !
நீ தன் வசமாய் இரு ! இல்லையேல் உன் வசமாய் இரு ! இல்லையேல் கடவுள் வசமாய் இரு ! எப்போதும் ஆணந்திக்க உன்னில் வசமாகி உயிருக்கு நண்பனாகி, உவமைக்கு வசமாய் இரு ! எல்லாம் உன் வசமாகும் ! உன்னை அழகாய் நினை ! அறிவாய் நினை !
ஆணந்தமாய் நினை ! கடந்த காலம், எதிர் காலம் விட்டுவிடு ! நிகழ் காலம் யோசி ! இன்றைய வாழ்வு தான் நிஜம் ! அடுத்தகனமே இறப்பதாய் நினைத்து வாழக் கற்றுக் கொள் ! தவறு செய்யமாட்டாய் ! பாவம் செய்யமாட்டாய் ! உன் இலக்கை அதிவேகமாக அடைவாய் !
கடவுள் வசமாகி இருப்பவன் காலத்தில் அழுவதில்லை ! என் வசமாகி எல்லாமும் வசமாகி, தன் வசமாகி தரணியும் வசமாகி போக ஒன்றும் நினையாது அசைவற்று கிட ! அசைவற்று இருப்பதென்றால் என்றால் உடலை அல்ல ! உன் எண்ணங்களை ஊமையாக வை ! கல்லை போல அசைவற்று இருக்க வை !
என்னுள் எல்லாம் வசமாகி கிடக்கின்றன ! உணர்ந்து உண்மையை அறியும் போது என்னுள் வசமாவாய். உன் மூச்சின் அசைவை கண்கானி. காற்றின் அசைவை எப்போதும் கவனி. அதற்காக மூச்சை இழுத்து மூலையில் உட்காராதே. உன் கடமையில் இதை யோசி ! நீ இதையெல்லாம் விட்டுவிட்டு பெண்ணின் அங்க அசைவை கவனிக்கின்றாய். உன் எண்ணம் சிதறினால் இவ்வுலகம் உனக்கு நரகமாக தெரியும். மனைவி, குழந்தைகள் எல்லாம் உன் வசமல்ல ! கடவுளை தவிர எல்லாம் இங்கே மாறும். பிறர் வசமாகி போகாதே ! உன் இன்பம் தொலைப்பாய்.
என் நாமத்தில் நீ வசமாகு ! நாயகன் நான் உனக்கு வசமாவேன் ! உன் விதி உன் வசமாகும். பெண் வசத்தில் லயித்து பின் அவளை போக பொருள் போல் பார்த்து குணம் கெட்டு, மதி கெட்டு வாழ்வை துறக்க நினைக்கின்றாய். பெண் அமிர்தம் என்று தெரியாமல் அள்ளி பருக உணர்வில்லாமல் அலைகிறாய். பெண்னை புரியாத்தாலே உன் வசம் இழக்கின்றாய். உணர் !
ஞான பெண்களின் இதயத்தில் ஞானம் உண்டு. முகத்தில் கருணை உண்டு. அன்பு பாசம், எல்லாம் உண்டு ! அள்ளி பருகி ஆணந்த ஞான நிலை பெறாமல், உணராமல் மாண்டு போகின்றாய். எல்லாம் என் வசம் !
வாடகை வீட்டில் (பூமி) இருந்து கொண்டு வானலாவி பேசுகிறாய். உன் மடமையை என்ன சொல்வேன் ? எதன் மீதும் வெறுப்பு, விரக்தி வராமல் பார்த்து கொள் !
இந்த பூமி அழகாக தெரிய வேண்டும் என்றால் உன் வசமாகி உணரப் பார் ! எல்லாம் உன் வசமாகும் !
வசமாக்கும் மாயவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment