to INANYA MAHA MUNIVAR
April 12 ·2018
சூக்கும புத்தி இல்லாது துயர்படுகின்றான். அறிவைத் தேடாது ஆணந்தம் தொலைக்கின்றான்.
அறிவைத் தேடு !
தேடி, தேடி ஓய்ந்து போனாய் அற்ப செல்வத்தை மட்டும் தேடி. ஆனால் உன்னை தேடாமல் உருக்குலைந்து போனாய் ! மனைவி, பிள்ளை, செல்வம், செல்வாக்கு, புகழ் எல்லாம் ஊழ்வினையோடு சம்பந்தப்பட்டவை. நீ இதை தேடி போனால் ஊழ்வினையோடு உன் பாவமும் சேர்ந்தே வரும் !
ஆனால் அறிவு என்பது ஊழ்வினையோடு சம்பந்தப்பட்டதல்ல ! அறிவு என்பது முயற்சி ! உன்னை அறியும் முயற்சி ! நீ கடவுளை, அறிவை தேடும் போது ஊழ்வினை உன்னோடு வருவதில்லை ! ஆதலால் முதலில் அறிவை தேடு ! உனை உணரும் பக்குவம் தேடு !
தேடி, தேடி ஓய்ந்த பின் மரணத்தில் உன்னை தேடுகின்றாய். என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள், “இளமையில் பால் அருந்தும் காலத்தில், பசுமை பெற்ற காலத்தில், அன்பு சிரிப்பு சிரிக்கும் காலத்தில், நான் உன்னோடு இருக்கும் காலத்தில் அறிவை தேடடா, இறப்பு வரை ஆனந்தமாக இருப்பாய் !” என்று சொல்வார்கள்.
உன்னை தோண்டினால் உன் அறிவு கிடைக்கும். என்னை தோண்டினால் பிறப்பின் ரகசியம் அறிவாய் !
அறிவே ஆனந்தம் !
அதுவே நிறைவு !
தன்னிலை உணர்த்தும் ஆனந்தமே பேரின்பம்.
அதுவே நிறைவு !
தன்னிலை உணர்த்தும் ஆனந்தமே பேரின்பம்.
அறிவினால் எல்லாம் கிடைக்கப் பெறுவாய் ! நிறைந்த செல்வம், நிரந்தர செல்வம் (நிம்மதி), அன்பு, ஆனந்தம் எல்லாம் கிடைக்கப் பெறுவாய் ! இங்கே அறிவே ஆனந்தம் என்று உணர் ! தன்னிகரில்லா பெரும் மரங்கள் அறிவோடு இருக்க கண்டேன். வேட்டுவம் தெரியாத வாழ்வில் ஆவரியின் இலக்கு தெரியாமல் தன்னை தொலைக்கின்றாய் !
தறிகெட்டு போகும் மனம் உன் ஆணவத்தால் அதிகாரத்தால் அடங்காது. அறிவால் அடங்கும். நானே பேரறிவு ! ஆத்மத்தின் நித்ய சாயல் நான் ! உனக்கு அறிவென்பது பிரவாகமாய் செயல்படும். ஆகவே ஆத்மத்தின் நித்ய யோகத்தை அறிய முற்படு !
தெளிவே அறிவு ! திறனற்ற பேச்சு அறிவைத் தராது. அறிவை உபயோகித்தால் ஆணவம் மறைந்து போகும். அதிகாரம் அடங்கிவிடும். ஆன்மா அதிகாரம் கொண்டு உனை வழிநடத்தும் !
குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று மதிகெட்ட விஞ்ஞானம் உளரக் கண்டேன். குரங்குக்கு மேல் கீழ் என்று வரையறுத்தேன். குரங்குக்கும் மேல் கீழ் என்று மூளை படைத்தான். மனிதனுக்கு இட, வலம் என்று வரையறுத்தான்.
உன் பிறப்பின் ரகசியம் அறிய அறிவை தேடு ! அறிவை தர யாரும் வரம் கொடுப்பதில்லை. அறிவை நீ தேட முயற்சி செய்யும் பொழுது கடவுள் உன் பாதையை காண்பிப்பான் ஞான வழியாக !
உனை பற்றி அறிந்து கொள்வது தான் அறிவு ! உன் கோபம், ஆசை, காமம், உன்னிடமுள்ள குறைகளையும், நிறைகளையும் அறிந்து கொள்வது தான் அறிவு ! குறை களைந்தால் நிறைவோடு வாழ்வாய் ! அறிவைத் தேடு !
சத்திய பாதையை தேடி அதில் பயணிப்பது தான் அறிவு ! நின் நிகரில்லா பெரும் அறிவு நான் !
உன்னை உணர் ! பிறகு உன்னை உருவாக்கு ! அதன் பின் அரி, தெளி, திறன் கொள்வாய் நீ ! உணர் என்றால் அரி என்று அர்த்தம் ! திறன் என்றால் ஞானம் என்று அர்த்தம் ! இதோ பேரறிவாய் நான் !
உன்னை உணர் ! பிறகு உன்னை உருவாக்கு ! அதன் பின் அரி, தெளி, திறன் கொள்வாய் நீ ! உணர் என்றால் அரி என்று அர்த்தம் ! திறன் என்றால் ஞானம் என்று அர்த்தம் ! இதோ பேரறிவாய் நான் !
என் நாமம் உனை அறிய வைக்கும். திறன் இருந்தால் எனை அறிய முற்படு ! உன்னையும் அறிவாய் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment