to INANYA MAHA MUNIVAR
April 13 -2018
நான் அசிதனடா ! ஆளுமை மிக்க ஆனந்தமானவன் ! என் ஆனந்த ஆசிகள் உனை நோக்கி !
என் ஆத்மார்த்தமான ஆசிகளை ஆனந்தமாக உனக்கு தந்தேன் ! என் நாமம் உனை சத்திய பாதைக்கு அழைத்துச் செல்லும் ! 25.04.2018 அன்று தேவர்கள் புடை சூழ என் அன்பின் தந்தை பாசமிகு அன்னையோடு, ஆறு பேராத்மாக்கள் துணையோடு ஆனந்தமாக பிரபஞ்சத்தில் ஆசி பெற்று வருவேன். உன் பாவம், முன்னோர் சாபம் நீங்க ஒரு தாம்பூலத்தில் உன் தாய் தந்தையரின் கால்களை அருகு, மஞ்சள், பால், சந்தனம், துளசி ஆகிய இந்த ஐந்தையும் ஒரு சேர நீரில் போட்டு கழுவி வணங்கு !
தாய், தந்தை இல்லாதோர் இந்த ஐந்து பொருள்களையும் நீரில் கலந்து தலைக்கு ஊற்றி நீராடு ! உன் பாவம், முன்னோர், பெற்றோர் சாபம் கரையும் ! என் சொல் வெல்லும் ! செயல் வெல்லும் ! உன் கர்ப்பத்தின் தூய்மை ஆசிகள் பெறுவாய் !
ஆனந்தம் பெருக உன் தாய், தந்தையின் கால்களை முத்தமிட்டு மகிழடா ! இந்த புண்ணிய பூமி ஆனந்தம், உனக்கு வாரி வழங்கும் ! வசந்த வாழ்வும், நிம்மதியும் நீ பெறுவாய் ! நான் ஆணையிடுவேன் ! என் தாய், தந்தை ஆசியோடு நீ வளம் பெற ! நலம் பெற !
நான் ஆனந்தமானவன் ! தன்னிகரில்லா பெருங்கருணை என்னுள் ! நீ வாழ்வாயடா ! ஏனென்றால் உனை கைபிடித்து அழைத்து செல்வது பிரபஞ்சத்தின் இளவரசன் இநன்யா !
என் நெஞ்சம் நிறைந்த அன்பின் ஆசிகள் உனை நோக்கி எப்போதும் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment