to INANYA MAHA MUNIVAR
01-02-2018
இங்கே அசிந்தியம் உன் ஆண்மா தான் ! அறிந்தவன் ஞானியாய், மகானாய் ஆகிறான் !
சகுனம் ;;;
குணமில்லை, மனமில்லை, மணமில்லை, இனத்தில் இணக்கமும் இல்லை ! ஆனால் துன்பமான மனித வாழ்வில் சகுனம் பார்க்கின்றான். மனமுடித்து கணவன் இறந்தால் பெண்ணை விதவை என்கின்றான். பெண்ணை அடிமையாக்கி பேடியாகி வாழ்கின்றான்.
வெளியில் செல்லும் பொழுது எதிரில் வந்தால் சகுனம் சரியில்லை என்று பிதற்றுகின்றான். சாதியும், சாஸ்திரமும், சகுனமும் அற்ப மனிதன் வகுத்த மடமையடா ! எதை ஒதுக்கி ஆனந்தம் என்று நினைக்கின்றாயோ அது தான் உனக்கு இன்பம் என புரிந்து கொள் !
நீ செல்லும் பொழுது எதிரே கணவன் இல்லாது வாழும் பெண் வந்தால் உன் காரியம் நிச்சயம் வெற்றியாகும். வேண்டுமென்றால் சோதித்து பார். நான் சத்தியம் என்பது தெரியும் !
வீடு பால் காய்ச்சுவதற்கோ அல்லது பிற விஷேசங்களுக்கோ என்னை அழைக்கும் போது இப்படி ஒதுக்கி வைத்த பெண்ணை வைத்து சுபகாரியங்கள் தொடங்க சொல்வேன். அதை மறுக்காமல் செய்திருக்கின்றனர்கள். இப்போதும் அவர்கள் நலமாக இருப்பதாக சொல்வதைத்தான் கேட்பேன்.
இங்கே எல்லாம் பயமுறுத்தி, அடிமையாக்கி, ஆளுமையை மறந்தான். நீ செல்லும் இடம், நினைக்கும் காரியம், நடக்கும் காரியம் எல்லாம் வீதியில் முடிச்சி போட்டது. பின் வீதியிலே நின்று ஏனடா புலம்புகின்றாய் ? அதை விடுத்து கணவன் இல்லாது வாழும் பெண் முன்னே வந்தால் எப்படி துன்பம் வரும் ? பூனை குறுக்கே வந்தால் நல்லதல்ல என்று புலம்புகின்றான். காகம் வலமிருந்து இடம் சென்றால் நல்லதல்ல என்று புலம்புகின்றான். நீ அனைத்தையும் எதிர்த்து உன்னை நம்பி உன்னுள் இருக்கும் கடவுளை நம்பி எப்போது பிரயாணிக்கிறாயோ அப்போது நீ லட்சிய பாதையை நோக்கி பயாணிக்கின்றாய் என்று அர்த்தம் !
ஆதியிலே மன்னர்கள் வேட்டையாட செல்லும் பொழுது பூனை நடமாட்டம் இருந்தால் அந்த இடத்தில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்று போர் தொடுக்காமல் திரும்பி செல்வார்கள். அதை அப்படியே மாற்றி பூனை குறுக்கே போனால் நல்லதல்ல என்று புலம்புகின்றான்.
நீ யாரையும் ஒதுக்காதே ! அவர்களால் தான் வாழ்வு என்பதை மறவாதே ! கைராசி, முகராசி என்று புலம்பாதே ! வீரியம் கொண்டு வாழ நினை ! அனைத்திற்கும் இங்கு அதிர்ஷ்டம் தேவை என்று வீனாய் புலம்பாதே ! இங்கே யாரும் இருக்க வரவில்லை. இறக்க வந்தான் ! ஆனால் சிறக்க போக யாரும் முயலவில்லை !
“சகுனம் பார்த்தாய் ! சாஸ்திரம் பார்த்தாய் ! நாள் பார்த்தாய் ! நட்சத்திரம் பார்த்தாய் ! ஏது பலன் கண்டாயடா ?” என்று என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் !
அடிக்கடி இறந்து (துன்பம்), அடிக்கடி பிறந்து (இன்பம்) அனுபவத்தில் அடிவைத்து எழுந்து நில்லடா ! ஆளுமை வெறி கொண்டு ஜெயித்து நில்லடா !
நீ இங்கே வெல்லாமல் மரணத்திற்கு பயணிக்காதே ! உன் மரணம் உன்னை வென்றதாக இருக்க கூடாது. நீ மரணத்தை வெல் ! மாயமில்லை ! மூட நம்பிக்கையை விட்டொழி ! வீதியிலே உனை தேடாதே ! உன்னுள் தான் மலர்ச்சி, நிம்மதி, ஆனந்தம் !
உன்னை தெளிவுபடுத்த வந்த மாயவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment