அயிந்திரம் ஆளுமை உள்ளது ! நேத்திரம், சூத்திரம் அறியாது குடக்கில் வீழ்ந்து வணங்கி குறையோடு வாழும் மானிடா, எப்போது அறிவாயடா ?
காலம்
காலம் தான் கடவுள் !
காலம் தான் அனுபவம் !
காலம் தான் எல்லாம் !
காலம் தான் அனுபவம் !
காலம் தான் எல்லாம் !
விதை தானியமாகி, குழந்தையை கிழவனாக்கி முதிர்ந்து போக வைப்பது காலம் தான் ! ஆதலால் காலத்தை போற்று ! நிகழ், எதிர் நான் ! நானே காலம் !
ஒவ்வொரு வளர்ச்சிக்கும் காலம் வேண்டும் ! ஆறு காலத்திலும் உனக்கு மனமகிழ்ச்சி கிடைக்க காலத்தின் நாயகனை நெருங்கு ! அவனிடம் பணிந்திரு ! காலம் எல்லாம் தரும் !
நான் காலச் சக்கரத்தின் மீதேறி நர்த்தனம் ஆடுபவன். உள்ளும், புறமும் நானாக உவகை இல்லா ஆனந்த பொழிவுடன் வளம் வருகிறேன். ஆத்மாவின் ஆனந்த நிலையோடு ! நான் காலனையும் காலடியில் வைத்திருப்பவன் ! உணர் !
காலம் ஒரு நிலைக் கண்ணாடி ! நீ எதை நினைக்கிறாயோ, எப்படி வாழ நிர்ணயிக்கிறாயோ அதே சாயல் தான் உன் வாழ்க்கையின் நிலைபாடு ! உன் புன்னகை எப்போதும் கடவுளுக்கு நன்றி சொல்வதில் ஆரம்பிக்கட்டும். காலம் உனக்கு பரிசு தரும் !
நீ காலத்தை விட்டு விலக முடியாது. விலகினால் மரணம் எனப் பெயர் ! நீ அனுபவிப்பது காலத்தின் செயல். கடவுளின் ஐந்து நிலையை மாற்ற எவராலும் முடியாது. பிறப்பு, இருப்பு, இறப்பு, கர்மா, செயல் இது நிர்ணயிக்கப்பட்டு தான் யுகம் வருகிறாய். இந்த ஐந்து செயலையும் நீ கையிலெடுக்க முடியாது. நீ நல் ஒழுக்கத்தில் நிறைவு பெறும் போது காலம் உனை வரவேற்கும் ! காலத்தை தன்னுள் இயக்குபவன் கடவுள் !
சுழலும் நீர் போல காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. காலச் சக்கரம் என் வலக்கரத்திலே ! நீ வந்து என் சுட்டுவிரல் பிடிக்க முயற்சி எடு ! காலம் உனை நோக்கி சுழலும். உன் முதுமையை யாராலும் தடுக்க முடியாது. ஆனால் நோயில்லாமல் மனதை இளமையாக கல்லறை செல்லும் வரை வைத்திருக்கலாம். அதற்கு காலம் தான் கடவுள் என்று உணர் !
எப்போதும் நன்றி உணர்வு உள்ளவன் எனை நோக்கி பயணிக்கின்றான். நாய் மிகுந்த நன்றி உணர்வு உள்ளது. அதனால் தான் வீட்டில் வளர்க்கின்றான். ஏனென்றால் நாய் வீட்டில் வளர்த்தால் மன அழுத்தம் குறையும்.
அரசனின் அறுகுணத்தை நீ கையில் எடுத்து காலத்தில் கஷ்டப்படுகிறாய். (ஆறு குணங்கள்- பகை, நட்பு, செலவு, இருப்பு, கூட்டல், பிரித்தல்). இந்த ஆறு குணங்களையும் கைவிடு ! ஒரு நாளில் உள்ள 86,400 விநாடிகளில் ஒரு விநாடியாவது கடவுளுக்கு நன்றி சொல் !
காலம் வசந்தகாலம் உனக்கு வரப்போகின்றது ! இந்த காலத்தின் நாயகனால் கரம் பிடிக்கும் மானிடன் நிச்சயம் கரை சேர்வான் !
நான் காலம் ! நான் யுக யுகமாக சுழன்று கொண்டிருக்கின்றேன் ! துன்பம், இன்பம் எனக்கில்லை ! பிறப்பு, இறப்பு எனக்கில்லை !
அயிந்திர திசையில் ஆளுமையோடு வளர்கின்றேன், காலத்தை நிர்ணயிக்க !
காலத்தின் நாயகன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment