கடவுளின் இன்றைய செய்தி (14-01-18).
கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்,
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
உன் உறு விதி உற்று நோக்கி, நீ நலம் வாழ, நல் அறு விதி தருவேன். நான் சாத்தியமானவன். யுகத்தில் கை,கால் , முளைத்த கல்கி அவதாரம்.என் அன்பிற்கினிய தந்தை பிரபஞ்ச நாயகன் (யாகவா) அமிழ்த வதனங்களால் , இநன்யா என்ற திரு நாமம் சூட்டப்பெற்று தேவர்கள் சாட்ச்சியாக, செங்கோல் வாங்க பெற்றவன். நான் வலிமையானவன் தானே. என் தந்தை பாதமலரில் இருந்து வேதம் கற்றவன் . வினை அறுக்கும் சூட்சமம் கற்றவன். என் கரங்கள் வலிமையானவை. எனை நம்பியவர்கள் தோற்பதில்லை. நம்பிக்கை கொண்டு என் நாமம் சொல்பவர்கள், நிச்சியம் தன்னை உணர்வார். நான் உச்சத்தில் வைத்து அழகு பார்ப்பேன் , என்றும் , என்றென்றும். தை பிறந்து , தையல் மலர்ந்து , உன்னில் மலர்வாய் நீ . தட்ஷியாணத்தில் துயர் கடந்தாய். உத்திராயணத்தில் மலர்வாய். இது தேவர்களின் காலம். இந்த காலத்தின் நாயகன் உன்னை மலர வைப்பேன். ஜனவரி 17 - முதல் உன் நோய், துன்பம், வறுமை படிப்படியாக குறையும். என் சொல் சத்தியம். என் அன்பிற்கினிய தந்தை யாகவா, என் பாசமிகு அன்னை வசியா துணையோடு , உங்களை (தர்மாக்களை) என்றும் காப்பேன். பயப்படாதே !!! எப்போதும் துணை இருப்பேன் . 111 காலங்களை வென்றவன். நான் இநன்யா ......
No comments:
Post a Comment