Inanya Maha Munivar to INANYA MAHA MUNIVAR
13-01-2018
நான் சத்யம் !
என் நாமம் சத்யம் !
தேவ வருடத்தின் பகல் பொழுதில் பகல் ஒளி புல், பூண்டு ஜீவனில் வெப்பம் உக்கிரமாக உயிர்கள் உருவாக வட திசை நகர்ந்து உதிக்க வைத்தான் படைப்பின் சூட்சுமதாரி !
அறுகு பிரண்டையில் படியும் பனியை நீக்கி உதிக்க வைத்தான் !
நான் எப்போதும் உன்னில் உதித்துக் கொண்டிருக்கிறேன் !
நீயும் என்னுள் வா !
நீயும் உதிப்பாய் !
நீயும் உதிப்பாய் !
உன் வெப்பம் (உயிர்)உன்னை வாழ வைக்கும். என் கருணை பார்வை நிரம்ப பெற்றவன் நீ வாழ்வாயடா !
வசந்த காலத்தை கையில் வைத்து உன் வாயிலில் நிற்கின்றேன். என்னை உன்னுள் அழைத்து உன் வாழ்வை வசந்தமாக்கு !
நான் பேரின்பம் உனக்கும் ஊட்டுவேன் ! உன் வீட்டில் நிம்மதி, தானியம் , செல்வம் நிறைந்திருக்க நான் என் நெஞ்சம் நிறைந்து ஆத்மார்த்தமான ஆசிகள் தந்தேன் !
என் நாமம் சத்தியம் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment