வருமை இருப்பதும் நிஜம் ! வறுமை இருப்பதும் நிஜம் ! இந்த இரண்டையும் இல்லாமல் வைப்பதும் நிஜம் ! எல்லாம் உனக்குள்ளே !
நிஜம்
நான் நிஜம் ! நான் சத்தியம் ! ஆனால் நீ நிழலை தேடி போகின்றாய். நிழலை பற்றி கொண்டு நிம்மதி இல்லாது வாழ்கின்றாய். நிழல் தான் உண்மை, சத்தியம் என்று அதன் பின்னால் அறியாமையில் ஓடுகின்றாய். உன் பயணம் திசை மாறி, தவறாகி, மாயையாகி முடிவுற்று போகிறது. அதன் தாக்கம் தான் விரக்தி, துன்பம், ஏமாற்றம், மன அழுத்தம், இதனோடு தான் சண்டையிட்டு தினமும் வாழ்வை கழிக்கின்றாய்.
நான் நிஜம் ! நான் ஒரு நிலைக் கண்ணாடி. காலத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி ! சத்தியம் தெரியாது உலகில் எங்கெல்லாமோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றாய். புலன்கள் மூலமாக நீ எதையும் அறிகின்றாய். ஆனால் உன் உள் இருக்கும் ஆத்மா உன்னை அறிய வைக்கும். அது நிஜம் ! நீயேன் நிழலை தேடி ஓடுகின்றாய் ?
எண்ணற்ற மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் உன்னை நிஜத்தைத் தேடச் சொல்லி சித்தாந்தம் தான் சொன்னார்கள் ! உணர் !
மரத்தின் நிழல் உனக்கு சுகம் தர கண்டேன். ஆனால் உன் நிழல் துன்பம் தான். நிஜத்தை தேடி கரடு முரடான பாதையில் பயணித்து சித்தர்கள் எல்லாம் தனக்குள் தான் நிஜம் இருப்பதை அறிந்து ஆனந்த கூத்தாடினார்கள். கவியாய், புலமையாய் கடவுளை பாடி பரவசமடைந்தார்கள். ஆனால் நீ அறியாமல் ஆனந்தம் தொலைக்கின்றாய்.
ஆன்மீக பாதையில் பயணிப்பவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். ஆனால் எது ஆன்மீகம் என்று தெரியாததால் தான் துன்பப்படுகிறான். ஆனால் என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள், ஆன்மீகம் அறுபத்து மூன்று வகை என்று !
பக்தியும், பயமும் வழிபாடே ! இவைகளை மனிதன் ஆன்மீகம் என்று பிதற்ற கண்டேன். தன்னை உணர்வது தான் ஆன்மீகம் என புரியவில்லை. பெற்றவர்களை பேணிக் காப்பது தான் ஆன்மீகம். கட்டிய மனைவியை துன்புறுத்தாது இருப்பது தான் ஆன்மீகம். தன்னை உணர்ந்து பிறருக்கு தொண்டு செய்வது தான் ஆன்மீகம்.
கேட்பதற்கு காதும், பார்ப்பதற்கு கண்ணும், உணர்வதற்கு இதயமும் தந்தான். பாவி மனிதன் பாக்கியசாலி தானே ? ஆனால் நன்றி சொல்லத் தெரியாதவன். கல்லுக்கு நன்றி சொல்லும் கயமை உள்ளம் கொண்டவனிடம் ஏது கூற ? நன்றி சொல்லத் தெரியாதவன் நாயகனை (கடவுள்) எப்படி அறிவான் ?
எல்லாம் எனது செயல் ! உனது செயல் ஏதுமில்லை. நான் நிஜம் ! எப்போதும் உனக்கு நிழல் தருவேன் ! என் நிழலில் எத்தனையோ கோடி ஜீவராசிகள் இளைப்பாறக் கண்டேன் !
நிஜத்தை தேடடா ! நீ தேடும் நிழல் நிஜமல்ல ! உணர் !
சுயநலம் உள்ளவனே பாவம் செய்கின்றான். உண்மையைத் தேடிப் போகின்றவன் பாவம் செய்வதில்லை ! நிஜத்தில் இருப்பவன் நிம்மதியோடு இருப்பான் !
நானே நிம்மதி !
நான் இநன்யா !
No comments:
Post a Comment