Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, January 3, 2018

வருமை இருப்பதும் நிஜம் ! வறுமை இருப்பதும் நிஜம் ! இந்த இரண்டையும் இல்லாமல் வைப்பதும் நிஜம் ! எல்லாம் உனக்குள்ளே ! நிஜம்

Inanya Maha Munivar
04-01-2018
வருமை இருப்பதும் நிஜம் ! வறுமை இருப்பதும் நிஜம் ! இந்த இரண்டையும் இல்லாமல் வைப்பதும் நிஜம் ! எல்லாம் உனக்குள்ளே !
நிஜம்
நான் நிஜம் ! நான் சத்தியம் ! ஆனால் நீ நிழலை தேடி போகின்றாய். நிழலை பற்றி கொண்டு நிம்மதி இல்லாது வாழ்கின்றாய். நிழல் தான் உண்மை, சத்தியம் என்று அதன் பின்னால் அறியாமையில் ஓடுகின்றாய். உன் பயணம் திசை மாறி, தவறாகி, மாயையாகி முடிவுற்று போகிறது. அதன் தாக்கம் தான் விரக்தி, துன்பம், ஏமாற்றம், மன அழுத்தம், இதனோடு தான் சண்டையிட்டு தினமும் வாழ்வை கழிக்கின்றாய்.
நான் நிஜம் ! நான் ஒரு நிலைக் கண்ணாடி. காலத்தை பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி ! சத்தியம் தெரியாது உலகில் எங்கெல்லாமோ தேடி ஓடிக் கொண்டிருக்கின்றாய். புலன்கள் மூலமாக நீ எதையும் அறிகின்றாய். ஆனால் உன் உள் இருக்கும் ஆத்மா உன்னை அறிய வைக்கும். அது நிஜம் ! நீயேன் நிழலை தேடி ஓடுகின்றாய் ?
எண்ணற்ற மகான்களும், சித்தர்களும், ஞானிகளும் உன்னை நிஜத்தைத் தேடச் சொல்லி சித்தாந்தம் தான் சொன்னார்கள் ! உணர் !
மரத்தின் நிழல் உனக்கு சுகம் தர கண்டேன். ஆனால் உன் நிழல் துன்பம் தான். நிஜத்தை தேடி கரடு முரடான பாதையில் பயணித்து சித்தர்கள் எல்லாம் தனக்குள் தான் நிஜம் இருப்பதை அறிந்து ஆனந்த கூத்தாடினார்கள். கவியாய், புலமையாய் கடவுளை பாடி பரவசமடைந்தார்கள். ஆனால் நீ அறியாமல் ஆனந்தம் தொலைக்கின்றாய்.
ஆன்மீக பாதையில் பயணிப்பவன் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பான். ஆனால் எது ஆன்மீகம் என்று தெரியாததால் தான் துன்பப்படுகிறான். ஆனால் என் அன்பினிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள், ஆன்மீகம் அறுபத்து மூன்று வகை என்று !
பக்தியும், பயமும் வழிபாடே ! இவைகளை மனிதன் ஆன்மீகம் என்று பிதற்ற கண்டேன். தன்னை உணர்வது தான் ஆன்மீகம் என புரியவில்லை. பெற்றவர்களை பேணிக் காப்பது தான் ஆன்மீகம். கட்டிய மனைவியை துன்புறுத்தாது இருப்பது தான் ஆன்மீகம். தன்னை உணர்ந்து பிறருக்கு தொண்டு செய்வது தான் ஆன்மீகம்.
கேட்பதற்கு காதும், பார்ப்பதற்கு கண்ணும், உணர்வதற்கு இதயமும் தந்தான். பாவி மனிதன் பாக்கியசாலி தானே ? ஆனால் நன்றி சொல்லத் தெரியாதவன். கல்லுக்கு நன்றி சொல்லும் கயமை உள்ளம் கொண்டவனிடம் ஏது கூற ? நன்றி சொல்லத் தெரியாதவன் நாயகனை (கடவுள்) எப்படி அறிவான் ?
எல்லாம் எனது செயல் ! உனது செயல் ஏதுமில்லை. நான் நிஜம் ! எப்போதும் உனக்கு நிழல் தருவேன் ! என் நிழலில் எத்தனையோ கோடி ஜீவராசிகள் இளைப்பாறக் கண்டேன் !
நிஜத்தை தேடடா ! நீ தேடும் நிழல் நிஜமல்ல ! உணர் !
சுயநலம் உள்ளவனே பாவம் செய்கின்றான். உண்மையைத் தேடிப் போகின்றவன் பாவம் செய்வதில்லை ! நிஜத்தில் இருப்பவன் நிம்மதியோடு இருப்பான் !
நானே நிம்மதி !
நான் இநன்யா !

No comments:

Post a Comment