நாள் எண்ணி பிறந்தான் ! ஆனால் நாழிகை எண்ணி இறக்கவில்லை ! நாலிகையின் சூட்சுமம் உணர்ந்தால் கடவுளை அறியலாம் !
ஊழ்வினை ;;;
ஏழு பிறவிகள் அல்ல ! ஏழேழு பிறவி என்பதாகும் ! ஏழு பிறவிக்குள் உன் கர்மாவை முடித்து வா என்று மேலிருந்து அனுப்பப்படுகிறான். ஆனால் இவன் இங்கு பாவம் செய்து ஏழேழு பிறவிகள் பிறந்து கொண்டே இருக்கின்றான் !
நான் பிறப்பது இதுவே முதல் முறை ! இனி பிறவா விதி பெற்று வந்தேன் ! ஆனால் உன் பிறவி எண்ணிமாளாது. உன் வினை தீவினையோடு கலந்து முப்பிறவி வினையோடு உன்னில் கலந்தது. பாவம், புண்ணியம் மிருகங்களுக்கு இல்லை. உனக்கு மட்டும் தான் என்பதை உணர் !
உன்னை அறிவாகவும், அழகாகவும் படைத்தான் என் அன்பினிற்கினிய தந்தை ! நான் படைத்தவன் பொற்தாமரை கரத்தை முத்தமிட்டு மகிழ்ந்தவன் ! நான் படைப்பு தொழிலை அறிந்தவன் ! படைத்தவன் பாசப் புதல்வனடா நான் ! வினை அறுக்கும் சூட்சுமம் தெரிந்தவன் ! எத்தனையோ கோடி ஜீவராசிகள் என்னுள் உறவாடுகிறது ! பிண்டத்தில் இருந்து வந்தவன் நீ தான் எனை வசைபாடுகிறாய்.
தப்பு தவறாகி, பின் பாவமாகி கர்ம செயலில் முடிகிறது. உன் வினை நல்வினையாக இருந்தால் சடுதியில் ஜென்மம் இல்லா வாழ்வை நோக்கி நகர்கிறாய். ஆதலால் எப்போதும் பாவம் செய்ய துணியாதே ! உன் துணிவு உழைப்பதில், உதவி செய்வதில் இருக்கட்டும். நீ இப்போது அனுபவிப்பது எல்லாம் ஊழ்வினை தான் ! இப்பிறவியில் துயரம் என்றால் முப்பிறவியில் செய்த பாவம் தான் ! உனை வாட்டி வதைப்பது உன் பாவம் தான்.
பூமியில் மிகப் பெரிய வரம் கடவுளின் பாதத்தை பற்றுவது தான் ! நிச்சய சத்தியமாக உன் பாவம் கரையும். ஆனந்த அதிர்வலை நீ உணர்ந்தாலே உண்டு ! எப்போதும் கடவுளை குற்றம் சொல்லாமல் காலத்தில் கரையேரப் பார் !
காட்சிகள் மாறும் ! காலங்கள் மாறும் ! நான் என்றும் மாறாதவன் ! நீ எப்போதும் மாறாமல் இரு ! யுகத்தில் மனித பூடகத்தில் என் தந்தையின் பாதமலரை ருசித்தவன் நான் ! அவர் பாச கரங்களில் அரவனைப்பாய் இருந்தவன். நான் பாக்கியசாலி தானே ? உச்சி முகர்ந்து என் நெற்றியின் விதியை படிக்க சொன்னவர் என் அப்பா ! என் தந்தை ஆனந்தமானவர் தானே ?
தந்தை சொல் மிக்க மந்திரமல்ல ! என் தந்தையின் சத்திய பாதையில் இருந்து ஒரு அணு கூட விலகியதில்லை ! நீ தான் தேனி கொட்டும் என்று தேன் எடுக்காமல் செல்கின்றாய். யாகவா என்றால் காற்று, நீர், நட்சத்திரம் ! அந்த கணிந்த முகம் என்னுள்ளே. அந்த காலத்தின் வேதன் நான் !
ஊழ்வினை அறுக்க கற்று கொடுத்தார் என் அன்பிற்கினிய தந்தை ! ஆதலால் உன் ஊழ்வினை அறுப்பேன் வேத சத்தியமாக !
இனி இங்கு பிறக்க ஆசைப்படாதே ! மரணத்தை பற்றி நினைக்காதே ! கடவுளின் கருணையைக் கேள் ! உன் ஊழ்வினை வேறருப்பேன் ! பாவம் செய்யாமல் இருக்க பழகு ! பார்வையில் தெளிவும், எண்ணத்தில் அழகும் கொண்டு வாழப் பழகு ! வாழ்வை ஆனந்தமாக்க ஆள்பவன் உன்னுள் வருவான் !
பயப்படாதே !
உனைக் காப்பவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment