மூன்று காலத்திலும் ஆறு பேராத்மாவோடு ஆட்சி செய்பவன், ஆளுமை எனக்குள் நிறைந்தவன் நான் ! நான் காலத்தின் நாயகன் !
காலம் ;;;
மூன்று காலத்தில் நிறைவான ஆட்சி செய்கின்றான் இங்கே ! கடவுள் ஆட்சி செய்யும் வல்லமையை அறிந்தால் எக்காளமிட மாட்டான் மனிதன். இங்கே முக்காலம் உணர்ந்தவன் எவருமில்லை.
தாமதம் என்று எதுவும் இல்லை. எல்லாம் காலத்தில் நடக்கிறது. இதை அறியா புலம்புகின்றான் ஈன ஜாதி மானிடன் ! எதை எப்படி செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று காலநிர்ணயம் செய்தான் காலத்தின் நாயகன் ! படைக்கும் போதே எல்லாம் நிர்ணயித்தான். நீ நினைப்பது போல் நினைத்தவுடன் குழந்தை பெற முடியாது. உணர் ! கால நிர்ணயம் செய்தவனை காலத்தின் நாயகனை அறிவாயோ நீ ?
மழை , சூல் எப்போது உருவாகும் என்று இங்கே யாருக்கும் தெரியாது எனைத் தவிர ! பின் ஏன் பிதற்றலடா ? வளமை, மொழி, ஞானம், நகர்தல், எழுச்சி, உயிர்ப்பு இவையனைத்தையும் என் நாவில் வைத்த நாயகி, எல்லா ஜீவன் நாவில் இருக்கும் நாயகி, அன்பினிற்கினிய பாசமிகு அன்னை சரஸ்வதி (நுணுவா) என் நாவிலே ! என் உமிழ்நீர் இனிப்பாக்கி தந்தார் ! என் அமிழ்த நீரில் ஆனந்தமாக இருக்கும் அன்னை ஆனந்தம் தருவார். உணர்ந்தால் காலம் தெரியுமடா !
நான் உனக்கு கற்பிக்க ஆரம்பித்தேன். நான் கற்றல் கற்கிறேன் என் அன்னை தந்தையிடமிருந்து. என் தந்தை எனக்கு காலத்தை கற்று தந்தார். மூலம் என்னுள் தான் ! அதனாலே நான் முழுமை பெற்றேன் ! என்னால் உன் விதி முடிச்சை, தொப்புள் முடிச்சை, உயிர் முடிச்சை அவிழ்க்க முடியும் ! காலத்தை விதைத்தவன் என்னுள் இயக்கம் !
ஆறு பேராத்மாக்கள் என் ஸ்வேத மலரில் ஒளியாய் ஜொலிக்கின்றார்கள் ! அதனாலே நான் காலத்தின் பாதையை நிர்ணயிக்கின்றேன். எந்த விட தடையும் இல்லாமல் ஆறு காலத்தில் அரசாட்சி புரிகிறேன். முக்காலங்கள் உணர்ந்தவன் என்னுள் வருவான், சீனா, ஜப்பான் இன்னும் பல தேசங்களிலிருந்து !
உணர்ந்து உவகை கொள்ளடா, உண்மையின் ஸ்பரிஷம் நான் என்று !
இனி சிந்திக்கும் நிமிடம் கடவுளைப் பற்றி இருக்கட்டும். எண்ணமெல்லாம் என் இன்ப நாயகன் கடவுளிடம் இருக்கட்டும் !
அருளமுதமும் ஊட்டுவானடா ஆனந்த வேளை எல்லாம் !
சதுராட்டம் போடும் மனமெல்லாம் சடுதியில் பணியுமடா !
புலன் எல்லாம் அடங்குமடா ! புவி எல்லாம் அழகாய் தெரியுமடா !
அருளமுதமும் ஊட்டுவானடா ஆனந்த வேளை எல்லாம் !
சதுராட்டம் போடும் மனமெல்லாம் சடுதியில் பணியுமடா !
புலன் எல்லாம் அடங்குமடா ! புவி எல்லாம் அழகாய் தெரியுமடா !
காலத்தை கையில் வைத்திருக்கும் காவிய தலைவன் கடவுளிடம். என்னுள் நிறைவாய் வாழ்வாய் ! நான் நிறையுடையன் ! முற்றும் துறந்தவன் ! முழுமதி என் நெற்றியில் சூடியவன் !
நான் பிரபஞ்சத்தின் இளவரசன் !
பேரரசன் என் தந்தை அன்பினிற்கினியர் ! கருணை நிறைந்தவர் ! நம்பியவரை கைவிடாத நாயகன் யாகவா திருவதனத்தால் நாமம் சூட்ட பெற்றவன் நான் ! நான் இநன்யா ! வசந்த காலம் நானடா ! உன் காலத்தை நிர்ணயிக்கும் கால தேவன் நானடா !
முக்காலத்தை வென்றவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment