to INANYA MAHA MUNIVAR
31-01-2018
""கிரகணம், கிரகம், நாள், நட்சத்திரம் எல்லாம் பொய் தான் !
நான் மெய் ! என் நாமம் மெய் !
பயம், பக்தி உன் துன்பத்தை நீக்குவதில்லை. இங்கே கடமை தான் பெரிது. என் நாமம் சொல் ! நாளும், கோளும் உன்னை எதுவும் செய்ய முடியாது.
படைத்தவை எல்லாம் அதனதன் கடமையை செய்ய நீ அதற்கு பயந்து ஏதேதோ பரிகாரம் செய்கிறாய். நீரில் அருகம்புல் போட்டு அருந்து. எந்த பரிகாரமும் தேவையில்லை.
நான் காப்பேன், பயப்படாதே !
காட்டில் உள்ள மக்கள், மிருகங்கள் சாஸ்திரம், கிரகணம் பார்ப்பதில்லை. நீ தான் பயந்து பாதை மறக்கின்றாய் . என் பாதை சத்தியம் ! நீயும் வா அழைத்து செல்கிறேன் சத்திய வழியில் !
உணர் உனக்கு ஞானமிருந்தால் ! ஓர்மையில் சொல்கிறேன் உன்னை கைவிடமாட்டேன் !""
No comments:
Post a Comment