வருவியில் உலக தத்துவம் உண்டு ! தாரகாகணத்தில் உன்னை அறியும் பக்குவம் உண்டு ! தத்துவம் உணராது சத்தியம் தவறி வாழ்கின்றாயே, ஏனடா ?
நன்மை !
உன் மனதில் தீமையான எண்ணங்கள் குறுக்கிடுகின்றன. அதனால் தான் உனக்கு துன்பம் என்று துவண்டு போகிறாய் ! மனம் அமைதி இல்லாமல் ஆர்பரிக்கின்றது. அது என்னவென்று ஆராய்ந்து களைந்துவிடு !
தீய எண்ணம் கொண்டவன் ஆணந்தமாக இருப்பதில்லை. எப்போதும் குழந்தை மனநிலையில் இaரு ! கடவுள் உன்னை எப்போதும் கண்கானிக்கின்றான். உன் பொறுப்பற்ற செயலை பார்த்து அவ்வப்போது தண்டிக்கின்றான். நீ உணராது இருப்பது ஏனோ ?
கடவுளுக்கும், உன் துன்பத்திற்கும் சம்பந்தமில்லை !
உன் அதிகாரத்தை உள் அடக்கி அன்பொழுக கேள் ! கடவுள் எல்லாம் உனக்காக படைத்தான் ! நீ அனுபவிக்க ஆணந்தமாக படைத்தான் ! படைக்கப்பட்டவை எல்லாம் உன்னை அறிவதற்காக ! ஆணந்தமாய் இருப்பதற்காக !
ஒரு புன்னகையால் இந்த பூமியை ஆளலாம். எப்போதும் மனதை ஆணந்த நிலையில் வைத்திருப்பவன் ஆர்பரிப்பதில்லை. அவன் ஆணந்தமாக வாழ்கின்றான். கடவுள் கையில் பொக்கிஷம் உண்டு ! அவன் திருகரங்கள் அன்பின் மிகுதி ! அவனுள் நிம்மதி ஆணந்தம் !
அவன் ஸ்பரிஷம் நீ கேள் ! இந்த துன்பம் ஏன் ? எதற்கு என்று கேள் ! உனக்கு விடை கொடுக்கும் உன் உள்வெலி மூலமாக !
சத்தியம் நிலையானது ! நானும் நிலையானவன் ! ஆண் குழந்தை பிறந்தால் ஆணந்தமென்றும், பெண் குழந்தை என்றால் துன்பம் என்றும் நினைத்து கடவுளை நிந்திக்கின்றான். உன் கர்மா, எண்ணம் தான் வாழ்க்கை ! எப்போதும் கடவுள் உனக்கு நன்மையே செய்வான் என்பதை புரிந்து கொள் !
நான் எனது என்ற கர்மா எண்ணத்தை கைவிடு ! எல்லாம் அவனுள் ஒப்படைத்து விடு ! உனக்கு எப்போதும் நன்மை தான் ! கடன் வாங்கி கஷ்டத்தில் மூழ்காதே ! ஆசையை குறை ! ஆள்பவன் உனக்கு அள்ளித் தருவான் ! நீ தான் செய்தாய் நீ தான் அனுபவிக்க வேண்டும் !
கடவுள் எப்போதும் மென்மையானவன், அவன் கடைக்கண் பார்வை உன் மேல் எப்போதும் ! உனக்கு தான் அவன் பார்வை பட வாழ தெரியவில்லை. இயல்பாய் வாழ் ! முயற்சி எப்போதும் செய் ! சோர்ந்து போகாதே ! நிச்சயம் உனக்கு அள்ளித் தருவேன்.
கடவுளை துணை கொள் ! உனக்கு வழி கிடைக்கும் !
படைத்ததில் தீமையானது என்பது ஏதுமில்லை. உன் தீய எண்ணம் தான் எல்லாம், தீமையாக தெரிகிறது. பொருள்களில் நன்மை தீமை உண்டு ! பிரித்து உணர்ந்து அருந்தும் மானிடா, ஏன் உன்னை அறிய முற்படவில்லை ?
மாதத்தில் ஒரு நாள் மனதில் உள்ள எல்லா கசடுகளையும் நீக்கி கடவுளோடு ஆணந்தமாக இருக்க பழகு ! ஆசை, கோபம், காமம் எல்லாம் விலக்கி பின் ஆணந்த நிலை அறிவாய் !
நன்மைக்குள் நன்மை நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment