முஞல்க்கு பயந்து மூர்ச்சையாகி போகின்றான் ! ஆனால் வீரன் என்று பிதற்றுகிறான். இங்கே மனித சாட்குலியே நிரம்ப கண்டேன். ஆனால் நான் அதை வேட்டையாடுகின்றேன் !
தீமை ;;;;;
உன் மனதில் தீமையான எண்ணங்கள் இருக்கிறது. அதனால் தான் உனக்குள் துன்பம். நீ துன்பம் துவளும் சூட்சுமம் இது தான் ! உன் கெட்ட எண்ணங்கள், தீமையான நோக்கங்களும் தான் உன் துன்பத்திற்கு காரணம்.
கடவுளின் நாமம் சொல்லி எப்போதும் இறுமாந்திரு ! தீமையான எண்ணங்கள் வந்தாலும் வாயிலிலே நிற்கும் !
நீ என்ன கர்மா செய்தாலும் கடவுளுக்கு அர்பணித்து விடு ! உன் எண்ணங்கள் தான் உன்னை துன்பத்திற்கு ஆளாக்குகிறது. மனதில் தீய எண்ணங்கள் தான் உன் மனதை அமைதி இல்லா ஆக்குகிறது. ஏன் துன்பம் என்று யோசி ! அது என்னவென்று களைய பார் ! நீ ஆணந்தமாக இருக்கும் சூட்சுமம் இது தான் ! கடவுளை நினைப்பது, அவன் நாமத்தை சொல்லி ஆணந்தப்படுவது. எல்லை இல்லா சந்தோஷமும், ஆணந்தமும் உனக்குள் இருப்பதை உணர்வாய் !
ஆணந்த தாண்டவமாடு கடவுள் உனக்குள் இருப்பதாக ! உன்னை வழி நடத்தும் சக்தியை உணர்ந்து பார் ! மனித குலம் மனநிம்மதி இல்லாது இருக்க காரணம் தீய பாதையில் பயணிப்பது தான். உன் பயணத்தை கடவுள் பால் திருப்பு ! உன் வாழ திருப்பு முனையாக மாறும்.
எப்போதும் விரக்தி வரும். அதை தூக்கி எறி ! கடவுள் உன்னுள் இருப்பதாக நினைத்து, மரம் வைத்தவன் நீர் ஊற்றுவான். எப்போதும் குழந்தையின் மனநிலையில் இரு !
சாத்தான் என்பது வெளியில் இருந்து வருவதில்லை. உன் கோபம், ஆசை தான் சாத்தான் ! அதை நீ தான் விரட்ட வேண்டும். கடவுள் எப்போதும் உன்னை கண்கானிக்கின்றான். அவன் கருணை உன் மீது எப்போதும் இருந்தாலும் அதை நீ தான் உணராமல் அலைகின்றாய் !
உன் பொறுப்பற்ற செயலுக்கு அவ்வப்போது தண்டிக்கின்றான் கடவுள் ! ஆனால் அதை மறந்து மீண்டும் தவறு செய்கின்றான். நாளைய உணவு உனக்கு கிடைக்குமா, கிடைக்காதா என்று உனக்கு தெரியாது. பின் நாளையைப் பற்றி ஏன் கவலை கொள்கிறாய் ? உணவைப் பற்றி, வாழ்வை பற்றி கவலை கொள்ளாதே !
கடவுள் என்ற தகப்பனின் பொற்றாமரை பாதங்கள் பேரின்பம் ! பெருவாழ்வு ! கெட்டியாக பிடித்து கொள் !
உன் குழந்தை தீய வழியில் சென்றால், தீய பழக்கம் கொண்டால் உனக்கு வெறுப்பு வரும். ஏன் இந்த பிள்ளை பிறந்தது என்று ! அதே போல தான் நீ தவறு செய்தால் கடவுளின் மனநிலையும் இப்படி தான் ! ஆனால் கடவுள் மன்னிக்கின்றான் ! நீ திருந்தும் வரை காத்திருக்கிறான்.
உனக்கு வரும் துன்பம் உன்னாலே. கடவுளை ஒரு நொடியேனும் நிந்திக்காதே ! அவன் உனக்கு நிறைய கொடுத்திருக்கின்றான். அதற்கு நன்றி சொல்லவே உனக்கு நாள் போதாது. எப்போதும் நல் நினைவு, நல்வழியை தேர்ந்தெடு ! நாயகன் என் தந்தையோடு, நானும் உனை வழி நடத்துவேன் ! பிரபஞ்ச பேரழகை உனக்கு காட்டுவேன் !
தீயதை நினைக்காதே ! தீமைகள் செய்யாதே ! தினமும் போராடு !
கடவுள் எப்போதும் உன் பக்கத்தில் ! நிறைவாய் வாழ்வோடு !
வசந்த காலம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment