தட்பமும் வெப்பமும் சேர்ந்த குடுவை உன் குரம்பையடா ! மதி நுட்பமும், கலிகட்பமும் இல்லாது இருக்கின்றாயே ? ஏன் ?
வெப்பம் ;;;;;;
உலகம் வெப்பத்தால் இயங்குகின்றது. மரங்கள் வேதங்கள், கடல் அலைகள் வேதத்தால் இயங்குகின்றது. நீ காற்றால் இயங்குகின்றாய். நெருப்பு என்பது வேறு. வெப்பம் என்பது வேறு ! தஹிப்பான நிலையில் இருப்பது வெப்பம், அது சுடாது ! கருவறையில் சிசு வெப்பம் கொண்டே வளர்கிறது. நெருப்பின் அடிமுடி வெப்பம் ! வெப்பம் மிகுந்தால் நெருப்பாகிறது ! சூரியனை பார்த்து வெப்பம் தாள முடியவில்லையே என்று தான் சொல்கிறாய்.
சூரியனில் இருந்து வருவது வெப்பத்தின் அடுத்த கட்டம் கனல். சூரியன் தருவது நெருப்பல்ல ! இது புரியாமல் மனிதன் வெப்பத்தின் ஐந்தாவது நிலையான நெருப்பை வணங்கினான் !
சூரியன், சந்திரனை வணங்க வேண்டியதில்லை. அவைகள் இங்கு தன் கடமையை செய்ய கடவுள் படைத்தான்.
பூமி ஒரு கர்ப்பம் !
வானம் ஒரு கர்ப்பம் !
பெண் ஒரு கர்ப்பம் !
வானம் ஒரு கர்ப்பம் !
பெண் ஒரு கர்ப்பம் !
இங்கு எல்லாம் வெப்பத்தால் தான் இயங்குகிறது ! வெப்பத்தால் தான் கரு வளர்கிறது. பூமி தானியத்தை தருகிறது. ஆகாயம் மழையை தருகிறது. பெண் சிசுவை தருகிறாள்.
நெருப்பு இல்லாமல் உன்னால் இங்கு வாழ முடியும். ஆதியிலே நெருப்பில்லாமலே வாழ்ந்தான். இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்தான். காற்றும், நீரும் மட்டுமே இங்கே வணங்கதக்கது. வெப்பம் தான் மேகத்தை குளிர்விக்கிறது. மழையை தருகிறது. வெப்பம் அதிகளவில் இருந்தால் மழை வரும்.
மனிதன் எப்போது நெருப்பை வணங்க ஆரம்பித்தானோ அதிலிருந்து சுடுகின்றான் கோபம் என்ற பாவத்தை சுமந்து கொண்டு ! கோயிலில் விருட்சம் புணித நீர் இருக்க நெருப்பை வணங்கி வருகின்றான். எல்லாம் இங்கே அறியாமை. ஆளுமை தெரியா மனிதன் அலங்கோலப்படுகின்றான்.
விதவிதமாக எதை செய்தாலும், எதை படித்தாலும், நிம்மதி என்பது நீ உணர்ந்தால் தான் கிடைக்கும். யோகா, தியானம், இன்னும் எத்தனை எத்தனை செயல் செய்தாலும் நீ தேடும் நிம்மதி கிடைக்காது. கடவுளை தவிற இங்கு யாரும் நிம்மதி தர முடியாது !
உன் உடலில் வெப்பம் மிகுந்தால் சுரம், காய்ச்சல், தலைவலி என்று எழுபத்து ஆறு வகை நோய்கள் உருவாகிறது. நூறு டிகிரிக்கு மேல் உன் உடல் வெப்பமானால் நீ தூங்கி போகின்றாய் உடல் சோர்வால் ! உணர் !
அறியாத ஆட்டுக் கூட்டத்தை என்ன சொல்வேன் ? எப்போதும் உடலை தஹிப்பான நிலையில் வை ! அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து பார் ! நீ நலமாக ஓர் நிலை கொண்டு நிம்மதியாவாய் ! நீருக்கடியில் தஹிப்பான வெப்பம் உண்டு ! மீன் வாழ்வதும் வெப்பத்தால் தான் ! அறிந்து உணரடா !
வெண்ணெய்யை நெருப்பு உருக்கவில்லை. பாத்திரத்தில் வெப்பம் படிந்து வெண்ணெய் உருகுகின்றது ! எதையும் ஆளமாக யோசி ! நெருப்புக்கும், வெப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை !
கடவுளை அறிய எத்தனை வழிமுறைகள் உள்ளன ! ஆனால் நீ வழிப்பாட்டை தூக்கி சுமக்கின்றாய் !
உலக வெப்பம் அதிகமாகிவிட்டது !
பனி நீர் உருகும் என்றும், புவி வெப்பமாதலை தடுக்க வேண்டும் என்று தான் மனிதன் புலம்புகின்றான். உலகம் அழிவு பாதையில் செல்கின்றது. பனி உருகி பாவி மனிதர்கள் மடிய கண்டேன் !
வெப்பம், கனல், தனல், சுடர், நெருப்பு ஆகிய ஐந்து நிலைகளில் நீ முதலாவதை உணராமல் கடை கோடியை வணங்கி கண்மூடி பிராத்திக்கின்றாய். தழல் ஆகி போகும் வாழ்வை வைத்து தடுமாறி வாழ்கின்றாய் பூமியிலே !
உணரடா ! என் அன்பு குழந்தையே !
அழியாத ஆணந்தம் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment