கூழ்ப்பு வேண்டாம் ! குறை என்னில் இல்லை ! கடவுளின் அன்புக்கு நிகர் எதுவுமில்லை ! நீ என் உம்பல் தானடா !
அன்பை கேள் !
கடவுளிடம் எதை கேட்க வேண்டும் ?
உண்ண உணவு, உடுக்க உடை, படுக்க இடம் கேட்காதே ! நாளைய தேவை, இன்றைய துன்பம் எதை பற்றியும் வினவாதே ! அந்த கருணைமிக்கவன் காலத்தின் நாயகனின் அளவில்லாத அன்பை மட்டுமே கேள். நீ ஆணந்தமாவாய் ! உன் உயிர் உன்னை ஆணந்த வாழ்வுக்கு அழைத்து செல்லும். உன் ஆண்மா அரசாள வைக்கும் !
இங்கே கடவுளிடம் எதை கேட்க வேண்டும் என்று தெளிவில்லா போனதாலே துன்பப்படுகின்றான் மனிதன் ! அற்ப விஷயத்தை கேட்டு மனிதன் அல்லல்படுகின்றான்.
அவன் பாதம் பேரின்பம் ! அவன் நாமம் தித்திக்கும் தேன் சுவை ! அன்பைக் கேள் கடவுளிடம் ! கிடைத்தால் வானம் பூமி உனக்கு வசப்படும் ! மகான்கள், ஞானிகள், சித்தர்கள், எப்போதும் துன்பம் கொடு என்று கடவுளிடம் கேட்பார்கள். அப்போது தான் கடவுளை மறவாது இருக்க முடியும் என்பதனால் !
துன்பம் இருப்பதால் தான் கடவுளை மனிதன் நினைத்து கொண்டிருக்கின்றான். துன்பத்தை இன்பமாக நினை என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள் ! துன்பம் வந்தால் இன்பம் உண்டு ! இன்பம் கடவுளின் பாதத்தில் மட்டுமே !
பெருமதிப்பில்லா அவனின் அன்பு மட்டுமே பேரின்பமான இன்பம் ! பருகி பாரடா அந்த ஆணந்தத்தை !
எப்போதும் கடவுளை நினைக்கும் மனம் கேள் ! கனவிலும் அவனை மறவாதிருக்க வரம் கேள் !
எப்போதும் சத்தியம் தான் நிலையானது !
சத்தியம் என்பது கடவுள் !
ஒழுக்கம் என்பது கடவுள் !
அவன் ஒழுக்கத்தில் நிறைவு பெருகின்றான். ஆதலால் ஒழுக்கத்தை விடா முயற்சியோடு நிறைவேற்று ! என்னை பெற யாரும் கேட்கவில்லை. தன்னில் நிலை இல்லா பொருளை கேட்டு மடிகின்றான். என் அன்பை யாரும் கேட்கவில்லை. பாவம் தான் நீ ! பரிதாபத்திற்குரியவன் நீ தான் !
சத்தியம் என்பது கடவுள் !
ஒழுக்கம் என்பது கடவுள் !
அவன் ஒழுக்கத்தில் நிறைவு பெருகின்றான். ஆதலால் ஒழுக்கத்தை விடா முயற்சியோடு நிறைவேற்று ! என்னை பெற யாரும் கேட்கவில்லை. தன்னில் நிலை இல்லா பொருளை கேட்டு மடிகின்றான். என் அன்பை யாரும் கேட்கவில்லை. பாவம் தான் நீ ! பரிதாபத்திற்குரியவன் நீ தான் !
மெய் பொருளை கண்டும், உண்டில்லை என்று பிதற்றுகின்றான் ஊன் ஊக்கமில்லா அலைந்து கடவுளை தேடாமல் !
உன் இன்பம் எனக்கு வேண்டாம், என் துன்பம் உனக்கு வேண்டாம் என்று என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். என் தந்தையின் அன்பு அளவிடற்கரியது !
உன் துன்பத்தை கடவுள் வாங்கி உனக்கு இன்பத்தை தருகின்றான் ! கடவுள் எவ்வளவு கருணைமிக்கவன் என்று பார்த்தாயா ? மதி கெட்ட மனிதன் கடவுளை இகழ்கின்றான். உன் பிறவி நீங்க நல் குருவை நாடு ! கடவுளின் பேரன்புக்கு பாத்திரமான அடியவரை நாடு !
நீ வந்த வாழ்வு, இழந்த வாழ்வு, மீண்டும் பிறப்பில்லா ஆழ்ந்த வாழ்வை அறிவாய். கடவுளை பேசுவதற்கும், நிந்திப்பதற்கும், ஏசுவதற்கும் கடுகளவு கூட அருகதை இல்லை மனிதனுக்கு !
தன்னை உணர்ந்த ஞானிகளே தன்னில் குறை கண்டார்கள் ! தலையால், முட்டியால் கடவுளை காண நடந்தார்கள் ! ஆனால் ஒன்றும் தெரியா மானுடன் பிதற்றுகிறான் கடவுள் பற்றி !
அன்பானவனிடம் அன்பை கேள் ! ஆளுமை உன்னுள் இருந்து சிரிக்கும் ! பின் பூரிப்பாய் வாழ்வில் !
அன்பானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment