Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Sunday, August 20, 2017

உன் குரம்பை சிணிதானடா ! சீ சீ மானிடா தேககோசத்தில் மயங்கி பிடையில் முடங்கி பாழாகி போனாயடா ? ஏனடா உனக்கு மதம் ? எதற்கடா மதம் ?

உன் குரம்பை சிணிதானடா ! சீ சீ மானிடா தேககோசத்தில் மயங்கி பிடையில் முடங்கி பாழாகி போனாயடா ? ஏனடா உனக்கு மதம் ?
எதற்கடா மதம் ?
மரத்தை வளர்த்தால் காய், கனி, விறகு தரும். உன் சந்ததியும் பலன் பெறும். நீ மதத்தை வளர்த்து ஏது கண்டாயடா ? உடைந்து போன துடிப்பில்லா தோணி போன்றது மதம்.
மதத்தால் நீ நினைத்த இலக்கை நிச்சயம் அடைய முடியாது !
மதத்தை வைத்து மனித மனதை மாற்றி மதி கெட்டு போனான் மானமில்லா ஈனமில்லா இழிசாதி மானிடன். இங்கே ஒழுக்கத்தை கடமையை தர்மத்தை சொல்லி கொடுக்கவில்லை. அழுது ஆர்பரிக்க கற்றுக் கொடுக்கிறான். உதவாத வழிபாடுகளை சொல்லி உரு இல்லா அலைகின்றான் ஈன சாதி மனிதன். எப்போது அறிவானடா ?
ஆயிரம் பேர் கூடி அழுதாலும், தொழுதாலும் கடவுள் உன்னில் நிலை பெறமாட்டான். உன் சொல் செவிமடுக்கமாட்டான். எப்போது பாவத்தை செய்யாமல் கடமையை செய்கின்றாயோ அப்போதே கடவுள் உனை நெருங்குவான் !
இங்கே உழைத்து கடமையை செய்பவனிடமே கடவுள் இருக்கின்றான் ! படைப்பில் எதற்கும் மதமில்லை ! ஜாதி இல்லை ! எல்லோரும் முடிவில் கருங்குழிக்கு தான் சொந்தம் என்பதை புரிந்து கொள் ! பிடி சாம்பலாக போகும் மானிடா, எதற்கடா மதம் ? ஏமாந்தது போதுமடா ! போதுமடா ! புரிந்து உணரடா ! போகும் வழி அறிந்து தெளியடா !
இந்த இநன்யாவுக்கு மதமில்லை ! ஜாதி இல்லை. என் சுட்டு விரல் உனக்காக காத்திருக்கின்றது. நிம்மதியான சத்தியமான பாதையில் உனை அழைத்து செல்கிறேனடா ! உன் துன்பத்தில் தோள் கொடுத்து நிற்பேனடா ! ஏனடா உனக்கு மனபயம் ?
வீறு கொண்டு எழுந்து நில்லடா ! வீதி எல்லாம் சொர்க்கமாக்க ! என் ஆணந்தம் நிம்மதி உனக்கு தான். என்னுள் நிறைபெறு ! எல்லாம் எடுத்து செல் ! ஊக்கமும் உறுதியும் கொண்டு ஆக்கம் (செல்வம்) பெற போராடு ! என்னையும் உன் துன்பத்தில் அழைத்து செல் !
நீ இன்பமாக வாழ நினை ! நான் துணை இருப்பேனடா ! என்னில் நிலைப்பாயடா ! எல்லாம் நிறைவாயடா !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். “ஒலியாகி, உயிராகி, விதையாகி, உனக்குள் நானாக பின்னொரு நாள் உன் உடல் மன்னாகி, உன் உயிர் என்னாகி ஏதுகண்டாய் நிம்மதி ?” என்று சொல்வார்கள்.
மதம் மாறினால் துன்பம் போகாது. மதம் மாறி மனம் மாறி துன்புறுகின்றாயே ? உன் ஆண்மா இன்புறுவது எப்போதடா ? என்று சாடை மொழி பேசி சாட்டை அடி கொடுத்தார்கள் என் தந்தை. ஏன் உணரவில்லை நீ ?
மதம் உனக்கு சொர்க்கத்தின் பாதையை காட்டாது. இனி மனிதன் கூடுகின்ற கூட்டத்தில் கடவுள் இடியாய் இறங்குவான். உலகில் அனைத்து மதவழிபாடுகள் நடக்கும் ஸ்தலங்கள் எல்லாம் மண்ணில் புதையுண்டு போகும் !
பாலைவனம் சோலைவனமாகும் ! இடுகாடு குடியிருப்பாகும் ! குடியிருப்பு இடுகாடாகும் ! மதக்கலவரங்கள் உலகமெல்லாம் வரும் ! மதம் அழியும் ! மனித நேயம் மலரும் ! இடியாய், மின்னலாய், பூகம்பமாய் இனி கடவுள் இறங்குவான். உணர் !
உன்னுள்ளே ஒன்பது வாயில்கள். இயற்கைக்கு ஐந்து வாயில்கள். அதில் ஏழு வாயில்கள் சூட்சும வாயில்கள். உன்னில் உள்ள ஏழு வாயில்கள் இயற்கையில் ஐந்து வாயில்களோடு ஒத்து போனால் தான் நிம்மதியோடு இருப்பாய். நோயில்லா இருப்பாய். ஞானதன்மையோடு இருப்பாய். இதைவிடுத்து மதவழிபாடால் மகத்துவம் உண்டென்று ஏதோ புலம்புகின்றான் !
உன்னில் உள்ள ஐந்து வாசல்கள்தான் கடவுளை நெருங்க வைக்கும். அதில் மூன்று வாயில்கள் தான் உன்னை அறிய வைக்கும் ! இதை முதலில் கண்டுபிடி !
இரை தேடும் மானிடா, இறையையும் தேடு ! கடவுளின் பாதத்தில் கலந்திடு ! அவனுள் உருகிடு ! அவன் பொருளே நீ ! அறிந்து உணர்ந்து ஆணந்தமாகிடு ! உன்னில் அனைத்தும் ஒடுங்கும் !
தாயின் மார்பில் புணிதம் அருந்தியவன் புரியாது வாழ்கின்றான்.
பூமியின் மார்பில் நீர் அருந்தியவன் நீசனாக அலைகின்றான்.
அழிவு ஒன்று தொடக்கமே ! முடிவு ஒன்று ஆரம்பமே !
மதம் வேண்டமடா ! மனிதநேயம் கற்றுக் கொடு ! காலம் உன் பாதத்தில் கவிபாடும். ஏழு வீடுகள், ஒன்பது வாசல்கள் உனக்குள் தானடா ! உணர்ந்து அறியடா ! மதத்தை வளர்க்கும் மதி கெட்ட மானிடா ! மரத்தை வளரடா ! மண்ணும் குளிரும், உன் மனமும் குளிருமடா !
சத்தியத்தின் வாசல் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment