உன் குரம்பை சிணிதானடா ! சீ சீ மானிடா தேககோசத்தில் மயங்கி பிடையில் முடங்கி பாழாகி போனாயடா ? ஏனடா உனக்கு மதம் ?
எதற்கடா மதம் ?
மரத்தை வளர்த்தால் காய், கனி, விறகு தரும். உன் சந்ததியும் பலன் பெறும். நீ மதத்தை வளர்த்து ஏது கண்டாயடா ? உடைந்து போன துடிப்பில்லா தோணி போன்றது மதம்.
மதத்தால் நீ நினைத்த இலக்கை நிச்சயம் அடைய முடியாது !
மதத்தை வைத்து மனித மனதை மாற்றி மதி கெட்டு போனான் மானமில்லா ஈனமில்லா இழிசாதி மானிடன். இங்கே ஒழுக்கத்தை கடமையை தர்மத்தை சொல்லி கொடுக்கவில்லை. அழுது ஆர்பரிக்க கற்றுக் கொடுக்கிறான். உதவாத வழிபாடுகளை சொல்லி உரு இல்லா அலைகின்றான் ஈன சாதி மனிதன். எப்போது அறிவானடா ?
ஆயிரம் பேர் கூடி அழுதாலும், தொழுதாலும் கடவுள் உன்னில் நிலை பெறமாட்டான். உன் சொல் செவிமடுக்கமாட்டான். எப்போது பாவத்தை செய்யாமல் கடமையை செய்கின்றாயோ அப்போதே கடவுள் உனை நெருங்குவான் !
இங்கே உழைத்து கடமையை செய்பவனிடமே கடவுள் இருக்கின்றான் ! படைப்பில் எதற்கும் மதமில்லை ! ஜாதி இல்லை ! எல்லோரும் முடிவில் கருங்குழிக்கு தான் சொந்தம் என்பதை புரிந்து கொள் ! பிடி சாம்பலாக போகும் மானிடா, எதற்கடா மதம் ? ஏமாந்தது போதுமடா ! போதுமடா ! புரிந்து உணரடா ! போகும் வழி அறிந்து தெளியடா !
இந்த இநன்யாவுக்கு மதமில்லை ! ஜாதி இல்லை. என் சுட்டு விரல் உனக்காக காத்திருக்கின்றது. நிம்மதியான சத்தியமான பாதையில் உனை அழைத்து செல்கிறேனடா ! உன் துன்பத்தில் தோள் கொடுத்து நிற்பேனடா ! ஏனடா உனக்கு மனபயம் ?
வீறு கொண்டு எழுந்து நில்லடா ! வீதி எல்லாம் சொர்க்கமாக்க ! என் ஆணந்தம் நிம்மதி உனக்கு தான். என்னுள் நிறைபெறு ! எல்லாம் எடுத்து செல் ! ஊக்கமும் உறுதியும் கொண்டு ஆக்கம் (செல்வம்) பெற போராடு ! என்னையும் உன் துன்பத்தில் அழைத்து செல் !
நீ இன்பமாக வாழ நினை ! நான் துணை இருப்பேனடா ! என்னில் நிலைப்பாயடா ! எல்லாம் நிறைவாயடா !
என் அன்பிற்கினிய தந்தை யாகவா சொல்வார்கள். “ஒலியாகி, உயிராகி, விதையாகி, உனக்குள் நானாக பின்னொரு நாள் உன் உடல் மன்னாகி, உன் உயிர் என்னாகி ஏதுகண்டாய் நிம்மதி ?” என்று சொல்வார்கள்.
மதம் மாறினால் துன்பம் போகாது. மதம் மாறி மனம் மாறி துன்புறுகின்றாயே ? உன் ஆண்மா இன்புறுவது எப்போதடா ? என்று சாடை மொழி பேசி சாட்டை அடி கொடுத்தார்கள் என் தந்தை. ஏன் உணரவில்லை நீ ?
மதம் உனக்கு சொர்க்கத்தின் பாதையை காட்டாது. இனி மனிதன் கூடுகின்ற கூட்டத்தில் கடவுள் இடியாய் இறங்குவான். உலகில் அனைத்து மதவழிபாடுகள் நடக்கும் ஸ்தலங்கள் எல்லாம் மண்ணில் புதையுண்டு போகும் !
பாலைவனம் சோலைவனமாகும் ! இடுகாடு குடியிருப்பாகும் ! குடியிருப்பு இடுகாடாகும் ! மதக்கலவரங்கள் உலகமெல்லாம் வரும் ! மதம் அழியும் ! மனித நேயம் மலரும் ! இடியாய், மின்னலாய், பூகம்பமாய் இனி கடவுள் இறங்குவான். உணர் !
உன்னுள்ளே ஒன்பது வாயில்கள். இயற்கைக்கு ஐந்து வாயில்கள். அதில் ஏழு வாயில்கள் சூட்சும வாயில்கள். உன்னில் உள்ள ஏழு வாயில்கள் இயற்கையில் ஐந்து வாயில்களோடு ஒத்து போனால் தான் நிம்மதியோடு இருப்பாய். நோயில்லா இருப்பாய். ஞானதன்மையோடு இருப்பாய். இதைவிடுத்து மதவழிபாடால் மகத்துவம் உண்டென்று ஏதோ புலம்புகின்றான் !
உன்னில் உள்ள ஐந்து வாசல்கள்தான் கடவுளை நெருங்க வைக்கும். அதில் மூன்று வாயில்கள் தான் உன்னை அறிய வைக்கும் ! இதை முதலில் கண்டுபிடி !
இரை தேடும் மானிடா, இறையையும் தேடு ! கடவுளின் பாதத்தில் கலந்திடு ! அவனுள் உருகிடு ! அவன் பொருளே நீ ! அறிந்து உணர்ந்து ஆணந்தமாகிடு ! உன்னில் அனைத்தும் ஒடுங்கும் !
தாயின் மார்பில் புணிதம் அருந்தியவன் புரியாது வாழ்கின்றான்.
பூமியின் மார்பில் நீர் அருந்தியவன் நீசனாக அலைகின்றான்.
பூமியின் மார்பில் நீர் அருந்தியவன் நீசனாக அலைகின்றான்.
அழிவு ஒன்று தொடக்கமே ! முடிவு ஒன்று ஆரம்பமே !
மதம் வேண்டமடா ! மனிதநேயம் கற்றுக் கொடு ! காலம் உன் பாதத்தில் கவிபாடும். ஏழு வீடுகள், ஒன்பது வாசல்கள் உனக்குள் தானடா ! உணர்ந்து அறியடா ! மதத்தை வளர்க்கும் மதி கெட்ட மானிடா ! மரத்தை வளரடா ! மண்ணும் குளிரும், உன் மனமும் குளிருமடா !
சத்தியத்தின் வாசல் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment