பதும பீடத்தில் பாணவன் நான் பவ்யமாக பரிசிக்கின்றேன். நீ பாண்டலாக போனாயடா ? என்னுள் கரைந்தால் எல்லா நாளும் பிடி நாள் தான் இங்கே ! ஏன் உணராமல் அலைகின்றாய் ?
மனம்
உன் மனம் தான் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிக்கின்றது. ஒன்றுமில்லாததை உருவகப்படுத்துகிறது. சொல்லவொனா துயரம் இருப்பதாக மாயமாலம் செய்கிறது.
மனம் என்று ஏதுமில்லை ! அது நீ செய்யும் கர்மாவும் பாவமும் தான் என்பதை புரிந்து கொள். அது பந்து போல சுருண்டு உனை ரணப்படுத்துகிறது. பயம் தான், பக்தி தான் உனை முக்தி பெற முடியாமல் தடுக்கின்றது.
உள்ளே ஆழ்ந்து உறங்கும் சத்தியத்தின் (ஆண்மா) சொல் கேள் ! உன் இலக்கு நிச்சயம் அடைவாய் ! நம்பிக்கை இல்லா மனிதரிடம் முயற்சி இருக்காது. முயற்சி இல்லையேல் இங்கே இகழ்ச்சியாக துயரப்படுவாய். வீண் சந்தேகம் உனை வீணாய் அலைய வைக்கின்றது.
எதையும் ஒரு முறை நம்பினால் (குருவோ, கடவுளோ) நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காதே ! உன்னை எந்த சந்தர்ப்பத்திலும் சந்தேக பிராணியாக வைக்காதே ! மேறுவைப் போல ஒன்றை பற்று ! குரோட்டத்தின் தந்திரம் இங்கே பலிக்காது. ஓஷதியில் உண்மை வைத்தேன் ! உணராது அலைகின்றான். ஔசதம் என்பதும் உண்மை சொரூபம் தான் ! வளர் கொம்பில் பெண் உண்டு. அதில் உயிர் குருத்து உள்ளே வைத்தேன்.
அறிந்து உன் ஆளுமை நிரம்பி ஞான தெளிவு பெறுவாய். புஷ்கரியில், பெண் கிழங்கில் பெருமை மிகு சூத்திரம் உண்டு ! உணரடா ! உண்மை இங்கிருக்க நீ எங்கெங்கோ தேடுகிறாய்.
எப்போதும் சொல்வேன். உன் எண்ண ஓட்டத்தை என் காலடியில் கட்டு ! வீண் சந்தேகப்படாதே ! அசைவற்று இரு ! தேரையை போல ! எந்த துன்பம் வந்தாலும் சிரித்து சீர்படு. சிக்கல் இல்லா வாழ்வு வாழ்வாய் ! எண்ணம் போல் வாழ்வு அமைய ஒழுக்கமாக இரு !
இங்கே மிண்ணுவதெல்லாம் பொன் அல்ல. பெண் தான் மின்னும் பொன் ! அவளை அறிந்தால் தான் நிறைவு வரும் ! சுகம் வரும் ! தோல்வி இல்லா வாழ்வு வரும் ! இப்போது மாறாச்செவி கொண்டு மாயமாலத்தில் சிக்கி தவிக்கின்றாய். செவியை இயற்கையிடம் கொடு. அதன் சப்தத்தை கேட்க ஆயத்தமாகு !
வேதம் கரை புரண்டு வருகிறது. ஆண்மத்தின் வேதம் ஐந்தும், ஞானம் நூற்றி பதினொன்றும், நிதான தத்துவம் நூற்றி பதினொன்றும் இருக்கின்றது. இது தெரியாமல் யோகா, தியானம் என்று முச்சை இழுத்து மூடனாக போகாதே ! கண் மூடி தியானிக்காதே ! எதற்கும் கட்டுப்பாட்டை விதி ! இந்த விதியின் நாயகன் உன் விதியை சரி செய்வேன். உன் மனம் போல எங்கும் போகாதே, எதையும் செய்யாதே !
உனக்கு கிடைக்க வேண்டியது நிச்சயம் கிடைக்க வைப்பேன். பெண்ணோ, மண்ணோ, பொன்னோ எல்லாம் ¼ நாழிகை இன்பம் தான். ஆனால் கடவுளின் அன்பில் திளைத்தால் ஆயுள் முழுவதும் இன்பமோ இன்பமடா !
இங்கே கடவுளின் அன்பு கிடைக்க யாரும் போராடவில்லை. எட்ட நின்று பயம், பக்தியோடு நிற்கின்றான். அன்பினால் கட்டிபோட யாருக்கும் தெரியவில்லை. ஆயுள் முழுவதும் ஆணந்தமாக வாழ யாருக்கும் தெளிவான அறிவில்லை. அறிவீலி நாடகம் நடத்தும் சாமியார்களை பின் தொடர்கிறான் மனிதன் !
படைத்த பொருளில் எதற்கும் மதமில்லை ! மதம் என்ற சாயம் வெளுக்க கண்டேன். கூடுகின்ற கூட்டத்தில் இனி கடவுள் இடியாய் இறங்குவான். பிணம் தாண்டி போக கண்டேன். மதகலவரங்கள் உருவாகக் கண்டேன்.
தன் மதத்தில் உள்ளவர்கள் தான் நல்லவர்கள், அவர்கள் தான் சொர்க்கத்திற்கு, பரலோகத்திற்கு செல்வார்கள் என்று புலம்புகின்றான், இங்கே மதம் என்று ஏதுமில்லை. கடவுள் எந்த மதமும் அல்ல. உப்பிற்கு மதமில்லை. இங்கே யார் தர்மம் செய்தாலும் சொர்க்கம் தான் பூமியிலே ! தர்மம் செய்து சத்ய வழியில் நடப்பவன், அந்த சாயலை உணர்வான் !
சமய சின்னங்களும், கோட்பாடுகளும், கொடிகளும், கொள்கைகளும் கடவுளை நெருங்குவதில்லை ! இங்கே ஒழுக்கம், உழைப்பு, அன்பு, தர்மம், பிறருக்கு சேவை செய்வதானாலே மட்டும் தான் கடவுளை நெருங்க முடியும் ! அவன் அன்பிற்கு பாத்திரமாக முடியும் !
பாவம் செய்து அழுது ஆர்பரித்தால் பாவ மன்னிப்பு கிடையாது. பாவத்திற்கு தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் !
இனி இந்த உலகில் ஓர் மதம் உருவாகும் ! ஆதியில் இருந்த மதம் உருவாகும் ! மதம் என்றால் தெளிவான பாதையை காட்டுதல் என்று பொருள் ! முற்று பெருதல் என்று பொருள் !
தன்னகரில்லா கருணைமிக்கவன் கடவுள் ! கடவுளின் பாதத்தில் அமர் ! அவன் அன்பை உணர பார் !
நான் எப்போதும் ஆணந்தமாக வாழ்கின்றேன். உனக்கும் ஆணந்த வாழ்வு தருவேன் ! மண்னிலிருந்து வந்தாய். மண் கூட மழை நீர் பட்டால் மணக்கிறது. நீ மணமில்லாது போனாய். மலரின் மணம் போல வாசம் வீசு ! மாயவன் நான் உன்னை மணக்க வைப்பேன். உன் மனதை மணமாக வை ! மண்ணில் நல்லவண்ணம் வாழ மகேசன் நான் எப்போதும் துணை இருப்பேன் !
என்னுள் மன்னுதல் ஆக யோசி ! மகேஷ்வர நிலை அடைவாய் ! மானத்தின் பெரிதாய் ஞாலத்தில் உனை வாழ வைப்பேன், ஞான குழந்தையாக !
மன்னர் மன்னன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment