பெறுக்கல் எண்ணிக்கையை பெருக்கி உன் விதியாக்கி வேதன் உனை படைத்தான். விதி தெறியா விளம்புகின்றாய். நான் ஏழாய் நின்றவன் ! உன் விதியை சதிராடுபவன் ! உன் வினையை வேறருக்க வந்தவன் ! நானே விதி !
விதி
எது விதி ? இங்கே தானியம், ஜீவராசிகள், மரம், எல்லாம் விதிக்கப்பட்டது ! நீயும் விதிக்கப்பட்டவன். உன் கர்மாவால் விதைக்கப்பட்டவன். நீ உனக்கென்று வேரொரு விதியை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் நீ மேலிருந்து பூமிக்கு விதிக்கப்பட்டு தான் வருகிறாய். இங்கே எதையும் உன்னால் மாற்றிவிட முடியாது, இந்த விதியின் நாயகனை தவிற !
ஒன்று மட்டும் யோசி. எல்லாம் கண்டுபிடித்தேன் என்கின்றாயே ? அதுவும் உனக்குள் விதிக்கப்பட்டது தான் ? விதிக்கபட்ட்தை வீதியில் தேடாதே ! அது உனக்குள் தான். நீ என்று ஏதுமில்லை இங்கு. நீ கடவுள் இயக்கும் தலையாட்டி பொம்மை ! உன் கடிவாளம் கடவுளின் கையில். எல்லாம் கடவுளின் பொருள்.
நீ எதை செய்தாலும் படைத்தவனிடம் படைத்து விடு. எல்லாம் இன்பமயமே ! பாதிரி, பாரி ஜாதம், புஷ்கரி தேவ மலர்கள் ! அவைகள் பூமியில் ஏன் படைக்கப்பட்டது என யோசித்துப் பார் ! அவரோகி பாலில் ஆளுமையை செய்யும் விதி உண்டு ! நீ உணராதிருப்பது ஏனோ ?
நீ எதை செய்தாலும் படைத்தவனிடம் படைத்து விடு. எல்லாம் இன்பமயமே ! பாதிரி, பாரி ஜாதம், புஷ்கரி தேவ மலர்கள் ! அவைகள் பூமியில் ஏன் படைக்கப்பட்டது என யோசித்துப் பார் ! அவரோகி பாலில் ஆளுமையை செய்யும் விதி உண்டு ! நீ உணராதிருப்பது ஏனோ ?
உன் பிறப்பும், இருப்பும், இறப்பும் விதிக்கபட்டது. எல்லாம் விதிக்கப்பட்டது. நீ யுகத்தில் இருந்து என்ன பலன் கண்டாய் ? சலிப்புற்று, வெறுப்புற்றே வாழ்கின்றாய். நீ நினைத்து ஏது முடியும் ? நாளையே இறக்க முடியுமா ? ஒன்றும் முடியாது. பின் ஏன் நான் என்று மார்தட்டுகிறாய் ? என்னால் முடியும் என்று ஏன் பிதற்றுகிறாய் ?
பூமியில் குரங்குக்கும், வெற்றிலைக்கும் கூட கை ரேகைகள் இருக்கின்றன. அது மனிதனிடம் சென்று எதிர்காலத்தை கேட்பதில்லை. கைரேகை பார்த்து என்ன பலன் கண்டாய் ? உன் தலை ரேகையை யாராலும் கணித்து சொல்ல முடிந்ததா ? இந்த ஆத்மத்தின் தலைவன் உன் தலை ரேகையை கணிப்பேன். வெற்றிலையில் ஆண், பெண், அலி என்ற பாகுபாட்டை படைத்த கருணைமிக்க பிரபஞ்ச நாயகன் என் தந்தை உயர்ந்தவன் ! அவன் அளவில்லாத ஆணந்தமானவன்.
நீ விதியோடு பூமியில் பிறந்தாய். ஆனால் நான் என் விதியை பூமியில் வந்து தான் நிர்ணயித்தேன். நான் நாளை செய்யும் கடமையை நேற்றே எழுதி வைத்தேன். நான் நினைத்தபடி வாழ்கிறேன். நான் எங்கேயும் (லோகம்) செல்வேன், வருவேன், நினைத்தால் எதையும் செய்வேன்.
நீ மனிதனை தேடி சென்று உன் விதியை கேட்கின்றாய். கடவுளின் பாதம் பற்று ! அவன் உன் விதியை மாற்றுவான் ! கருணைமிக்கவன் உன் கண்ணீரை துடைப்பான்.
மனிதன் தூங்கும் நேரத்தில் விதி மாறுகிறது. ஆதலால் தினமும் நல்லதே நினை ! நல்லதே செய் ! மனிதனை நம்பாதே ! கடவுளை நம்பு ! நீ உண்ணும் உணவில் ஒரு நாளைக்கு எத்தனை அரிசி என்று எழுதி வைத்தவனை மறக்காதே !
எல்லாம் விதிக்கப்பட்டது ஒரு துளி நீரில். ஒன்றிலிருந்து தான் ஒன்றை பெறுகிறாய். நீ தனியாக எதையும் விதிக்க முடியாது. புதிதாக ஒரு விதையை உன்னால் உருவாக்க முடியுமா ? ஒரு மரத்தில் பூ, பிஞ்சு, காய், கனி என எல்லாம் விதிக்கப்பட்டது. உன் பிறப்பு, இறப்பு, ஆயுள், கீர்த்தி, துன்பம் எல்லாம் விதிக்கப்பட்டது. நீ அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் உன் விதியை நீ செய்யும் தர்மத்தால் மாற்ற முடியும். ஒரு நல் குருவால் முடியும். மீண்டும் பிறவி இல்லாமல் இருப்பதற்கு முடியும். நீ நினைத்தால் பாவம் இல்லாது வாழ முடியும்.
பாவம் தொலை ! பரம் பொருள் புரியும் ! இப்படித் தான் வாழ வேண்டும் என்று உன் மனதை விதி கொண்டு விதை ! உன் வாழ்வு குறுகியது.
எறும்புக்கும் விதி வைத்தான். மரம், செடி, கொடி, புல், பூண்டு, பனித்துளிக்கும் விதி வைத்தான் !
விதியின் நாயகன் என்னுள் ! நான் விஷமக்காரன் அல்ல !
விதிக்கு முன்னால் சாக வேண்டும் என்று நினைக்காதே ! ஆர்பரித்து உன் உயிர் பூமியிலே அல்லபடும். அதனால் துன்பத்தை இன்பமாக நினை. என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல். சோதனை வந்தால் துவண்டு போகாதே !
கடவுள் உன் விதியை மாற்றுவான். என் நாமத்தை உன் நெஞ்சில் விதை ! உன் விதி மாறும் ! என் நாமத்தை விதைத்தவன் வீதியிலே புலம்பமாட்டான் ! அவனுக்கு போக போக சத்திய வழி தெரிந்துவிடும். உணர்ந்து பார். உண்மை புரியும் !
மனதில் விஷம் கலந்திருக்கின்றாய். எல்லா உயிரினமும் விஷம் சாப்பிட்டால் இறந்து விடும். ஆனால் பசு போற்றுதலுக்குரியது.
என் நாமம் சொல்ல சொல்ல உன் விஷம் கரைந்தோடும் ! நீ இங்கு வந்தது வாழ்வதற்கு அல்ல. பாவம் தொலைப்பதற்கு ! அதனாலே இந்த விதியின் நாயகனிடம் உன் விதியை கொடு. நான் நல்விதியாக மாற்றி உனக்கு மேதகு பட்டயம் எழுதி தருகிறேன். உன் தலை எழுத்தை மாற்றுவேன் !
என் நாமம் சொல்ல சொல்ல உன் விஷம் கரைந்தோடும் ! நீ இங்கு வந்தது வாழ்வதற்கு அல்ல. பாவம் தொலைப்பதற்கு ! அதனாலே இந்த விதியின் நாயகனிடம் உன் விதியை கொடு. நான் நல்விதியாக மாற்றி உனக்கு மேதகு பட்டயம் எழுதி தருகிறேன். உன் தலை எழுத்தை மாற்றுவேன் !
ஏனென்றால் விதியை மாற்றும் வேதத்தின் நாயகனின் பாச புதல்வன் நான் ! உன் விதியின் சூட்சும வான் மகன் நான் ! விதியை மாற்றும் வேத வித்தகன்- சக்ககன், சத்தியன் நான் !
நான் பிரமாயுதத்தின் நாயகன் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment