Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, November 16, 2016

பெறுக்கல் எண்ணிக்கையை பெருக்கி உன் விதியாக்கி வேதன் உனை படைத்தான். விதி தெறியா விளம்புகின்றாய். நான் ஏழாய் நின்றவன் ! உன் விதியை சதிராடுபவன் !


Inanya Maha Munivar
246) 17-11-2016
பெறுக்கல் எண்ணிக்கையை பெருக்கி உன் விதியாக்கி வேதன் உனை படைத்தான். விதி தெறியா விளம்புகின்றாய். நான் ஏழாய் நின்றவன் ! உன் விதியை சதிராடுபவன் ! உன் வினையை வேறருக்க வந்தவன் ! நானே விதி !
விதி
எது விதி ? இங்கே தானியம், ஜீவராசிகள், மரம், எல்லாம் விதிக்கப்பட்டது ! நீயும் விதிக்கப்பட்டவன். உன் கர்மாவால் விதைக்கப்பட்டவன். நீ உனக்கென்று வேரொரு விதியை நிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் நீ மேலிருந்து பூமிக்கு விதிக்கப்பட்டு தான் வருகிறாய். இங்கே எதையும் உன்னால் மாற்றிவிட முடியாது, இந்த விதியின் நாயகனை தவிற !
ஒன்று மட்டும் யோசி. எல்லாம் கண்டுபிடித்தேன் என்கின்றாயே ? அதுவும் உனக்குள் விதிக்கப்பட்டது தான் ? விதிக்கபட்ட்தை வீதியில் தேடாதே ! அது உனக்குள் தான். நீ என்று ஏதுமில்லை இங்கு. நீ கடவுள் இயக்கும் தலையாட்டி பொம்மை ! உன் கடிவாளம் கடவுளின் கையில். எல்லாம் கடவுளின் பொருள்.
நீ எதை செய்தாலும் படைத்தவனிடம் படைத்து விடு. எல்லாம் இன்பமயமே ! பாதிரி, பாரி ஜாதம், புஷ்கரி தேவ மலர்கள் ! அவைகள் பூமியில் ஏன் படைக்கப்பட்டது என யோசித்துப் பார் ! அவரோகி பாலில் ஆளுமையை செய்யும் விதி உண்டு ! நீ உணராதிருப்பது ஏனோ ?
உன் பிறப்பும், இருப்பும், இறப்பும் விதிக்கபட்டது. எல்லாம் விதிக்கப்பட்டது. நீ யுகத்தில் இருந்து என்ன பலன் கண்டாய் ? சலிப்புற்று, வெறுப்புற்றே வாழ்கின்றாய். நீ நினைத்து ஏது முடியும் ? நாளையே இறக்க முடியுமா ? ஒன்றும் முடியாது. பின் ஏன் நான் என்று மார்தட்டுகிறாய் ? என்னால் முடியும் என்று ஏன் பிதற்றுகிறாய் ?
பூமியில் குரங்குக்கும், வெற்றிலைக்கும் கூட கை ரேகைகள் இருக்கின்றன. அது மனிதனிடம் சென்று எதிர்காலத்தை கேட்பதில்லை. கைரேகை பார்த்து என்ன பலன் கண்டாய் ? உன் தலை ரேகையை யாராலும் கணித்து சொல்ல முடிந்ததா ? இந்த ஆத்மத்தின் தலைவன் உன் தலை ரேகையை கணிப்பேன். வெற்றிலையில் ஆண், பெண், அலி என்ற பாகுபாட்டை படைத்த கருணைமிக்க பிரபஞ்ச நாயகன் என் தந்தை உயர்ந்தவன் ! அவன் அளவில்லாத ஆணந்தமானவன்.
நீ விதியோடு பூமியில் பிறந்தாய். ஆனால் நான் என் விதியை பூமியில் வந்து தான் நிர்ணயித்தேன். நான் நாளை செய்யும் கடமையை நேற்றே எழுதி வைத்தேன். நான் நினைத்தபடி வாழ்கிறேன். நான் எங்கேயும் (லோகம்) செல்வேன், வருவேன், நினைத்தால் எதையும் செய்வேன்.
நீ மனிதனை தேடி சென்று உன் விதியை கேட்கின்றாய். கடவுளின் பாதம் பற்று ! அவன் உன் விதியை மாற்றுவான் ! கருணைமிக்கவன் உன் கண்ணீரை துடைப்பான்.
மனிதன் தூங்கும் நேரத்தில் விதி மாறுகிறது. ஆதலால் தினமும் நல்லதே நினை ! நல்லதே செய் ! மனிதனை நம்பாதே ! கடவுளை நம்பு ! நீ உண்ணும் உணவில் ஒரு நாளைக்கு எத்தனை அரிசி என்று எழுதி வைத்தவனை மறக்காதே !
எல்லாம் விதிக்கப்பட்டது ஒரு துளி நீரில். ஒன்றிலிருந்து தான் ஒன்றை பெறுகிறாய். நீ தனியாக எதையும் விதிக்க முடியாது. புதிதாக ஒரு விதையை உன்னால் உருவாக்க முடியுமா ? ஒரு மரத்தில் பூ, பிஞ்சு, காய், கனி என எல்லாம் விதிக்கப்பட்டது. உன் பிறப்பு, இறப்பு, ஆயுள், கீர்த்தி, துன்பம் எல்லாம் விதிக்கப்பட்டது. நீ அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் உன் விதியை நீ செய்யும் தர்மத்தால் மாற்ற முடியும். ஒரு நல் குருவால் முடியும். மீண்டும் பிறவி இல்லாமல் இருப்பதற்கு முடியும். நீ நினைத்தால் பாவம் இல்லாது வாழ முடியும்.
பாவம் தொலை ! பரம் பொருள் புரியும் ! இப்படித் தான் வாழ வேண்டும் என்று உன் மனதை விதி கொண்டு விதை ! உன் வாழ்வு குறுகியது.
எறும்புக்கும் விதி வைத்தான். மரம், செடி, கொடி, புல், பூண்டு, பனித்துளிக்கும் விதி வைத்தான் !
விதியின் நாயகன் என்னுள் ! நான் விஷமக்காரன் அல்ல !
விதிக்கு முன்னால் சாக வேண்டும் என்று நினைக்காதே ! ஆர்பரித்து உன் உயிர் பூமியிலே அல்லபடும். அதனால் துன்பத்தை இன்பமாக நினை. என்ன நேர்ந்தாலும் கடவுளுக்கு நன்றி சொல். சோதனை வந்தால் துவண்டு போகாதே !
கடவுள் உன் விதியை மாற்றுவான். என் நாமத்தை உன் நெஞ்சில் விதை ! உன் விதி மாறும் ! என் நாமத்தை விதைத்தவன் வீதியிலே புலம்பமாட்டான் ! அவனுக்கு போக போக சத்திய வழி தெரிந்துவிடும். உணர்ந்து பார். உண்மை புரியும் !
மனதில் விஷம் கலந்திருக்கின்றாய். எல்லா உயிரினமும் விஷம் சாப்பிட்டால் இறந்து விடும். ஆனால் பசு போற்றுதலுக்குரியது.
என் நாமம் சொல்ல சொல்ல உன் விஷம் கரைந்தோடும் ! நீ இங்கு வந்தது வாழ்வதற்கு அல்ல. பாவம் தொலைப்பதற்கு ! அதனாலே இந்த விதியின் நாயகனிடம் உன் விதியை கொடு. நான் நல்விதியாக மாற்றி உனக்கு மேதகு பட்டயம் எழுதி தருகிறேன். உன் தலை எழுத்தை மாற்றுவேன் !
ஏனென்றால் விதியை மாற்றும் வேதத்தின் நாயகனின் பாச புதல்வன் நான் ! உன் விதியின் சூட்சும வான் மகன் நான் ! விதியை மாற்றும் வேத வித்தகன்- சக்ககன், சத்தியன் நான் !
நான் பிரமாயுதத்தின் நாயகன் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment