முன்னால் வழியெல்லாம் வழியம்பலம் நிரம்ப கண்டேன். இந்நாள் வழியெல்லாம் மதுக்கடைகளை நான் கண்டேன். இது தானடா உன் விஞ்ஞான வளர்ச்சி !
எது வளர்ச்சி ?
அறிவை தொலைத்து ஆர்பரிப்பது உன் வளர்ச்சியா ?
பயிர் நிலத்தை அழித்து வான் நோக்கி கோபுரம் கட்டுவதா உன் வளர்ச்சி ?
வீட்டின் முன்னால் உள்ள திண்ணையை அழித்து பிறருக்கு தீங்கு விளைவிப்பதா உன் வளர்ச்சி ?
கட்டிய மனைவி இருக்க எங்கேயோ தேடி அலைந்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாட்டை மீறுவது வளர்ச்சி அல்ல.
முறுக்கை தின்று மூடனாகிப் போனான் மனிதன். எழுச்சி இல்லா வாழ்வில் சூரிய வெளிச்சமில்லா வாழ்வை கொண்டு வாழ்கின்றான். விஞ்ஞானத்தில் அணுகுண்டை தயாரித்து பிறரை அழிப்பது தான் வளர்ச்சி என்று பிதற்றுகின்றான்.
முன்னால் வீட்டிற்கு கதவுகள் இல்லாமல் வாழ்ந்தான். இப்போது காவல் வைத்து, கவலையில் ஆழ்ந்து, கண் உறக்கம் இல்லாது வாழ்கின்றான். முன்னால் உயிர் போகும் வழி தெரிந்து வாழ்ந்தான். மரணத்தை கணித்து வாழ்ந்தான். எல்லாம் அறிந்து வாழ்ந்தான். இப்போது அறிவை தொலைத்து ஆணந்தமில்லாது வாழ்கின்றான்.
கை, கால் மடக்கி யோகா, தியானம் என்று சோம்பி உழைப்பை மறந்து உட்கார்ந்து சுகம் காண துடிக்கின்றான். வீட்டில் நூறு கடமைகள் இருக்க, இவன் கடவுளை தேடி, நாடு விட்டு, கண்டம் விட்டு, மலை ஏறி, மகத்துவம் இல்லாது வாழ்கின்றான். இருக்கும் இடத்தில் எல்லாம் இருக்க எங்கெங்கோ தேடி அலைகின்றான்.
முதலில் தன்னம்பிக்கை கொள் ! பின் உன் உள்ளிருக்கும் ஆண்மாவை சந்தோஷப்படுத்து ! கடவுள் உன்னை தேடி வருவான் ! தன் கடமையை செய்யாமல் கடவுளை தேடிக் கொண்டிருக்கின்றான். இந்த அற்ப மனிதனின் அறியாமையை என்ன சொல்வேன் ?
உன் அறிவியலும் ஆன்மீகம் தான் என்பதை மறவாதே ! ஆதிகாலத்தில் இருந்த அறிவியல் கோடான கோடி மடங்கு பெரியது ! முன்னால் ஆக்கத்திற்கு பயன்படுத்தினான். இப்போது நான் என்ற கர்வத்தில் அழிவிற்கு பயன்படுத்துகின்றான்.
சகதண்டமாருதம் உக உண்டமாருதம் உண்று தின்று உணராதிருப்பது ஏனோ ? சகத்தை சகதண்டம் என்று புலம்புகின்றாயே, உன் முதுகும், பாதமும் தட்டை வடிவாய் கொண்டாயே ? ஏனடா உணரவில்லை ?
வளர்ச்சி முதிர்ச்சியாகி மூச்சற்று கல்லறையில் அடங்கினாய். எது வளர்ச்சி என்று புரியாமல் இறக்கின்றாய். ஊன் வளர்த்தாய், உடல் வளர்த்தாய், உன் உயிர் வளர்த்தாயா ? ஊன் உடம்பை தேய வைத்தேன். திகைப்பார் யாருமில்லை. மதியை தேய்த்து வளர வைத்தேன். மதிகெட்ட மனிதன் மட்டும் மலராமல் இருந்தான். நொடிக்கு நொடி உடல் தேய்கிறது. இந்த அற்ப மனிதன் பிறந்த நாள் கொண்டாடுகிறான் ! உணரடா !
மரம் வளர்ச்சி ! மலர்ச்சி ! நீ உடல் வளர்த்தாய். பின் தேய்ச்சி, காய்ச்சி பஷ்பமாக கண்டேன். நகமும், நீள் முடியும் உருந்து முளைத்ததடா ! உன் ஊன் உடம்பு ஏன் முளைக்காமல் போனதடா ! ஆடும் ஆட்டமெல்லாம் ஆறடி குழிக்குள் அடக்கமாவதை மறந்து போனாயே ?
மரம் வளர்ந்து பிறருக்கு உதவ கண்டேன். நீ வளர்ந்து எதற்கடா உதவினாய் ? நீ வளர் ! உதவி செய்து உண்மை பேசி ஒழுக்கத்தில் நிறைவு பெறு ! நான் உன்னை உன் வாழ்வை வளர்ச்சியாக்கி மலர்ச்சியாக்குகிறேன். மரணம் இல்லா பெறு வாழ்வை கொடுத்து பேரழகாக்குகிறேன். சத்தியமாக !
நான் வளர்ந்தேன் ! மலர்ச்சியானேன் ! என் வளர்ச்சி சத்திய தர்மமடா ! நான் வளர்ச்சியாகி அகண்டமாய் விரிந்து கொண்டிருக்கின்றேன். ஆர்பரிக்கும் வெள்ளம் போல முதலில் ஓடி வருகிறாய். என் கையில் இருக்கும் தேன் (பொக்கிஷம்) கிடைக்கவில்லை என்று உடனே ஓடிவிடுகிறாய். தேனை லாவகமாக எடுத்தாலும் தேனீ கொட்டத்தான் செய்யும். எதுவும் இங்கு எளிதாக கிடைப்பதில்லை என்பதை புரிந்து கொள் !
எனக்குள் காத்திருப்பவன், தனது இலக்கையும், செல்வத்தையும் அடையாமல் இருக்க மாட்டான். பொறுமையோடு இருந்தால் பொக்கிஷம் கிடைக்கும் என்பது புரிந்தவனுக்கு தெரியும் ! என்னுள் கரைந்து, உன் கர்மம் பாவம் தொலைத்து, உணர்ந்து கிடைத்தால் சுகமோ சுகமானதடா !
2017 ஆம் ஆண்டு முதல் பகற் கொள்ளை பெருகும். பெண்கள் மானபங்கப்படுவர். மழைக்கு பருவகாலம் இருக்காது. பஞ்ச காலம் தலைவிரித்தாடும். என்ன செய்யப் போகின்றாய் ? வல்லரசு நாடுகள் எல்லாம் சொல்ல வொனா துயரத்தில் தவிக்கும் ! தென்னாடு வளர்ச்சியாகும் ! வட நாடுகள் வீழ்ச்சியாகும் ! எல்லா நாடுகளிலும் கடல் நீர் உட்புகுந்து தத்தளிக்கும். இனி வரும் காலங்களில் உலக மக்கள் தன் மதத்தை மறந்து, கடவுளை தேடி கதறி அழக் கண்டேன். தர்மாக்கள் என் வலது பரிஷத்தில் ஆணந்தமாக திளைக்க கண்டேன். சொலியில் கூட சுகம் ஒன்று கண்டேன். ஆனால் உன் தோளில் புழு மொய்க்க கண்டேன். உணரடா !
வளர்ச்சி தெரியா வாழ்வில், நீ எழுச்சி பெறுவது எப்போதடா ?
வளர்மதியில் எழுச்சி நானடா !
நான் இநன்யா !
No comments:
Post a Comment