243 என்னுள் மன்னுதல் ஆக யோசி ! உன் உயிர் ஆணந்த கூச்சலாடும் ! மேகவாயில் அள்ளி மறைந்திருக்க கடவுள் இல்லை என்று பிதற்றலாகுமோ ? தன்னை வெறுப்பவன் கடவுளை வெறுப்பான். உணர்ந்தால் துன்பமில்லை ! நீ உணராதிருப்பது ஏனோ ?
எல்லாம் ஒன்றில் ஒன்றியது
மூலம் ஒன்று தான் !
மூன்றாம் பிரிதலின் தத்துவம் கருநீர், புன்னீர், பிண்டம் மூன்றும் ஒன்றாய் நிலை பெறும் தத்துவம் தான்.
தன்னை வெறுப்பவன் கடவுளை வெறுப்பான். தான் கேட்டது உடனே கிடைக்கவில்லையே என்பவன் தான் கடவுள் இல்லை என்று பிதற்றுவான். ஒரு துளி காற்று தானே உன்னை இயக்குகின்றது ? இது ஒன்று போதுமே நீ உணர !
உடல் வேறு, பணி வேறு, வேலை வேறு, மும் மூன்றும் மூன்றாய் இருந்தாலும் உள்ளே ஸ்வேதம் ஒன்று தான் ! ஒன்று தான் அனைத்தையும் இயக்குகிறது ! ஆறாய் பிரிந்து ஏழில் நின்றதும் அது தான் ! உன் தலையில் இருக்கும் ஒன்று தான் ஆறாய் பிரிந்து ஏழாவதாக இருக்கும் இருதயத்தை இயக்குகின்றது !
சிரவன் என்ற முருகன் ஆறு தலையோடு பிறந்தான் என்கின்றான். நீ யுகத்தில் பத்து தலை, ஆறு தலையோடு எங்காவது குழந்தை பிறந்ததை பார்த்தாயா ? எல்லாம் அறியாமை இங்கு ! தலையில் உள்ள ஆறு சூட்சும நரம்பை அறிந்ததால் முருகன் கடவுள் என்று போற்றப்பட்டான். ஆறு நரம்பை இராவணன் இசைத்தான். தன்னை கடவுளுக்கு மேலாய் கருதினான்.
நீயும் ஆறு நரம்பை இசைக்க கற்றுக் கொள். ஆண்மாவை அறிவாய் ! உன் உயிர் ஆள்வதற்கு கற்றுக் கொள்ளும் !
ஒன்று மூன்றாய், மூன்றுக்குள் மூன்று ஆறாய், ஏழாய் நின்றது. ஆணந்த தூறல் ஆர்பரிக்கும் வெள்ளமாய் மாறி ஒன்று சேர்ந்து எல்லா நீரும் பூமியை நனைத்து கடலில் சென்று கலக்கும் தத்துவம் தான் இது ! முடிவில் ஒன்று தான் !
மழை நீர் கடலில் கலக்க பதினாறு நாள் கரையில் காத்திருக்கின்றது. இந்த மனிதன் தான் கடவுளை கலந்து, அறிய காத்திருப்பதில்லை !
எத்தனையோ யுக யுகமாய் ஞானிகளும், சித்தர்களும், ரிஷிகளும், முனிவர்களும் அவன் பாத கமலத்தை பார்க்க காத்திருக்கின்றார்கள். ஆனால் இந்த மனிதன் தான் ஒரே நாளில் விதை போட்டு ஒரே நாளில் கனியை எதிர்பார்க்கின்றான்.
சத்தியமடா ! என் நாமம் உனக்கு எல்லாம் தரும் ! ஆனால் நீ கண்டதை வணங்காமல் கண்டதையும் வணங்கி இன்பம் தொலைக்கின்றாய். எதுவும் வேண்டாம் என்று நினைத்தால் ஞான தெளிவு வரும். ஆனால் நீ எதுவும் வேண்டாம் என்று நினைப்பது மரணத்தின் வாசலில் நிற்கும் போது தான். நீ வேண்டாம் என்று நினைப்பதற்குள் மரணம் வந்து விடுகிறது. பின் எப்படி உணர்வாய் ?
அசைவற்று இரு !
ஆழ்ந்து நினை ! ஆர்பரிக்கும் மனதை நான் அடக்கி உனை அறிய வைப்பேன் ! தெளிந்த நீரில் அலை இல்லாத இடத்திலே ஆழம் அதிகம் உண்டு. உள்ளே ஆளுமையும் நிறைய உண்டு. நீயும் அசைவற்று இரு ! உன்னில் ஆழமாய் புதைந்திருக்கும் ஞானம் வந்தடையும். இந்த இநன்யா நீ உண்ணும் வரை விடப்போவதில்லை !
நான் உன்னை உணர வைப்பேன் ! நீ உணரும் வரை உணர்ச்சியூட்டி கொண்டே இருப்பேன் !
பிறந்து மறைவது வாழ்க்கை அல்ல. மீண்டும் பிறவாதிருப்பதே பிறப்பின் நோக்கம். ஆழ் கடலில் (ஆண்மா) உனக்கு முத்தெடுக்க சொல்லி தருகிறேன். அந்த பேராணந்தத்தை பருக சொல்லி தருகிறேன். நான் போகும் வழி சத்திய வழி !
உன்னை நல்வழிப்படுத்தும் என் நாமம் இந்த சம்சார பந்தத்திலிருந்து உன்னை விடுவிக்கும் ! ஆணந்த நிலையை அள்ளி தரும் !
கூர்மமும், மச்சமும் கோயிலில் ஆக்கிரமிக்க வைத்தான். ஏன் என்று யோசி !
எண்ணத்தாலே தன் முட்டையை பொரிக்கும் தத்துவம். உள்ளார்ந்து யோசி. கடவுள் நிலை வந்து விடும் ! கடவுள் நிலை என்றால் பேராத்மாவை உணர்வது ! படைத்ததை ஆராய்ச்சி செய்கின்றாய். என்னை ஆராய்ச்சி செய்து பார் ! இகலோக பதவி தருவேன். சத்தியம் நானடா, சசிகரம் சத்திகமும் நானடா !
ஐங்கரன் எனை மறந்து நீ கைங்கரனாக போனாயே ? என் நாமம் சொல் ! நீ என்னுள் மன்னுதல் ஆவாய் !
கூவிளம் அறிந்தாய். குறை போக்கும் அருமருந்து என்று பிதற்றினாய். உண்பது போல் உணர்ந்தாயோ நீ ? மாய மலர்களில் ஐந்து இதழ்கள் மட்டுமே இருக்கும். அதற்கும் உன் ஐவிரலுக்கும் சூட்சுமம் இருக்கின்றது. உன் ஐவிரல்களால் அந்த மலரை தொடும் போது ஐந்து இதழ்களும் தங்கமாய் மாறும ! ஏனடா உணரவில்லை நீ ?
கையாளத் தெரியாதவன் கண் மூடி தியானிக்கின்றான். நாறும் உடலை ஆரணங்கு, பேரணங்கு என்றான். ஆத்மாவின் நித்ய போகம் ஆரணங்கு என்பதை மறந்தான். யாக பிரஸ்தத்தின் உபராசன் இந்த இநன்யா என்பதை மறந்தான்.
ஆறும் உள்ளடக்கி ஒன்றாய் இருக்கின்றேன். எல்லாம் எனக்குள் ஒன்றியது தான். எட்டும் வெட்டனெ மற. உனக்கு எட்டா தத்துவம் அறிய வைப்பேன். எல்லாம் ஒன்றாய் ஒன்றியது ! ஓர்மையின் உவமை உச்சத்தில் நின்றது. உணரடா !
உண்மையில் நன்மை நானடா !
உன்னில் ஒன்றானவன் நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment