242 ஏகாரவல்லியில் ஸ்வேத சாயல் உண்டு ! முக்கனி என்றாய் மூலத்தை மறந்து தளுகனாக திரிகின்றாய், தயாநிதியின் பாச படைப்பை மறந்து. ஏனடா ?
நான் நல்லதே செய்வேன் !
நீ எதற்கும் தலைவன் அல்ல. உன் உயிர் தான் உனக்கு தலைவன் ! இறந்தால் பிணம் என்று சொல்லக் கண்டேன்.
புண்ணீர் அறியாது, செந்நீர் உணராது திரை மறை காயாக வாழ்கின்றாய். என் பாதை பரியவம் என்பதை புரிந்து கொள் !
என்னை அறிந்தவன் வாழ்வான் ! நோயில்லா பெரு வாழ்வு கொண்டு ஆணந்த நிலையில் பூமியில் ஆள்வான் ! மரணத்தை வெல்வான் ! ஏனென்றால் இநன்யா உன் விதி. வினை அறுக்கும் சூட்சுமம். மேழி கிருட்டிகன் இனி மேன்மையடைவான். பொச்சரிப்பில் புன்னகை மறந்தாய். பூவாய் உன்னுள் மலர்ந்திருக்கும் ஸ்வேதமும் தான் மறந்தாய். எல்லாம் மறந்து எங்கே போகின்றோம் என்று தெரியாமல் பயணித்து கொண்டிருக்கின்றாய்.
என் பலம் சொல்லிமாளாது. ஆனால் எனக்கு பலவீனம் என்று ஒன்று உள்ளது. அது தான் என் அன்பு. என் பேரன்பை எல்லோருக்கும் கொடுப்பதால் நான் மதிக்கபடுகின்றேன். நீயும் அன்பாய் இரு ! தேவர்களால் மதிக்கப்படுவாய் ! இந்த ராஜராஜன் இநன்யா உன்னை எப்போதும் காப்பேன் !
நான் எப்போதும் பூமித் தாயின் மடியிலே நித்திரை கொள்கின்றேன் ! நீ பூமித்தாயின் தொடர்பை விட்டாய். எப்போதும் மிதியடி அணிந்து துன்பத்தில் மூர்ச்சையாகி போனாய் ! வாரம் ஒரு நாளாவது மிதியடி இல்லாமல் நடக்க பழகு. உன் பித்தம் தெளிவாகும் ! பதற்றம், பயம் போகும் ! உன் உள்ளொலி உனை உற்று நோக்கும் !
மரத்தை நோக்கி நீ கல் எறிந்தால் உனக்கு கனி தரும். அதே போல கடவுளை நீ நிந்தித்தாலும் உனக்கு நல்லதே செய்வார் ! கடவுள் கருணைமிக்கவன் என்பதை உணர். துன்பங்கள் யார் கொடுத்தாலும் நன்மை செய்ய நினை. கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொள்வான் !
இனி புது புது வியாதிகள் தோன்றும் ! மருத்துவ உலகம் ஸ்தம்பிக்கும். என்ன செய்ய போகிறாய் நீ ? கர்மா , பாவம் பெருகியதே காரணம் ! உன் சரீரம் பக்குவப்பட்டால் நற்குணம், நற்பண்பு, நல் அன்பு உருவாகும் ! வெந்தபானை தான் இங்கே நிறைவு தரும் !
நான்காம் துண்டமதியில் எக்காரியமும் செய்யக் கூடாது என்பார்கள் சித்தர்கள். ஆனால் ஞான பெண்களுக்கு மாத மாதம் வரும் கருவு புன்னீர் வந்து நான்காம் நாள் கண்டிப்பாக சேர வேண்டிய சூசகம் சொன்னான் சித்தர்கள் ! நீ உணராது இருப்பது ஏனோ ?
இன்பமும், நிறைவும் இருவருக்கும் உண்டு என்ற சூட்சுமத்தை நீ உணராது இருப்பது ஏனோ ? நீ படும் பாட்டுக்கும், துன்பத்திற்கும் நான் காரணம் அல்ல ! உன் வினை தான் ! உன் பாவம் தான் ! ஆனால் நீ விதியின் மேல் பாரத்தை போட்டு தப்பிக்க நினைக்கின்றாய்.
கடவுள் சோதிப்பதில்லை. அவன் எப்போது சோதிப்பான் ? நீ தீமையை செய்ய நினைக்கும் போது, உன் முன்னால் வந்து உனக்கு சுட்டி காட்டுவதற்கு சோதனை தருவான். கடவுள் அன்பானவன், கருணைமிக்கவன் !
எப்போதும் நல்ல எண்ணங்களை உருவாக்கு ! மனதில் குப்பையை கொண்டு கொட்டாதே ! ஊருக்கு உபதேசம் செய்து நீ தீமையை செய்யாதே ! உன் ஒரு விரல் பிறரை நோக்கினால் மற்ற நான்கு விரல்கள் உன்னை நோக்குகின்றன. இங்கு மிக கடினமான காரியம் என்று எதுவுமில்லை. நீ நினைத்தால் எதுவும் நடக்கும் ! நீ வேண்டுமென்றால் வர வைப்பதும், வேண்டாமென்றால் ஒதுக்கி வைப்பதும் உன்னால் மட்டும் தான் !
நீ நல்ல செயல் செய்தால் கடவுள் உன்னை பார்த்து சிரிக்கின்றான். தீமையை செய்தால் வெறுக்கின்றான். மிருகங்கள், பறவைகள் பிறருக்கான உரிமையை தட்டி பறிப்பதில்லை. பாதையை அடைப்பதில்லை. அவைகள் நல்லதே செய்கின்றன.
நன்மை, தீமை எல்லாம் உனக்கு தெரியும். பிறரின் மேல் பழி போடாதே ! நீ செய்யும் செயலை லோக காண்ட முனிவர்கள் கண்கானிக்கின்றார்கள் என்பதனை மறந்துவிடாதே ! யுகத்தில் எல்லா இடத்திலும் கண்கள் உண்டு ! தீமையை செய்து யாரும் தப்பிக்க முடியாது. தண்டனை அனுபவத்தே ஆக வேண்டும். ஆதலால் நன்மையை நினை !
நல்லதே நினை ! நல்லதே நடக்கும் ! நான் உனக்கு நல்லதே செய்வேன் எப்போதும் ! நன்மையை நாளெல்லாம் தரும் என் நாமம் !
நாயகன் என் ஒளி எப்போதும் உன்னை சுற்றி !
புன்னகையாய் இரு ! இந்த புனிதன் அருள் உண்டு !
நன்மையில் வெண்மை நான் !
நான் இநன்யா !
No comments:
Post a Comment