245) 11-11-2016
பொன்னாளான இன்று தான் (11 நவம்பர்) , பிரபஞ்சத்தின் இளவரசர், ராஜராஜன் இநன்யா மஹா முனிவர் அவர்களுக்கு பிரபஞ்சத்தில் செங்கோல் வழங்கப்பட்டது.செங்கோல் வழங்கப்பட்ட நாள் 11-11-93 !111 கோடி முனிவர்கள், 111 கோடி ஒற்றர்களை இநன்யா அவர்களுக்கு துணையாக யுகத்திற்கு அனுப்பி வைத்தார்கள். இதில் ஒரு முனிவரால் 111 கோடி முனிவர்களாக உருவெடுக்க முடியும். உலக உருமாறப் போகின்ற இந்த காலத்தில் வானில் பல அதிசயங்கள் நடக்கும் என்று கடவுள் சொல்லியுள்ளார். ஒற்றர்கள் பல கோள்களில் வந்து வேவு பார்ப்பார்கள். பல நட்சத்திரங்களும், கோள்களும் நகர்ந்து செல்லும்.11.11.93 இல் யாகவா அவர்களின் தலைமையில் இநன்யா மஹா முனிவருக்கு பிரபஞ்சத்தில் மணிமகுடம் சூட்டப்பட்டது.இனி யுக காலத்தை 48000 கோடி ஆண்டுகள் இநன்யா மஹா முனிவர் ஆள்வார்.காலம் பதில் சொல்லும் விரைவில் சத்யமாக ! காத்திருப்போம் ! அனைத்து ரகசியங்களும் விரைவில் வெளிவரும்.(யாகவா அவர்கள் எழுதிய ஒரு நூலில் இருந்து எடுத்து இணைக்கப்பட்ட புகைப்படம்)கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் !இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
14-11-2016 அனைவருக்கும் வணக்கம்,ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்களின் இன்றைய செய்தி." துர்த பௌர்ணமி “வழக்கத்திற்கு மாறாக காணப்படும் இயற்கை மாற்றங்கள் இயற்கையின் எச்சரிக்கை. இன்று பூமிக்கு மிக அருகில் வரவிருக்கும் சந்திரன் ஒரு மிகப் பெரிய இயற்கை பேரழிவிற்கான அறிகுறி. வரும் காலங்களில் நீரால் மிகப் பெரிய அழிவுகள் காத்திருக்கின்றன. வரும் காலங்களில் தானியத் தேடல் மிகுதியாக இருக்கும். இனி உலக நாடுகள் அனைத்தும் தானியப் பற்றாகுறையால் தத்தளிக்கும். உலக மக்கள் அனைவரும் கடவுளை தேடும் காலம் வந்துவிட்டது. தர்மாக்களை காக்கவே நான் யுகம் வந்தேன் ! காலம் பதில் சொல்லும் வரையில் காத்திரு ! """""கடவுளின் நாமத்தையும், வேதத்தையும் சொல்லி, இன்று இரவு பால் பாயாசம் செய்து அதில் உலர் திராட்சை கலந்து, பணங்கற்கண்டு அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தனிப்பட்ட குடும்ப சிக்கல்கள் தீரும். மனக் குழப்பங்கள் நீங்கும்.கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள்.இநன்யா நமோ நம
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
16-11-2016 உலக மக்கள் அனைவருக்கும் வணக்கம்,நாளை (17-11-16), எழுபத்து இரண்டு வருடத்திற்கு ஒரு முறை வரும் அபூர்வமான நாள். பாவங்களை கரைக்கும் புணித நாள் ! ஏழாம் கடவுள் இநன்யா மஹா முனிவர் அவர்கள் உரைத்த வழிமுறைகளை பின்பற்றுவோம். இனி பாவங்கள் செய்யாமல், உணர்ந்து துன்பங்களின்றி வாழ்வோம்.கடவுளின் செய்தி:’’’’விதியும், மதியும், வேத வித்தகன் நானடா ! சதிபதி வாழ்வில் விதி வழி போகின்றவன் நீயடா ! உன் தொப்புள் கொடி பாவம் கரைய, வரும் வியாழக்கிழமை உன் பெற்றோரை தாம்பூலத்தில் கால்களை வைத்து நீரால் கழுவு. நீ செய்த பாவம் கரையும். ஒரு வேளை மட்டும் உணவருந்து ! பச்சை அரிசி சாதம் மட்டும் சாப்பிட வேண்டும்.என் நாமம் சொல்லி இந்த வேத வார்த்தையை 27 தடவை சொல் ! ”பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா !” பின் அமிழ்த சமித்து (நாயுறுவி சமித்து) கிடைத்தால் அதை நீரில் ஊற வைத்து (ஏழு விதை) சாப்பிடு ! கிடைக்காதவர்கள் பாதாம் கொட்டை (ஏழு விதை) ஊற வைத்து சாப்பிடு. உனக்கு தானியம் தனவாய் கிடைக்கும் சத்தியமாக ! தாய் தந்தை இல்லாதவர்கள் மற்றும் அவர்களுடன் இல்லாதவர்கள், அவர்களை நினைத்து, மேலே கடவுள் கூறிய வழிமுறைகளை பின்பற்றவும். வியாழக்கிழமை காலை முதல், இரவு 11 மணி வரையும் இதை செய்யலாம்.வேத வரிகளுக்கான விளக்கம்: பல்ய - பல நோக்கு பாவங்கள், நாசினி - பாவங்களை அகற்றி, மீண்டும் பாவம் செய்யாத மனநிலை, உகந்த - ஆண்மா சம்பந்தப்பட்ட,
சாந்தினி – அமைதி, சுகந்தம் - விவரிக்க முடியாத ஆத்ம சுகம்,
துதி துதியந்தம் துதியந்தஹா - பாவம் முழுவதுமாக கரைந்தால் தேவர்கள் நம்மை போற்றி வணங்குவார்கள். கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் !
இநன்யா நமோ நம................
No comments:
Post a Comment