Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Wednesday, October 26, 2016

துண்ட மதி பார்த்தவன் உண்ட மதி மறந்தான் ! ராக்கதிரில் நாயகன் நான் இருப்பதை ஏன் மறந்தாய் ? ஏனடா ? ஏதுரைப்பேன் நானடா?


Inanya Maha Munivar
27-10-2016
241 துண்ட மதி பார்த்தவன் உண்ட மதி மறந்தான் ! ராக்கதிரில் நாயகன் நான் இருப்பதை ஏன் மறந்தாய் ? ஏனடா ? ஏதுரைப்பேன் நானடா?
மரணம் மலர்ச்சி தான் !
நான் மரணமானவன் ! நான் பிறப்பற்றவன் ! எப்போதும் உன் நெஞ்சில் இருப்புற்றவன் !
நான் இனி பிறப்பதுமில்லை ! இறப்பதுமில்லை ! காலச் சக்கரம் என் சத்தியத்தின் வலக்கரத்திலே ! மூன்றாம் துண்டமதியில் மவ்வம் கொண்டு திரிகின்றேன். முத்தொழிலின் சக்கரவத்தியின் முக எழிலில் வாழ்கின்றேன். எனக்கு என்றும் மரணமில்லை !
என் ஆண்மா விசாலமானது. பிரபஞ்சத்தின் எல்லை வரை பெரியது. உனக்கு பலம் தரும் பவ்யமாக ! ஆனந்தம் தரும் ! அமிழ்தம் ஊட்டி ஆண்மையை ஆளுமை செய்யும். என் பேராத்மா உன்னை பெரு மகிழ்ச்சி அடைய வைக்கும் ! என் நாமம், உனக்கு மரணத்தை வெல்லும் சக்தியை தரும் ! மீண்டும் பிறவியில்லா வாழ்வை தரும் !
இருப்பவன் யாரும் பிறக்க நினைக்கமாட்டான். ஆனால் அவன் கர்மா இந்த யுக சிறைச்சாலைக்கு தள்ளுகிறது. அறியா புரியா வாழ்கின்றான். ஆணந்தம் தெரியா திகைக்கின்றான். நான் எப்போதும் ஆணந்த நிலையிலே இருக்கின்றேன். இன்பம், துன்பம் எனக்கில்லை. என் நாமம் நம்பிக்கை கொண்டு சொல் ! இன்பமாக வாழ வழிகாட்டும். என் நாமம் சொல்ல சொல்ல பூமியில் உனக்கொரு மரணம் தரும். மரணத்தின் மலர்ச்சியாக உன்னை அறிவாய் ! ஆணந்தமாக மேல் லோகம் வருவாய் !
என் சத்திய லோகத்தில் உன்னை என் வலபக்கம் வைத்து அழகு பார்ப்பேன், ஆணந்த கூச்சலோடு ! ஆத்ம பசியை போக்க என் நாமம் சொல் ! உன் உயிர் பசியை நான் தீர்ப்பேன். ராக்கதிரில் நாளெல்லாம் சுரக்கும் அமிழ்த சாயல் உண்டு. அந்த அமிழ்தம் உனக்கு கிடைக்க வைப்பேன் !
உன் உயிர் ஆணந்தமாக இருக்க தொண்டு செய் ! தர்மம் செய் ! நான் உனக்கு எப்போதும் உதவியாக இருப்பேன் ! அகண்டமாய் விரிந்த இந்த ஆளுமை உள்ளவனை அறிவாய் ! அறிந்தால் நீ இறுமாந்து இருப்பாய் ! உன்னை படைத்தவனாலே உன் மூளையை சரி செய்ய முடியும். படைத்தவனிடம் சரணகதி அடை ! படைத்தவன் தான் உன்னை, உன் உயிரை சரி செய்ய முடியும். அவனிடம் ஒப்படைத்துவிடு.
படைத்தவன் என் நெஞ்சில் தான் ! எல்லாம் சரியாகி இமைப்பொழுதில் மாற வைப்பேன், காலங்களை வரையறத்தவன் மரத்திற்கும் மரணம் வைத்தான். பெருங்காற்றுக்கும், புயலுக்கும் இயற்கை சீற்றங்களை எதிர் கொண்டு உனக்கு நிழல் தருகிறது. கனி தருகிறது. இலை உதிர்ந்து வசந்த காலத்தில் வசந்தமாய் விரிகிறது. ஏன் உணரவில்லை நீ ?
படைத்தவன் பக்குவமாக பாசமாக உனக்கு தந்தான். நீ அனுபவிக்க தெறியாமல் ஆழந்த துயரத்தில் வாழ்கின்றாய். இங்கே மூலதனம் தேவை இல்லை. உன் மூளையை படைத்த கடவுளை துணை கொள் !
இந்த காலத்தின் நாயகன் இநன்யா உனக்கு துணை இருந்து வேண்டிய வரம் தருவேன். உயர்வதற்கு முதலில் தன்னம்பிக்கை தேவை. பின் வீரம், தைரியம் இருந்தால் எல்லா செல்வமும் உன் காலடியிலே ! உனக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை உண்டு ! கல்வி செருக்கு உண்டு. அதனாலே உன்னால் கர்வ பட முடியவில்லை. நீ கர்வபட முதலில் பணிவு கொள் ! பாசம் கொள் ! அன்பு கொள் ! பக்குவம் நான் தருவேன்.
பிறப்பவன் யாவரும் மரணத்தை பற்றி யோசிக்கிறான், மரணம் மலர்ச்சி என்பதை அறியாமல் !
இங்கே குருவை மரணம் என்று வேதம் சொல்கிறது. ஆதலால் நல் குருவைத் தேடு ! உனக்கு மரணமில்லா பெரு வாழ்வை சொல்லித் தருவார். குரு இல்லா வித்தை பாழ் !
மரணத்தை ஜெயிப்பது எளிது தான். என்னுள் கரைந்திடு. உனக்கு என்றுமே மரணமில்லை. பிறப்பது இறப்பதற்கு தான். இருப்பதற்கு அல்ல. பின் ஏன் பயப்படுகின்றாய் ? துணிந்து உன் கடமையை செய். உன் இலக்கை அடைய போராடு. நீ வந்த நோக்கம் நிறைவேற பாடுபடு. உனக்கென்று ஒரு கடமை இருக்கின்றது இங்கே !
கடியறை கூடி கல்லறையில் மூடினாய். உன் அறை மறந்தாய். என் அறை மறந்தாய். எங்கே போகிறாய் ? ஆர்த்தியத்தில் உமியல் தடவி ஐவனத்தில் ஆகமலசார் தடவி புழுபழத்தில் அள்ளி உருக்கி சாப்பிடடா ! ஊழை சமமாகி உன் உடல் உயிர் பெறும். கிரந்தத்தை சீர்பட வைக்கும்.
சீராளன் என்னை நோக்கடா ! உன்னை சீராட்டி பாராட்டி உணர வைப்பேனடா ! உணர்ந்தால் இங்கே நோயில்லா பெரு வாழ்வு தான் ! உன் உயிர்க்கு மரணமில்லா மலர்ந்த சாயல் தான் !
மரணத்தை வென்றவன் நான் !
நான் இநன்யா !

No comments:

Post a Comment